Tuesday, November 6, 2012

எது உன் குறிக்கோள் பகுதி 2


              குறிக்கோளும் முடிவெடுத்தலும் பகுதி  2

 மனித வாழ்க்கையில் வளர்ச்சி என்பது ஒவ்வொரு மனிதனும் தன்னால் இதைச் செய்து முடிக்க வேண்டுமென்று நம்புவது நம்பிக்கையை செயல்படுத்தி திட்டமிடுவதும் அதை நிறை வேற்ற முயற்சி செய்யும்போது தடைகளைக் கண்டு தளர்ந்து விடாமல், விடா முயற்சியுடன் அந்தக் காரியத்தைச் சாதிக்கும் திசை நோக்கி முன்னேருவதும்தான் நம்பிக்கை ஆகும். 
     மனிதன் தான் மீதும் தன்னுடைய செயல் மீதும் நம்பிக்கை வைக்கதிருந்ததால் அவனால் எதுவும் செய்து முடிக்க இயலாது. ‘முயற்சி திருவினை ஆக்கும், முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ எனும் வாசகங்களில் எல்லாம் தன்னம்பிக்கையில் இருந்து தோன்றியவையாகும். ‘முயன்றால் முடியாதது எதுவும் இல்லை’ என்ற அழுத்தமான சிந்தனைதான் தன்னம்பிக்கையின் அடித்தளமாகும். 
     நம்பிக்கை எனும் வலைப்பின்னல் சூழவே மனிதன் வாழ்ந்து விடுகிறான். 
     பெற்ற தாய் மீதும், கல்வி கற்பிக்கும் அசிரியர் மீதும் நண்பர்கள் மீதும் நம்மை சுற்றியுள்ளவர் மீதும் தம்மால் முடியாதஇயற்கையின் மீதும் நம்பிக்கை வைக்கும் நாம், தொடர்ந்து வாழ் நாள் எல்லாம் பலவிதமான நம்பிக்கை மீது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே,ஒருவர் தான் மீதும் நம்பிக்கை வைப்பதும் அதை வளர்ப்பதும் முடியாத ஒன்இல்ல. 
     தன்னம்பிக்கை என்பது ஒரு மனநிலை. இதனை எந்த வயதிலும் வளர்த்துக்கொள்ள முடியும். இது பெரியவர்களிடமும் இளைஞர்களிடமும் ஏன் குழந்தைக்களிடமும் காணப்படுகிறது. ஆம், தன்னம்பிக்கை மனோபாவம்  குழந்தைப்பருவத்திலேயே தோன்றி விடுகிறது. 
     ஒரு பசு மாடு கன்றை ஈன்றவுடன், பிறந்த கன்றுக்குட்டி தட்டி தடுமாறி எழுந்து நின்று நடக்கத்தொடங்குகிறது. முட்டயில் இருந்து வெளி வந்த கோளிக்குங்சு, பிறந்தவுடன் நடக்கிறது. 
     ஆனால், 
     மனிதன் மட்டும் பிறந்தவுடன் எழுந்து நடப்பதில்லை. குழந்தைப்பருவத்தில் நடப்பது எப்படி என்று கற்றுக்கொள்கிறான். உட்காரவும்,தவழ்ந்து செல்ல கற்றுக்கொண்ட குழந்தை எழுந்து நிற்க முயற்சி செய்கிறது. பல முறை எழுந்தும் விழுந்தும் பின்னர் உறுதியாக நிக்கவும் கருக்கொள்கிறது. 
     அந்தக்குழந்தை தனது முதலாவது காலடியை எடுத்து வைக்கும் போதே, விழுந்து விடுவோம் என்ற பய உணர்வை மீறித்தான் அடி எடுத்து வைக்கிறது. அடுத்த அடி எடுத்து வைக்கும்படி ஊக்கம் கொடுப்பவர் தாய். தான் குழந்தையை ஓரடி, ஈரடியாகக் காலடி எடுத்து வைக்கச்சொல்லி அக் குழந்தையின் மனதில் ‘உன்னால் நடக்க முடியும்’ என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்துபவர் தாய்! குழந்தையின் ஒவ்வரு வளர்ச்சி பருவத்திலும் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது, தாய் ஊட்டி வளர்க்கும் தன்னம்பிக்கையே!
    இத்தகைய தன்னம்பிக்கை ஊட்டம் பெறாத குழந்தைகளின் வளர்ச்சியில் கால தாமதமும் முன்னேறுவதில் சிறு தடுமாற்றமும் இருக்கும். இதனை, அக் குழந்தை நடை பயிலுவதிலும், பேசப்பழகுவதிலும் நாக்கு காண முடியும். 
    ஒரு குழந்தை சிறு வயதிலிருந்தே ஒரு கோழையாக வளர்வதற்கும் பெற்றோர் காரணமாகி விடுக்கின்றார்கள். இந்தக் கோழைத்தனம் தன்னம்பிக்கைக்கு தடையாக முன் நிற்கும். 
    குழந்தைப்பருவத்தில் தாயின் அரவணைப்பில் கட்டுண்டு கிடந்த குழந்தை, பள்ளிக்குச் சென்றவுடன் அதன் தன்னம்பிக்கையை வளர்ப்பார்கள் ஆசியியர்கள். பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் எடுத்து கூறுகின்ற நம்பிக்கை ஒளி மிகுந்த சொற்கள், மாவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதில்முக்கிய பங்காற்றுகின்றனர். மாணவப்பருவத்தில் மாணவர்கள் படிக்கும் பல நூல்கள், மாமனிதர்களின் வரலாறுகள், அவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. பள்ளியில் தங்கள் அறிவாற்றல் திறனை அறிந்தும் வளர்த்தும் தன்னம்பிக்கை பெறுவது போலவே, மாணவர்கள் தங்கள் பலத்தை தாங்களே உணர்ந்து கொள்ளச் செயும்படியான செயல்கள் மூலமாகவும் அவர்களது தன்னம்பிக்கை வளர்க்கப்படுகிறது.  
     விளையாட்டு ஆசிரியர் தரும் மாணவர்களின் விளையாட்டுத்திறனை வளர்க்கிறது. ஓவிய ஆசிரியர் தரும் பயிற்சி அவர்களது கலைத்திறனை வளர்க்கிறது. இலக்கிய ஆசிரியரின் தன்னம்பிக்கை ஊட்டம் பெற்ற மாணவர்கள் பிற் காலத்தில் எழுத்தாளர்களாக, பீச்சலனாக சிறந்து விளங்க முடியும். 
     மாணவர்களிடம் காணப்படும் உடல் திறன், அறிவுத்திறன் ஆகியவற்றை உணரச்செய்து, அவர்கள் எதிர்காலத்தில் பல்வேறு துறைக்களில் திறமை சளிகளை விளங்குவதற்கு பள்ளி பருவத்தில் தன்னம்பிக்கை டானிக்குகள் தருபவர்கள் ஆசிரியர்களே!
     ஆசிரியர்கள் எவ்வளவுதான் தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்த போதிலும், அந்த தன்னம்பிக்கையை அசைத்துப் பார்க்கிற அளவுக்கு வலித்தன பிரச்சனைகள், மாணவப்பருவம் கடந்த பிற காலத்தில், சொந்த வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும்  ஏற்படும் போது, மழையில் கரையும் மண்மலை போல  அப்படியே சரிந்து போகிறார்கள் இளம் தலை முறையினர்! 
     வேலையின்மை,வறுமை, குடும்பச்சூழல் எனப் பல சூல்நிலைக்களில் துவண்டு போகும் இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை தேவை படுக்கிறது. மனம் தளர்ந்து, சலிப்பு மிகுந்து, கடைசியில் விரக்தியடைந்து தற்கொலை பாதையை தேடும் இளையர்களும் இருக்கிறார்கள்.  இத்தகைய இளைஞர்கள் சொந்த வாழ்க்கையிலும், சமூக வல்ல்க்கயிலும் செயலூக்கக்கமாக பங்கு பெற அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டம் அவசியம். இச் சமயத்தில், அவர்கள் தங்களுடைய சிறந்த நண்பர்களிடமிருந்தும், அவர்களின் மரியாதையை  பெற்ற மூத்தவர்களிடமிருந்தும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்கிறார்கள். 
          ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்,
          வாசல் தோறும் வேதனை இருக்கும்,
          வந்த துன்பம் எதுவென்றாலும், 
         வாடி நின்றால் ஓடுவதில்லை’
    என்று கவியரசன் கண்ணதாசன் சுட்டிக்கட்டுவார். வாழ்க்கையை எவ்வாறு எதிர் கொள்வது என்பதை கற்று தருவதில் இலக்கியம் சிறந்த பங்காற்றுக்கின்றது. 
 ‘வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்! 
 ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்! வாழத்தேரியமலேயே       கொளைத்தனமகவே  
வாலிபத்தை விட்டு விடக்கூடாது!’
        என்று வலியுறுத்தும் கவிஞர் அ. மருதகாசி, ‘உள்ளத்தில் உரம் வீனுமடா’ என்று அழுத்தம் திருத்தமாக கூறுகின்றார்.
                    எண்ணெய் தீர்ந்து அணையப்போகும் அகல்விழக்கென எல்லா நம்பிக்கைகளும் வறண்டு போய் தற்கொலை பாதையைத் தேர்ந்து எடுத்துக்கொண்ட ஒருவரை, அந்த தற்கொலை எண்ணத்தை கைவிட்டு, நம்பிக்கையோடும்,செயல் துடிப்போடும் வாழ்க்கையை எதிர்கொள்ளச்செய்ய ஒரு புதினத்துக்கு ஆற்றல் உண்டா? 
        உண்டு! 
       என்னால் அடையாளம் காட்டமுடியும்! நச்சுக்கோப்பையை ஒரு கையிலும் அந்த நாவலை மறு கையிலும் எடுத்துக்கொள்ளட்டும்!
      இதக்கதையை படித்து முடித்ததும் ‘தாராளமாய் செத்துப்போ’ என்று சொல்லிவிட்டு கம்பீரமாய் தன்னம்பிக்கையோடு காத்திருங்கள்!
     அந்தப் புதினத்தை படித்து முடித்ததும் விஷக்கோப்பையை தூக்கி எறிந்துவிட்டு, ஒளிமயமான எதிர்காலத்தை தேடும் ஆன்ம பலம் கொண்ட மானிடனாய் அவன் மாறி விடுவான்!
     ‘சாவுக்கே சவால்’ என்பது அந்த நாவலின் பெயர். இந்த நாவலை எழுதியவருக்கு இரண்டு கைகளும் இல்லை. பரர்களை பேனாவால் பிடித்து இந்த நாவலை எழுதிஉள்ளார். கால்விரலால் பேனாவைப்பிடித்து எழுதுவதை விட கடினமானது, உதடுகளில் பேனாவை பற்றி எழுதுவது! உலகில் எண்ணற்ற மொழிகளில் அச் செறிய அந்த நாவலைப் படித்தவர் ஒரு நாளும் அந்த நாவலை மறந்திட முடியாது. 
     ‘நீங்கள் பலவீனமானவர் என்று எண்ணிக்கொண்டு இருந்தால் நீங்கள் பலமர்ரவர்களாகவே ஆகிவிடுவீர்கள். நீங்கள் பலம் பொருந்தியவர் என்று எண்ணினால், பலமுடையவர்களாக ஆகிவிடுவீர்கள்’ என்று கூறும் விவேகனந்தர், உனது பலம் உனக்குள்ளே என்று தன்னம்பிக்கை ஊட்டுகிறார். 
     ஒருவன் தன பலத்தை தானே உணர்ந்து கொள்ளாது இருந்தால் அவன் பலவீனமனவனாகவவே இருப்பான். தன்னம்பிக்கை உள்ளவன்தான் தன பலத்தை உணர்ந்து இருப்பன்.
     தன்னம்பிக்கை என்பது ஒரு பொருள் அல்ல. அது ஒரு கருத்துதான். ஆனால் அந்தக்கருத்து ஒருவர் மனதைப்பற்றிக்கொண்டதுடன்அதற்கு பொருள் வகை சக்தி வந்துவிடுகிறது. இந்த சக்திதான் தடைகளைத்தாண்டி ஒருவர்க்கு வெற்றிபாதை நோக்கி நடை போடவைக்கிறது. ஒருவர்க்கு மன வலிமை ஊட்டுவதும் இதே நம்பிக்கைதான். ஒருவர் தன வால்க்கசில் ‘எடுத்த காரியம் யாவினும் வெற்றி,வெற்றி’ என எக்க்கலாமிடத்தன்னம்பிக்கை தேவை! 
     வாழ்க்கை என்பது நீர் தேங்கிக்கிடக்கும் குளம். குட்டையாக இல்லாமல் தெளிந்த நீரோட்டமாய் இருக்க தன்னம்பிக்கை தேவை!
     கணம்தோன்றி கணம் மறையும் புழுக்களின் வாழ்க்கையாக மனித வாழ்க்கை இருந்து விடக்கூடாது. அதில் சாதனைகள் நிறைந்திருக்க வேண்டும். அப்படி சாதனைகள் நிறைந்த வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை தேவை!இந்த தன்னம்பிக்கையே வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு வலிக்கட்டும் ஒழி விளக்கு! அதன் வெளிச்ச மழையில் நனைபவர்க்கு முன்னேற்றம் கை தொடும் தூரமே! 
     உங்கள் மீது அதிக அக்கறையை உங்கள் பெற்றோரை விட யார் காட்ட முடியும்! அவர்கள் ஊட்டும் தன்னம்பிக்கை முன்னேற வைக்கும் உங்களை! தன்னம்பிக்கை உங்களிடம் குறைவாக இருக்கிறதா? கவலையை விடுங்கள்.
#உங்கள் நல்ல நண்பரிடம் பேச்சு கொடுங்கள்! உள்ளத்தில் ஊரும் தன்னம்பிக்கை.
#உங்கள் மீது அக்கறை காட்டும் ஆசிரியர் ஒருவர் இருந்தால் போதுமே, தன்னம்பிக்கை உறமேர்ருவர் உங்களுக்கு. 
      _இது என்னால் முடியும்.
      _எனது முயற்சி வெல்லும்.
      _என்னால் சாதிக்க முடியும் என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொள்ளுங்கள்.
                         
                   நன்றி
                                    இளவரசி

Monday, October 29, 2012

எது உன் குறிக்கோள் பகுதி 1


குறிக்கோளும் முடிவெடுத்தலும் 
இப் கட்டுரை பசுமைக்குமார் எழுதிய புத்தகத்தில் இருந்து படித்து அப்படியே உங்களுக்கு தருகிறேன் ... 

இளையவர்களை சமூக முன்னேற்றதுக்கு 
பாடுபடக்கூடிய நல்லவர்களாகவும் லட்சிய
நோக்கம் கொண்ட வல்லவர்களாகவும் 
உருவாக்கிடவேண்டும். அப்படி அவர்கள் 
உருவாகிவிட அவர்களுக்கு குரிக்கொல்குறிக்கோள் 
பற்றிய தெளிவும், எந்த ஒரு பிரச்சனையிலும் 
தெளிவான முடிவெடுக்கும் திறனும் வேண்டும்.
       இளமைப்பருவம் ஆக்கபுர்வமான சக்திகள் கொண்டது. வளமைமிக்கது. அபரிமிதமான ஆற்றல் கொண்ட இந்த இளம் பருவத்தினரைச் சமுதாயம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆக்க நோக்கத்திற்கும் இது பயன்படும். அழிவு நோக்கதிற்கும் பயன்படும். காட்டாற்று வெள்ளத்தை தேக்கி வைத்து விவசாயத்திற்குப் பயன்படுத்துவது போல இளையதலைமுறையினரின் ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இளைய தலைமுறையினர் தீயவர்களின் பிடிக்குள் சிக்கினால் அவர்களின் சக்தி யாவும் வீணாவதுடன் சமுதாயத்திற்கும் கேடாகமாறிவிடும்.
      இளையவர்களை சமூக முன்னேற்றதுக்குப் பாடுபடக்கூடிய நல்லவர்களாகவும் லட்சிய நோக்கம் கொண்டவல்லவர்களாகவும் உருவாக்கிடவேண்டும்.அப்படி அவர்கள் உருவாகிட அவர்களுக்குக் குறிக்கோள் பற்றிய தெளிவும் எந்த ஒரு பிரச்சனையிலும் தெளிவான முடிவெடுக்கும் திறனும் வேண்டும்.
      அவரது குறிக்கோளை அடையலாம் கண்டு கொள்ளும் திறன் மிகவும் இன்றியமையாதது. குறிக்கோள் இல்லாத வாழ்க்கை திசை தெரியப் பயணம் போன்றது. எங்கு தொடங்கி, எங்கு முடிப்பது என்ற தெளிவு வேண்டும்.
      இதுதான் பாதை, இதுதான் பயணம் என்ற புரிதலுணர்வு தேவை. வாழ்க்கை என்பது ஒரு வட்டம் அல்ல, அது இருந்த இடத்திற்கே சுற்றிச்சுற்றி ஒருநாளும் வருவதில்லை.
      வாழ்க்கை என்பது சூலலேணி வளர்சியைக்கொண்டது. ஆனாலும் அதில் தொடர்ச்சியான முன்னேட்டம் இருக்கும். இந்த சூலேணி படியில் எவ்வளவு படிகளைதொட வேண்டும் என்ற இலக்கு நிர்னயிக்காமல் தொடர்ந்து மேலேறுவது சோர்வெனும் பாறாங்கல்லைத் தலைக்குள் முளைக்க வைத்து விடும்.
     லட்சியதிற்குத்தான் சென்றடைய வேண்டிய இலக்கு, இலக்கை அடைவதற்கான திட்டம், திட்டத்தை நிறைவேடற்டறுவதற்கான மனபலம், விடமுயட்சி, துணிச்சல் போன்றன வேண்டும். தோல்வியைக்கண்டு துவண்டு விடக்கூடாது, அதிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளவேண்டும்.
     வெற்றியாளர்கள் பல துறைக்களிலும் இருக்கிறார்கள். அவர்களின் வெற்றிகரமான வாழ்க்கை அனுபவங்களை தெரிந்து கொண்டாலே, அவை வெற்றியை நோக்கி வீர நடை போட உத் வேகம் ஊட்டும். 
     வெற்றியை விட ஒருபடி மேல் சாதனை. ஒரு இலக்கைத்தொட்டு, வெற்றியை ஆரத் தழுவிக்கொண்டவகள், அடுத்து நிர்ணயிக்க வேண்டிய இலக்கு என்பது சாதனை புரிவது. பல துறைகளிலும் நாமறிந்த, தெரிந்து கொண்ட சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகள், நமது சாதனை மனோ பாவத்தை உரமூட்டி வளர்க்கும்.
     குறிக்கோளை அடைய நினைப்பவர்கள், வேர்ரியலர்களைத் திகழ விரும்புகிறவர்கள், சாதனையாளர்களை மாறத் துடிப்பவர்கள்ஆகிய இவர்களுக்கெல்லாம் வலிமை மிக்க அறிவாற்றல் தேவை. பலவீனமான எண்ணம் தோல்வியைத்தான் தழுவும். 
     எதிர் மறையான எண்ணம் உங்கள் வெற்றிக்கு தடையாக இருக்கும். ஒருவர் தன்னுடைய குறிக்கோளை கண்டு கொள்வது அவசியம். அது போலவே முடிவெடுக்கும் திறனும், பிரச்சனைகளை சந்திக்கும் துணிவும் அவசியம்.
     குழந்தைப்பருவம் முதல் இதற்கான பயிற்சி பெற்றால், இளமைப்பருவ வளர்ச்சியில் அவர்களிடம் ஆக்கபூர்வமான முன்னேர்ரதைக்கொண்டுவரும்.
     கால்களில் சிக்கியிருப்பது, உதறினால் கீழே விழும் கயிறு என்பதனை அறியாமல், பாம்பு ஒன்று காலைச் சுற்றியிருப்ப்பதாய் கருதிவிடக்கூடாது. சிக்கல் எதுவாயினும், சிக்கலி இருந்து விடுபட சிக்கல் முடிப்பபதை அவிழ்ப்பதா அறுத்து விடுவதா என்று முடிவெடுக்கத் தெரிய வேண்டும். 
     ஆதிரக்காறனுக்கு புத்தி மட்டு என்பார்கள், ஆத்திரம் அறிவுக்ககன்களை மறைத்துவிடும். ஆத்திரத்தில் எடுக்கும் முடிவு பயணத்திற்கு தடையாக முடியலாம். முஇவு தவறாகும் போது, வெற்றி வெகுதுரம் பொய் விடும்.
     முடிவெடுக்கும் போது அறிவு பூர்வமா முடிவெடுத்தல் சாலச்சிறந்தது. உணர்ச்சி பூர்வமாக முடிவெடுக்கக்கூடாது. “எண்ணித் துணிக கருமம்” என்றார் வள்ளுவர். அதே சமயம் நிதானமாக எடுக்கும் முடிவு அல்லது தாமதமாக எடுக்கும் முடிவும் தொல்வியைத் தளுவலாம். காலம் கருதி செயற்பட்டால் ஞாலத்தையும் வெல்ல முடியும். 
     முவேடுக்கும்போது, தன் வலிமை, பிறரது  வலிமை, இடம், பொருள், இவள யாவும் நமது கவனத்திற்கு வர வேண்டும். மனித வாழ்க்கைக்கு பலவகையான திறமைகளை பெற வேண்டியுள்ளது. அதில் முடிவெடுக்கும் திறனும் ஒன்று. 
     குறிக்கோள் பற்றிய தெளிவும், முடிவெடுக்கும் திறனும் உங்களை வெற்றிபடிகளில் வீர நடை போட வைக்கும்! அந்த வீர நடைக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
     சரியாகக் குறிக்கோளைக் நிர்ணயித்துக்கொல்வதும் சரியான முடி வெடுக்கும் திறன் பெறுவதும் தன்னம்பிக்கை தரும். தன்னம்பிக்கை இல்லாதவர்களால் தங்களுக்கான குறிக்கோள்களை நிச்சயித்துக்கொள்ள முடியாது. குறிக்கோளை அவர்கள் இனங்கண்டு கொள்ள  முடியாமலும் போய் விடும்.

    நாம் ஏன் குறிக்கோளை நிர்ணயிக்கத் தயங்குகிறோம்                   *நாம் வாழ்க்கையை பெரும்பாலும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. நம்மில் பலர் வாய் சொல்லில் வீரர்தான். அதை செயலில் காட்ட தயங்குகிறோம். 
*நம் வாழ்க்கைக்கு நாம் தான் பொறுப்பு என்று ஏற்றுக்கொள்வதில்லை. பிறர் நம்மை புரிந்து கொள்வது இல்லை என்போம். என் விதி என்போம். அனால், நம் செய்கைகளே நம் வாழ்க்கை தரத்தை நினஇக்கிறது என்று மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம். வாயில் வந்ததைப்பேசி, வேந்ததைத்தின்று விதி வந்தால் சாவோம் என்றே பலர் எண்ணி வாழ்கின்றனர். 
*நம்மில் பலருக்கு தம்மை பட்டிய தால்வேன்னம் இருக்கிறது. ஒரு விதமான குற்ற உணர்வு அவர்களை அலைக்கழிக்கிறது. சிறு வயது முதலிலே, நாம் விரும்பத்தகதவர்கள் என்ற எண்ணத்துடனேயே வளர்ந்தால் இலக்குகளை நோக்கி வெற்றி நடை போட இயலுமா?
*பலர் இலக்கு நர்ணயம் செய்வது முக்கியம் என்று நினைப்பது இல்லை. வாழ்க்கையின் அன்றாட அலைச்சல்களில் சிக்கித்தவிக்கும் பலருக்கு குறிக்கோள் பற்றி தெரிந்திருக்க வழியில்லை. எப்படி குறிக்கோளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரிவது இல்லை.
*பலருக்கு பிறர் என்ன சொல்வார்களோ என்று பயம். நம்மைச்சுட்டி இருப்பவர்களால் நாம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஒரு ஆவல். இதனால் பல நேரம் நாம் உண்மையாக விரும்புவதை செய்ய தயங்குகிறோம். சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்களே செய்ய விழைகிறோம். நம்மை கேலி செய்வார்களோ என்ற எண்ணத்தில் குறிக்கோளை நிர்ணயிக்க மறந்து விடுகிறோம். நமது குறிக்கோள் நம்மை மட்டும் தெரிந்திருந்தால் போதுமானது. யார் நம்மை உற்சாகப்படுத்துவார்கள் என்று நினைக்கிறமோ அவர்களிடம் மட்டும் பகிர்ந்து கொண்டால் போதுமானது. 
*கடைசியாக தோல்வி அடைந்து விடுவமோ என்ற பயத்தின் காரணமாகவும் குக்கொல்களைதவித்து விடுகிறோம். தோல்வியே வெற்றியின் ஆரம்பம் என்பதை நாம் மறந்து விடுகிறோம். தோல்விக்கு பயந்தால் நம்மால் எந்த வேலைதான் செய்ய இயலும்?
          வெற்றியடைய வேண்டு என்ற தாகம் உடையவர்கள். மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களை அவர்களுடைய வாழ்க்கையில் நிரும் அகற்ற வேண்டும். 
          குறிக்கோளை அடைய தன்னம்பிக்கை தேவை. திட்டவட்டமான முடிவெடுக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கும் தன்னம்பிக்கை தேவை. 
          குறிக்கோளும் தன்னம்பிக்கையும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. இவற்றை புஎஇந்து கொண்டு செயற்படும் போது, இளைய தலைமுறையின் ஒவ்வருவரின் ஆற்றலும் பயனுள்ள வழியில் பாய்ந்தோடும். பலன் பெருகும்!
          சரி, தன்னம்பிக்கை என்றால் என்ன? ஒருவர் வாழ்க்கையில் முன்னேற எவ்வாறு உதவுக்கிறது, தன்னம்பிக்கைகளுக்கு தடைகள் யாவை?

தன்னமிப்பிக்கை என்றால் என்ன?
“மனிதன் அற்புதமானவன், பல அற்புதங்களை படைக்கும் பிரம்மா” என்று உலக இலக்கிய மேதை மக்சிம்காங்கி வியர்ந்து பேசுவஅற. அத்தகைய அற்புதமான மனிதனின் வாழ்க்கை அருமையும் பெறுமையும் உடையதாக இருக்கவேண்டும்!
       ஆனால், 
       செயற்கரிய சிய நினைக்கும் மனிதன் நடந்தும் கடந்து செல்ல வேண்டிய பாதை வழுக்கம்நிலமாகவும், பாளை நிலமாகவும், காலை இடறச் செயும் பறைதளமாகவும் இருக்கிறது. சிறிது கவனம் தப்பினாலும் உடலும் உள்ளமும் ரணமாகிவிடும்! 
       அதனால், 
       “முன்னேறு மேலே மேலே” என அவன் நடை நடந்து செல்லும் போது கால்களில் ஒட்டிய துசிகளை உத்தற மறந்தால் அந்த துசிகளுக்கு இரும்பின் கணம் வந்து விடும்! ஈரம் சுமந்த பஞ்சு பொதியாய் மனம் கனத்துப் போகும், அவன் இட்ட அடி நோகும். எடுத்த அடி தளரும், நடை வேகம் குறையும். முன்னேற்றம் தோடு வனமாய் போய் விடும்! 
       பயிர் நிலதில்ன் கலைகள் மிகுந்திருந்தால் பயிரின் வளர்ச்சி தடைப்படும். மனித வாழ்வின் தளைகள் மிகுந்திருந்தால் முன்னேற்றம் தடைப்படும். ஆக, களைஎடுத்தலும், தளையறுதலும் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்! 
       ராபர்ட்புரூஸ் என்ற மன்னன், போரில் பல முறை தொல்விய்று, பகைவருக்கு அஞ்சி ஒளிந்து கொண்டு இருந்த போது, அவன் விழிகளுக்கு ஒழி எற்றி அவன் நெஞ்சுக்கு உரம் ஏற்றிய ஒரு நிகழ்ச்சி உங்களுக்கு ஞாபகம் வருக்கிறதா? 
       வலை பின்னும் சிலந்தி தமக்குரிய வலையை பின்னி முடிப்பதர்கில் அது திரும்ப திரும்ப முயற்சி மேற்கொள்வதை புரூஸ் மன்னன் வைத்த விழி அசைக்காமல் பார்துக்கொண்டு இருக்கிறான். அந்தச் சிலந்திக்கு சோர்வே இல்லையா? அதற்கு அலுப்பு ஏற்படவே இல்லையா? திரும்ப திரும்ப நூள் அறுபடும், வலை பின்னும் முயற்சி தடை படும். அதனால் என்ன? வலை பின்னி முடிக்கும் வரை அது ஓயவில்லை. வலை பின்னிய வெற்றி பெருமிதத்துடன் சிலந்தி?
      இவன் மட்டும் என்ன சோர்ந்து கிடக்க வேண்டும்? திரும்ப திரும்ப முயற்சி செய்தல் வெற்றி கிட்ட முடியாமலா போய்விடும்? வலை பின்னும் சிலந்தி சொல்லித்தந்த பாடம் இவன் உள்ளத்தில் அடைந்து கிடந்த தன்னம்பிக்கை ஊற்றைத் திறந்து விட்டது. அந்தத் தன்னம்பிக்கை அவனை  வெற்றியாளனாக்கி விட்டது. 

Monday, October 22, 2012

முன்னேறு!முன்னேற்று!! (சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்)பகுதி 4


சின்ன வயதிலேயே இதற்கு முன்பும் சீனிவாசன் சென்னைக்குப் போயிருக்கிறார். நண்பர் ஒருவர் இவரை வால்டாக்ஸ் ரோடில் ஒத்தக்கடை தியேட்டரில் வேலைக்குச் சேர்த்து விட்டிருந்தார்.

   அங்கு எடுப்பு வேலை, நாற்காலி தூக்கணும், துடைத்துச் சுத்தம் செய்யணும். காலையில் 1 பணம், இரவு 1 பணம் கூலி கிடைக்கும்.

   அதையே கை மேல் பலனாய் நினைப்பார். கையில் காசு பார்க்கும் சந்தோஷம். உழைப்பின் ஊதியம்! சின்னதோ பெரிதோ பலன் உடன் கிடைக்கிறது. வருமானம் கண்முன் தெரிகிறது.

   விவசாயத்தில் உடனே எதையும் எதிர்பார்க்க முடியாது. நிலம் சுத்தம் பண்ணி –உழுது –பயிரிட்டு –களை பறித்து –மருந்தடித்து –உரமிட்டு –மழை –இயற்கை சீற்றத்துக்குப் போராடி –ஈடு கொடுத்து –இரவு பகலாய்ப் பாடுபட்டாலும் –மூன்று மாதமோ –ஆறு மாதமோ கழித்துத்தான் பலன் தெரியும்.

   தானியம் வீட்டுக்கு வந்தாலும்கூட விற்கும்போது உரிய விலை கிடைக்காது. தூக்கிச் சுமந்து கொண்டு போய்ப் போன விலைக்குத் தள்ள வேண்டும்!

   ஆனால் –அங்கே –மதிப்பு மரியாதையில்லாவிட்டாலும் உடனே காசு கிடைக்கிறது! சொத்து சுகமில்லாவிட்டாலும் எங்கே வேண்டுமானாலும் போய்ப் பிழைக்கலாம் என்கிற தன்னம்பிக்கை அவருக்கு அப்போது வந்திருந்தது.

   அந்தத் துணிச்சல் காரணமாய் –வானமே எல்லை –பூமியில் எதுவும் இல்லாமலில்லை –ஒரே வானம் –ஒரே பூமி –எல்லாம் நமதே என்று பொள்ளாச்சிக்கு ஓட்டம்!

    ஆழியாறு டேமில் கல் தூக்கினார். அங்கு ஒருவாரம் பத்து நாட்கள் சம்பாதித்துச் சென்னைக்குப் பயணம்!

    வால்டாக்ஸ் ரோட்டில் சுந்தர் லாட்ஜில் தங்கி அங்கு இரவு கடையில் மாலை 4 முதல் 11 வரை எடுபிடி. 60 ரூபாய் சம்பளம், கூட வேலை பார்த்தவர்கள் பகலில் தூங்கி அல்லது ஊர் சுற்றிப் பொழுதைக் கழிக்க, சீனிவாசனுக்கு அப்படி வெட்டியாய்ச் சுற்றித் திரிய மனமில்லை.

   சும்மா சுற்றுவதற்குப் பதில் பகலிலும் ஏதாவது வேலை செய்யலாமே என்று வேலை தேடினார். எக்மோர் சந்திரபவனில் கிடைத்தது. காலை 8 முதல் மதியம் 1 மணி வரை –அங்கும் 60 ரூபாய் சம்பளம்.

   இரண்டு இடத்திலும் தொடர்ந்து வேலை. ஓய்வு கிடையாது. லீவ் எடுப்பதில்லை. எந்த  ஒரு காரியத்திலும் ஆத்மார்த்தமாய், மனம் ஒன்றி ஈடுபட்டால் உடல் சோர்வதில்லை. ஓய்வும் தேடுவதில்லை, உற்சாகமாய்ச் செயல்பட முடியும்.

   முடிந்தது!

   இதற்கிடையில் பாட்டிக்கு உடம்பு முடியாமல் போக – சீனிவாசனைத் தேடியிருக்கிறார்கள். ஆறு மாதத்திற்கு பிறகு எப்படியோ தகவல் பெற்று அண்ணன் இவரைத் தேடி வந்து விட்டார், கண்டுபிடித்து -``வா ஊருக்குப் போகலாம் –பாட்டி உன் நினைப்பில் வாடுகிறது ‘’என்று அழைத்தார். உடன் இவரது மனதும் கரைந்து போயிற்று, பாட்டி நினைப்பு எடுக்க -``சரி போய் ஒரு எட்டு பார்த்து வருவோம்’’ என்று கிளம்பினார்.

(4)

   விவசாயம் என்பது இன்று மட்டுமில்லை அன்றும்கூட லாபகரமானதாய் இல்லை. விவசாய நாடு என்கிறோம். விவசாயிதான் நாட்டின் முதுகெலும்பு என்போம். ஆனால் அவனுக்கு இருக்கும் பிரச்சனைகளை எவரும் கண்டுகொள்ள மாட்டோம்.

   தண்ணீர், மின்சாரம் தட்டுப்பாடு, உரத்தட்டுப்பாடு, கூலிக்கு ஆள் கிடைப்பதில்லை. கெளரவம் பார்த்துக் கொண்டு ஆட்கள் நகரத்திற்கு படையெடுத்தல்! பட்டணம் என்றால் சொகுசு வேலை – சொகுசாய் இருக்கலாம் என்கிற கனவு.

      கஷ்டப்பட்டுப் பயிர்களை வளர்த்தாலும் நோய்த்  தாக்குதல், பூச்சி, அரிப்பு! மருந்தடித்து மாள்வதில்லை. தேவைக்கு மழை இல்லாமல் அறுவடை சமயம் வந்து அழித்தல்!

   முன்பெல்லாம் ஆடு,   மாடுகள் கிராமங்களில் பெருத்திருக்கும். மாடுகள் –வண்டி –ஏர்- அவற்றிற்குத் தீவனம் –அவற்றின் மூலம் பால்  -எரு என இயற்கையோடு ஒன்றி –செயல்பட்ட காலத்திலும் கூட நஷ்டம்.

   என்னதான் முனைந்து பாடுபட்டாலும்,எதிர்ப்பார்க்கிற பலன் விவசாயிக்குப் போய்ச் சேர்வதில்லை. எல்லாப் பிரச்சனைகளையும்  மீறி மகசூல் எடுத்தாலும் கூட உரிய விலை கிடைப்பதில்லை.

   ஆகையால் விவசாயத்தை மட்டும் நம்பியிருந்து பிரயோஜனமில்லை என்பது சீனிவாசனுக்குப் புரிந்தது. இளம் ரத்தம். உள்ளுக்குள் வேகம் –உடலில் தெம்பு! மனதில் மமதை! நம்மால் முடியும் –முடியாதது எதுவுமில்லை என்கிர வெறி.

   ஊரில் வானம் பார்த்த பூமி ஆறு மாதத்திற்கு மட்டுமே வேலை. மற்ற நாட்களில் வெட்டியாய்ப் பொழுது போக்குவரத்து இவருக்குப் பிடிப்பதில்லை. உருப்படியாய் எதுவும் செய்யாமல் –வாழ்வை வீண்டிக்கிறோம் என்கிற உறுத்தல்.

   வேலையில்லை –சும்மாயிருக்கிறோம் என்பதற்காக ஊரை விட்டுப் போக முடியாது! விவசாயப் பணிகள் இல்லாவிட்டாலும் கூட மாடுகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும். வயிலிலும் சின்னச்சின்ன வளப்படுத்தும் வேலைகளையும் செய்தாகணும்.

   நிலங்களையும் கவனித்துக் கொண்டு, அதிகப்படி வருமானத்திற்கு என்ன செய்யலாம் என்கிற யோசனை போயிற்று.அப்போது உதித்தது  மளிகைக்கடை! அத்துடன் டீ ஸ்டால்! அப்புறம் சைக்கிள் கடை!

   கடை என்று ஆரம்பித்த பின்பு –பலருடனும் பழகும் வாய்ப்பு! செல்வாக்கு! அத்துடன் கொஞ்சம் செருக்கும் தோன்றும். எப்போதும் எதிலாவது உடலைச் செலுத்தும் போது திருப்தி. மனதும் செழிக்கும், உடலும் வளப்படும், நம்மால் எதையும் செய்யமுடியும் என்கிற தன்னம்பிக்கையும் வளர ஆரம்பித்தது.

   புது நடுவலூரில் கடை வளர்ந்து வந்த போது சீனிவாசனின் அண்ணன் ஒருவர் இறந்து போனார், கடைக்கும், வயலுக்கும் ஆள் தேவைப்பட்டது.

    அப்போது 1959.

   இன்னொரு அண்ணன் எல்லாவற்றையும் அழித்துவிட்டு ஆதரவில்லாமல் இருக்கவே சீனிவாசன் அவரை அழைத்து வந்து தன்னுடன் வைத்துக் கொண்டார்.

    அதுவரைப் பட்ட கஷ்டமெல்லாம் போய்ச் செல்வாக்குடன் அவர் முன்னுக்கு வரும்போது கண்படுகிற மாதிரி சிக்கல் ஒன்று இவரது கதவைத் தட்டிற்று.

    ஆக்கல் என்பது கடினம், அழிப்பது ரொம்ப எளிது. கிராமத்தில் அடிமட்டத்தில் கிடந்த ஒருவன் –அதுவும் சிறுவன் வேகமாய் முன்னுக்கு வருகிறான் என்பதைப் பலராலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

   இவனை எங்கே தட்டலாம் –எப்படிக் குழி பறிக்கலாம் என்று பலரும் பார்த்திருந்தனர். சீனிவாசன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எந்த பிரச்சனைக்கும் இடம் தராமல் காரியமே கண்ணாய் இருந்தார்.

  அங்கு ஊரில் அப்போது ராஜ் ரெட்டியார் என்பவர் மிகவும் செல்வாக்குடன் இருந்தார். வசதி –மிடுக்கு –செருக்கு என எல்லாமும் கொண்டவர். அவருக்கு ஒரு மகள்.

   அவள் கடைக்கு வரப்போக –சும்மா திரிவதைச் சிலர் திரித்துவிட்டனர். தீ கொளுத்திப் போட்டனர்.

சோழர்களின் பழங்கால செப்பேடுகள் மயிலாடுதுறையில் கண்டெடுக்கப்பட்டன


பிற்காலச் சோழர்களின் வரலாறு அடங்கிய செப்பேடுகள் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் கிராமம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவில் பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலில் தமிழக அரசின் இந்து சமய அற நிலையத் துறை மூலம் இந்தக் கோயிலில் முன் மண்டபம் கட்டும் பணிக்காக குழி தோண்டியபோது, பத்து அடி ஆழத்தில் சோழர் காலத்தைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்பேடுகள், 12 செப்புத் திருமேனிகள், பூசைப் பொருள்கள், வாத்தியக் கருவிகள், போன்றவை கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு. கருணாநிதியின் பார்வைக்காக வைத்தனர். "இந்த செப்பேடுகள் கிபி 1053 ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கலாம்," என்று மு.கருணாநிதி கூறியுள்ளார்.

கிடைத்துள்ள புதிய செப்பேடுகள் மூலம் பல்லவர்களிடமிருந்து தஞ்சாவூரை சோழர்கள் கைப்பற்றியதாக, ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனருமான ரா.நாகசாமி தமிழோசையிடம் தெரிவித்தார்.

முத்தரையர்கள் என்ற சிறு மன்னர்களிடமிருந்து தஞ்சையை சோழர்கள் கைப்பற்றியதாகவே இது வரை வரலாற்று ஆசிரியர்கள் நம்பியிருந்ததாகவும், ஆனால் இந்த செப்பேடுகள் தஞ்சை பற்றி முன்பு அறியப்படாத விபரங்களைத் தருவதாகவும் இரா.நாகசாமி தெரிவித்தார்.

தற்போது கிடைத்திருப்பவைதான் இந்தியாவிலேயே இதுவரையில்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவிலான செப்பேட்டுத் தொகுதிகள் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செப்பேடுகள் தமிழிலும் சமஸ்கிருத்திலும் எழுதப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த செப்பேடுகளை கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணித்த இராசேந்திர சோழனின் இரண்டாவது மகனான இரண்டாம் ராசேந்திரசோழன் வெளியிட்டுள்ளான்.

இந்த செப்பேடுகள் செய்யுள் வடிவில் எழுதப்பட்டுள்ளதாகவும், போரை நேரில் பார்த்த ஒருவர் அதை வருணிப்பது போல இந்த தகவல்கள் அமைந்துள்ளன என்றும் நாகசாமி குறிப்பிட்டார்.

Monday, September 24, 2012

நல்லதங்காள்



தமிழ்மொழியில் எழுதப்பட்ட நாவல் பிரதாப முதலியார் சரித்திரம். இது பிரிசுரிக்கப்பட்ட ஆண்டு 1879.இதுதான் தமிழில் எழுதப்பட்ட முதல் நாவலாகும். இது வசன நடையில் உள்ளது. இந்த நாவலை எழுதியவர் வேதநாயகம் பிள்ளை.
ஆதியூர் அவதானி சரிதம் என்ற ஒரு நூல் தமிழில் எழுதப்பட்டு இருக்கிறது. இந்த நூல் முதன் முதலில் 1875-ஆம் ஆண்டு புத்தகமாக வெளியிடப்பட்டது. இது பாட்டு (கவிதை) வடிவில் இருக்கிறது. இதை எழுதியவர் து.வி. சேஸய்யங்கார். கவிதை வடிவில் எழுதியுள்ளதை நாவல் என்று ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எனவே ஆதியூர் அவதானி சரிதம், பாட்டு வடிவில் இருந்தாலும் அதுவும் நாவல்தான் என்று சாதிக்க சிலர் சில காலமாக முயற்சி செய்து வந்தார்கள். எழுத்து துறையில் பத்திரிகை தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்த இதை ஒரு சாதகமாகப் பயன்படுத்த நினைப்பார்கள்.
“அமுத சுரபி” என்ற மாத இதழில் (1.9.1989) ‘கிட்டி’ என்ற எழுத்தாளர் தம்முடைய கட்டுரையில் கூரியது.
“வடிவம் ஒன்றைத்தவிர , மற்ற எல்லா அம்சங்களிலும் நாவல் என்று ஓட்டிகொள்ளக்ககூடிய, இந்த படைப்பு தமிழ் உரை நடையில் இந்த வடிவம் வருவதற்கு முன்பு, தோன்றிவிட்டதால், முதல் தமிழ் நாவல் என்றாகிவிடுகிறது”.
அசோகமித்திரன் என்ற எழுத்தாளர், ‘சில இந்திய மொழிகளில் முதல் நாவல்’ என்ற புத்தகம் எழுதியுள்ளார். இதன் முதல் பதிப்பு 2001-ல் வெளியிடப்பட்டது. இந்த நூலில், ஆதியூர் அவதானி சரிதம் என்ற நூல் பற்றி அவர் எழுதியது. 
(பக்கம் 143)”சேஷய்யங்கார் தன் படைப்பை அதன் வடிவம் காரனமாகச் சலசலப்புக்கு உட்பட வைத்துவிட்டார். சேஷய்யாங்க்காருடைய படைப்பை சந்தேகமற நாவல்தான் என்று கூற முடியாவிட்டால் 1875-ஆம் ஆண்டிலேயே தமிழ் நாட்டிலும் ஜாதி, ஆசாரம், திருமணம், விதைவைகள் நிலைபற்றித் தீவிரமாகச் சிந்தித்து எழுத்தில் வடித்து, செயலிலும் காட்டியது தமிழ் நாவல் வரலாற்றில் அவசியம் இடம் பெற வேண்டியதே”
இவர்களுடைய முயற்சியெல்லாம் கிறிஸ்தவர் எழுதிய நூல்களை முதல் நிலையிலிருந்து இறக்கி, பிராமணர் எழுதிய நூலுக்கு கெளரவம் தேடித்தந்த நம் முயற்சியாகும். 
வசன நடையில் இல்லதிருந்தளும்கூட, பாட்டு நடையில் சமூகப்பார்வை கொண்டதாக இருக்குமேயானால் அது நாவல் என்று சொல்கிறார். இவர்களும் ‘நல்லதங்காள்’ கதை தெரியுமா? 
புகழேந்தி என்றொரு தமிழ் புலவர், வாழ்ந்த காலம் 12-ஆம் நூற்றாண்டு. இவர் எழுதிய நூல்களில் ஒன்று ‘நல்லதங்காள்’ என்ற நூல். இது பாட்டு நடையில் எழுதப்பட்டது. இவர்களது அர்த்தத்தின்படி சமூகப்பார்வையில் சமூகப் பிரச்சினையை பாட்டாகச் சொல்லும் யதார்த்த நூல்.
 நல்லதங்காள் என்ற குடும்ப பெண்ணிற்கு ஏழு குழந்தைகள். கணவர் வெளிதேசம் சென்றவன், பல காலமாகியும் திரும்பி வீடு வரவில்லை. குடும்பம் வறுமையில் வாடியது. குழந்தைகளை அழைத்துக்கொண்டு நல்லதங்காள் பக்கத்து நாட்டிலுள்ள அண்ணன் வீட்டிற்குப் போகிறாள். அண்ணன் அந்நிய நாட்டிற்கு திரும்பவில்லை. அண்ணியின் பெயர் அலங்காரி. அண்ணியின் கொடுமையைத் தாங்கமுடியாமல், பசியால் தவிக்கும் தன்னுடைய ஏழு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி அருகாமையிலுள்ள காட்டில் உள்ள கிணற்றில் விழுந்து மடிந்தாள். நல்லதங்காளை தேடிக்கொண்டு அண்ணன் வீட்டுக்கு கணவன் வந்தான், வீடு திரும்பி வந்த அண்ணனும் நல்லதங்காளை தேடிச்சென்று, குழந்தைகளும் நல்லதங்காளும் மாண்டுபோனதைக் கண்டு கதறி அழுதார்கள் . 
 இது நல்லதங்காள் கதை. எனவே சேஷய்யங்கார் எழுதிய ஆதியூர் அவைதனை சரிதம் தமிழில் எழுதப்பட்ட ‘முதல் நாவல்’ அல்ல. வேதநாயகம் பிள்ளை எழுதிய “பிரதாப முதலியார் சரிதம்” தான் தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல்.....  


Friday, September 21, 2012

முன்னேறு!முன்னேற்று!! (சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்) பகுதி


வறுமை ஒரு பக்கம் என்றால், வீட்டிக்ல் அண்ணன்களின் அடாவடித்தனம் இன்னொரு பக்கம், தலைவலி ஏற்படுத்திற்று. சாதாரணமாய் மூத்தவர்கள் பொறுப்பாய் நடந்து குடும்பத்தையும் இளையவர்களையும் காப்பாற்றுவதுண்டு. இங்கே அவர் விஷயத்தில் எதிர்மறை அப்படி ஒரு `அதிர்ஷ்டம்’ இவருக்கு!

   இருவரும் கஷ்டநஷ்டத்தை உணர்வதில்லை, உழைப்பதில்லை,உழைக்கத் தயாராகவும் இல்லை. வேண்டாத சிநேகத்தில் –வேண்டாத பழக்கவழக்கங்கள்! எதுவும் எளிதாய்க் கிடைக்க வேண்டும் சொகுசு வேண்டும் –ஊதாரித்தனம்!

   உழைக்காமல், சம்பாதிக்காமல் சொகுசு எப்படி வரும்? ஊரில் சோம்பேறிகளாய் எப்போதும் ஒரு கோஷ்டி இருப்பதுண்டு, முச்சந்தியிலும், டீக்கடையிலும் அமர்ந்து அரட்டை, எகத்தாளம், ஊர்வம்பு!

   இந்தக் கும்பலில் அண்ணன்களும் சேர்ந்து கெட்டுப்போக ஆரம்பித்தனர். பாட்டியின் பேச்சு அவர்களிடம் எடுபடவில்லை. கண்டித்தால் எகிறுவர்.

   வயலில் வந்து வேலை செய்வதில்லை. உதவுவதில்லை.ஆனால் அறுவடை சமயத்தில் வரும் வருமானத்தை எடுத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடிப்போய் அது தீர்ந்த பின்பு திரும்பி வருவர். அவர்களைத் தட்டிக் கேட்க முடியாது, திருத்த முடியாது. சீனிவாசனுக்கு வெறுத்தப் போகும் எதிர்த்துப் பேசினால் அடிவிழும்.

   சின்ன வயதில் அவற்றை எதிர்கொள்ளும் –தாங்கும் உடல்வலிமையும் மனோதிடமும் சீனிவாசனிடம் இருந்ததில்லை. பயம், தயக்கம், ஒரு சமயம் வீட்டிலிருந்து எதுவும் கிடைக்காமல் போகவே, அண்ணன்கள், பாட்டி வைத்திருந்த நகைகளை திருடிக் கொண்டு ஓடிப் போயினர்.

   எல்லாக் கஷ்டத்தையும் இளமையிலேயே சீனிவாசன் தாங்க வேண்டிய கட்டாயம். பாட்டியை நினைத்து அவரும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார். அவரது மனதில் எப்போதும் நாம் வளரணும், முன்னேறணும் –என்கிற தீ! பாட்டி கொடுத்த உற்சாகம் –நிச்சயம் வாழ்வில் ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்திற்று.

    வீடு –காடு –மாடுகள் எனப்பார்த்துக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் சீனிவாசனால் பள்ளிக்கும் சரியாய்ப் போக முடியவில்லை. நாலாம் வகுப்புக்குப் பிறகு பார்க்க முடியாத நிலைமை.

   அந்த நாட்களில் பள்ளிக் கட்டணமாக நெல் அல்லது வரகு –என்றால் இரு மடங்கு தர வேண்டும். வாத்தியார்களுக்குக் காய்கறி பால்! இப்படி எல்லாம் தரணும். இவற்றைத் தர முடியாமல் போனதும் கூட படிப்பை நிறுத்துவதற்குக் காரணமாயிற்று.

   படிப்பு இல்லாவிட்டால் என்ன –வாழ்வில் முன்னுக்கு வந்தவர்களெல்லாம் நிரம்பப் படித்துவிட்டா வந்தார்கள்? நாமும் அவர்களைப் போல முன்னுக்கு வருவோம் எனக் கடுமையாக உழைக்க ஆரம்பித்தார்.

   இவருக்கு ஊக்கம் தந்தது ஒரு பக்கம் பாட்டி –மறுபக்கத்தில் எம்.ஜி.ஆரின் படங்கள். அவரது படப்பாடல்கள்! அவரது படத்தில் போதிக்கும் விஷயங்கள் எல்லாம் இவரை வளப்படுத்தின. தன்னம்பிக்கையை ஏற்படுத்தி நேர்மை –நியாயம் –கடமை –கண்ணியம் –கட்டுப்பாடுப் பாதையில் வழிகாட்டின.

   சில வருடங்கள் கஷ்டப்பட்டு ஓரளவிற்கு வயல் வரப்புகளைப் பாதுகாத்து வைத்திருந்த போது ஓடிப்போன அண்ணன்கள் திரும்பி வந்தனர். திருடின நகைகள் விற்று –தீர்ந்திருக்க வேண்டும்.

   மறுபடியும் பிரச்சனை. பொறுப்பில்லாமல் நடந்து கொண்டோம் –வீட்டில் திருடினோம் –  ஓடிப்போனோம் என்கிற வருத்தமோ –கூச்ச நாச்சமோ கொஞ்சமும் அவர்களிடமில்லை, தங்களின் தவறுகளை மறைக்க வேண்டித் தகராறு பண்ணக் கிளம்பினர்.

   இந்த முறை அடித்துக் கொண்டு போக பணமோ, தானியமோ, நகைகளோ கிடைக்காத போது தங்களின் பங்கைப் பிரித்துத் தரும்படி சண்டைபிடித்தனர். மறுபடியும் மண்டைக் காய்ச்சல்! சம்மதிக்கா விட்டால் வெளியே அசிங்கமாகும். பசி –பட்டினி பரவாயில்லை –தாங்கிக் கொள்ளலாம். மானம் போகும்,ஊர் கேலி பேசும்.

   வேறு வழியில்லாமல் இருந்த பவுன்களைச் சகோதரர்களுக்குப் பிரித்து கொடுத்து நிலங்களைப் பிரித்து எழுதினர். ஆனால் அவர்கள், தங்கள் பங்கில் பாடுபடாமல் வெளி நபருக்கு விற்றுவிட்டுக் கிளம்பினர்.

   அது சீனிவாசனுக்கு மேலும் வருத்தம் தந்தது. என்ன உடன் பிறப்புகள் இவர்கள்! நம்மை வாழவே விடமாட்டார்கள் போலிருக்கிறதே என நோகடித்தது. ஆனாலும்கூட இவர் மனம் தளரவில்லை.

   அப்போது அவருக்கு 14 வயது,

   கொஞ்சம் வெளி அனுபவத்தில் துணிவு கொஞ்சம் வந்திருந்தது. எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை! தொடர்ந்து செயல்படு எனும் உந்துதல்!

    நாம் தப்புச் செய்யாத போது –நேர்மையாய் நடக்கும்போது எதற்காகக் கலங்கணும்? எதற்காகப் பயப்படணும் என்று சமயோகிதம் அறிந்து பயிரிட ஆரம்பித்தார். வெங்காயம், மிளகாய்,நிலக்கடலை என நன்றாகச் சாகுபடியாயிறு. மெல்ல மெல்லப் பணம் சேர்த்து அண்ணன்கள் விற்ற –தங்கள் பூர்வீக நிலங்களைத் திரும்ப வாங்கினார்.

   அது இவரது வாழ்வின் முதல் சாதனை. அது –முயன்றால் முடியாததில்லை –இங்கு எதையும் பெறலாம் –என்கிற மனபலத்தைத் தந்தது. மனம் பலப்படும்போது இயல்பாகவே உடலும் பலப்படுகிறது.

   என்னதான் நிலங்கள் இருந்தாலும், விவசாயம் செய்தாலும் கூட மழை  -காற்று –வெள்ளம் –வறட்சி –என இயற்கையின் முரண்பாடுகளால் போதுமான அளவில் பலன் கிடைக்காமல் போகும் நிலைமை.

   உடன்,மனது வேறு வழிகளிலும் சிந்திக்க ஆரம்பித்தது.

                       (3)

  அந்த நாட்களில் அதாவது 1958 வாக்கில் –கிராமங்களில் மின்சாரம் கிடையாது. பாசனத்திற்குப் பம்பு செட்டுகள் இல்லை. அப்போது நீர்ப் பாசனத்திற்கு  -மாடு கட்டி –தாம்புக் கயிறு –சாலில் தும்பி கட்டித்தான் இறைப்பார்கள்.

   தினமும் இரவு பகலாய்த் தண்ணீர் இறைக்க வேண்டி இருக்கும், இல்லாவிட்டால் பயிர் காய்ந்து விடும். அந்த மாதிரி இறைக்கும் போது ஒரு சமயம் தும்பி கிழிந்துவிட –அண்ணனுக்கு மகாகோபம்.

   ``பொறுப்பிருக்கா உனக்கு ....? ஏன் தும்பியைக் கிழித்தாய்...? என்று சீனிவாசனைப் போட்டு அடித்துவிட்டார். அது இவரை ரொம்பவே நோகடித்தது.

   ``எனக்கா பொறுப்பில்லை! ராத்திரி பகலாய் உழைக்கிறேன் வெயிலும் மழையிலும் அவஸ்தைப்படுகிறேன். உணவு –உடை –பொழுதுபோக்கு –சொகுசு என்று எல்லாம் துறந்து –மறந்து பாடுபடுகிறேன்.

   தும்பி பழசாகிக் கிழிந்துவிட்டால் அதுக்கு நானா பொறுப்பு! ஊர் சுற்றியான அண்ணன் எப்படி என்னை அடிக்கலாம்? உழைப்பிற்கும் உண்மைக்கும் கிடைக்கும் பரிசு இதுதானா?

   என்னை அடிக்க அல்லது தண்டிக்க அண்ணனுக்கு என்ன தகுதியிருக்கிறது? கட்டபொம்மன் பாணியில் ...! உழுதாயா... நாற்று நட்டாயா –களை பறித்தாயா –நீர் இறைத்தாயா ..வியர்வை சிந்தினாயா ..அடிக்க மட்டும் வந்து விட்டாயே .. நீ யார் என்னைத் தண்டிக்க..’ என்று மனது ஆவேசப்பட்டது.

   வயதில் மூத்தவன் என்கிறதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாமா?

   ஆனாலும் கூட அண்ணன் எதிர்க்கும்  -சண்டை பிடிக்கும் தைர்யம் வரவில்லை. முடியவில்லை.  விரக்தி, வெறுப்பு, போதும்டா சாமி, இங்கே ஊரில் என்ன செய்தாலும் முன்னுக்கு வர முடியாது என்று தீர்மானித்தார்.

   ஊரில் ஒப்பேற்ற முடியாதவர்கள்! பட்டணத்திற்கு ஓடிப் போவது அந்த நாளில் வாடிக்கை! அந்த மாதிரி ஓடிப் போன சிநேகிதர்களின் யோசனைப்படி சீனிவாசனும் ஓட்டம்!

    வேறு எது பற்றியும் சிந்திக்கவில்லை.எங்கு –எத்தனை கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. இவர்களுக்கு முன்னில் வளர்ந்து காட்டணும் என்கிற வைராக்கியம். கஷ்டம் தனக்குப் புதிதல்ல.கல் –முள் –வெயில் –மழை ஒரு பொருட்டல்ல. எல்லாம் பார்த்தாயிற்று. பாரம் சுமந்தாயிற்று. இதற்கு மேல் என்ன கஷ்டம் வந்துவிடப்போகிறது?.
                                                                                      முன்னேறும் ...

Friday, August 10, 2012

தன்னம்பிக்கை தமிழர்கள் - "என்.சி.மோகன்தாஸ்"






சமுதாய நோக்கோடு-நேர்மையாகவும்-அதே சமயத்தில் மக்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தி அவற்றிற்கு ஆட்சியாளர் மூலம் தீர்வு காணும் வகையில் வெற்றிகரமாகவும் பத்திரிகை நடத்தி வருவதற்கிடையில்-

   வெறும் பொழுதுபோக்கு அல்லது  ஃபேஷன் என்கிற அளவில் இல்லாமல் தமிழ்மேல் பற்றுக் கொண்டு ஆத்மார்த்தமாய் சங்க நாணயங்களின் ஆராய்ச்சியை செய்து விருதுகள் பல பெற்று தமிழக சரித்திரத்திலும் இடம் பிடித்திருக்கிறார் தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

   தமிழ் செம்மொழியாவதற்கு இலக்கியப் பூர்வமான ஆதாரங்கள் மட்டும் போதாது என்று கருதப்பட்டது. அதன் காரணமாக இவர் ஆராய்ச்சி செய்து சமர்ப்பித்துள்ள இந்த நாணய விஷயங்கள், தொல்பொருள் சான்றாகவும் அமைந்திருப்பது உண்மை. நமக்கும் பெருமை.

   எளிமை- வயதை மீறிய இளம்தோற்றம்- தமிழ்ப்பற்று- விஷய ஞானம்- சமூக அக்கறை- தளரா உழைப்பு-வேகம்- விவேகம் என இவரிடம் ஏராளமான சிறப்புகள்.

   அந்த நாட்களில் வடிவீஸ்வரம் கிராமத்தில் திண்ணை பள்ளிக்கூடத்தில் இவரது படிப்பு ஆரம்பமாயிற்று.ஆசிரியர் மணலில் எழுதித்தான் சொல்லித் தருவார்!

   ஒருவருடம் கான்வென்ட்! பிறகு எஸ்.எல்.பி. இங்கிலீஷ் பள்ளி! எஸ்.எஸ்.எல்.சி. வரை படிப்பில் ஆர்வமில்லாமல் சுமாரான மாணவராக இருந்த கிருஷ்ணமூர்த்தியிடம் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் இண்டர்மீடியெட்  சேர்ந்ததும் வியக்கத்தக்க மாற்றம்!

   இயல்பிலேயே கணக்கின்மேல் பிணக்கு என்பதால் இரண்டாம் குரூப் எடுத்து மெடிக்கல் சேரும் லட்சியத்தில் இவரது படிப்பு ஆர்வம் அதிகமாயிற்று.

    அதன் பலன் - முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற இருவரில் ஒருவர் எனும் பெருமை இவருக்கு! இருந்தும் கூட மெடிக்கல் சீட்  கிடைக்காமல் அழகப்பா கல்லூரியில் பி.எஸ்.ஸி (ஜியாலஜி) சேர்ந்து தமிழ் மாநிலத்திலேயே முதல் மாணவராக வெளியே வந்தார். 

    இதற்கிடையில் இளம் வயதிலேயே  1953ல் இவருக்கு திருமணம்! திருமணத்தை தன் படிப்புக்கு  தடைக்கல்லாக ஆக்கிவிடாமல் கிருஷ்ணமூர்த்தி எம்.ஏ.(ஜியாலஜி) பிரசிடென்ஸி கல்லூரியில் முடித்தார். அப்போது மெரிட் அடிப்படையில் அவருக்கு அரசாங்க ஸ்காலர்ஷிப் கிடைத்தது.

   ஆனால் அதை மேல்படிப்புக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை. வேகமாய் வளர்ந்து வந்த தினமலர் பத்திரிகையை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு!

   ``ஜியலாஜி பட்டதாரியாக அரசாங்க வேலை பார்த்து சாதிப்பதை விட பத்திரிகை துறையில் நிறைய சாதிக்கலாம். நம் மக்களுக்கும் தொண்டு செய்யலாம்’’ என்று தந்தை திரு. இராமசுப்பைய்யர் சொன்ன வாக்குகளில் இருந்த உண்மை இவரை பத்திரிகை துறை பக்கம் திருப்பிற்று.

   உப்பு உற்பத்தி தொழில் செய்து வந்த மறைந்த திரு.ராமசுப்பைய்யர் 1951ல் தினமலர் நாளிதழை ஆரம்பித்தார். முதலில் திருவனந்தபுரத்திலிருந்து அச்சான பத்திரிகை தமிழ்நாடு தனி மாநிலமான பிறகு 1957 ஆம் ஆண்டு திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டது.

   தச்சாநல்லூரில் இயங்கிய அந்த நாட்களில் இன்றுபோல வசதிகள் இல்லை. கையால் அச்சு கோர்ப்பு - சிலிண்டர் மெஷின்! மின்சார தட்டுப்பாடு! ஜெனரேட்டர்களும் கிடையாது!

   திருநெல்வேலியில் வேறு தமிழ் நாளிதழ்கள் இல்லாததாலும் மக்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தியதாலும் 3 ஆயிரம் பிரதிகளில் ஆரம்பித்த பத்திரிகை வேகமாய் உயர ஆரம்பித்தது.

   டெலிபோன், ரேடியோ மூலம் செய்திகள் சேகரித்த அந்தக் காலத்தில் நெல்லையில் முதன் முதலில் டெலிபிரிண்டரை பயன்படுத்தியது இவர்கள் தான்.

    1962 ல் மேல்நாட்டு மிஷின்கள் வரவழைத்து அலுவலகம் சென்னையில் உள்ள வண்ணாரபேட்டைக்கு மாறி- மதுரை வரை விற்பனையாயிற்று.

     இன்று என்றில்லை - கட்சிக்காரர்களின் மிரட்டல் அந்த நாட்களிலும் இருக்கவே செய்தது. அரசியல்வாதிகளின் மக்கள் விரோத செயல்களை வெளிப்படுத்தும் போது ரெளடிகளை அனுப்பி `பதம்’ பார்க்கிற கலாச்சாரத்தையும் எதிர்கொண்டு- தினமலர் வளர்ந்திருக்கிறது. எதிர்நீச்சல் தினமலருக்கு புதிய விஷயமல்ல!

திருச்சி பதிப்பு 1966ல்!

     தினமலர் தி.மு.கவுக்கு எதிரானது என கலைஞரிடம் ஒரு தவறான தகவல் தந்து - 1969 அவரது ஆட்சியில் அரசாங்க விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன.

     ஏகப்பட்ட நிதி நெருக்கடிக்கிடையில் சின்னச் சின்ன கோர்ட் விளம்பரங்களை போட்டு சமாளித்ததை கிருஷ்ணமூர்த்தி இன்றும் நினைவு கூர்கிறார்.

     1972ல் எம்.ஜி.ஆர் தனியாய் கட்சி ஆரம்பித்த போது தினமலருக்கும் ஒரு  திருப்புமுனை! பரபரப்பாய் விற்பனை! அது வளர்ந்து வளர்ந்து சென்னை, மதுரை, ஈரோடு... என பரவி இன்று 10 பதிப்புகள்!

   படித்தது ஜியாலஜி என்றாலும் கூட கிருஷ்ணமூர்த்திக்கு தமிழ்மேல் ஆர்வம் அதிகம். தமிழ் எழுத்துகளை கம்போஸ் செய்வதில் ஏன் இத்தனை சிரமம் என இவர் ஆராய்ச்சியில் இறங்கினார். அதற்கு தமிழாசிரியர் ராமமூர்த்தி இவருக்கு உதவி செய்தார்.

    கல்வெட்டு, வட்டெழுத்து பற்றி இவர் படித்து, நேரில் போய் பார்த்து ஆராய்ச்சி செய்து வட்டெழுத்து பற்றி மூன்று புத்தகங்களுக்கு எழுதியிருக்கிறார்.

    இந்த ஆர்வமே இவர் பின்னாளில் நாணயங்கள் பற்றிய ஆராய்ச்சியில் இறங்க காரணமாய் அமைந்தது.

     கிருஷ்ணமூர்த்திக்கு தமிழ் எழுத்து சீர்திருத்த இயக்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டு 1978ல் ஏகப்பட்ட எதிரிப்புக்கிடையே பெரியாரின் எழுத்தை தினமலரில் புகுத்தினார்.

     1987ல் கம்ப்யூட்டர் வந்த பின்பு- தமிழ் எழுத்து கம்போஸிங்கிற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்த நிலைமை.

      கிருஷ்ணமூர்த்தி பூனா கம்பெனியுடன் சேர்ந்து சாஃப்ட்வேர் உருவாக்கி, அவர்களுக்கு இலவசமாய் ஐந்து  ஃபான்ட்கள் தயார் செய்து கொடுத்தார். பூனா கம்பெனி அவற்றை வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்திருக்கிறது.

      ஆர்.கே.தயாரித்துத் தந்த பிரபலமான ஸ்ரீலிபி எழுத்தும், இவரது தயாரிப்பான கீபோர்டும்தான் இன்னமும் தினமலர் அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

       ``அப்பா ராமசுப்பைய்யர் போட்ட அஸ்திவாரம் எங்களுக்கு பலமாய் இருக்கிறது. அப்பா, தமிழ் அபிமானி, மனிதாபிமானியும் கூட அடித்தள மக்களின் தேவைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பது அவரது குறிக்கோள்.

        இப்போது என்றில்லை, அந்த நாட்களிலும், தினமலர் சுட்டிக்காட்டியுள்ள மக்கள் பிரச்னைகளைப் படித்து ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்திருப்பது- சந்தோஷமான வெற்றி.

நன்றி   தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி                
                     
                                                                     தொடரும்....................
                                                                     

                            

முன்னேறு!முன்னேற்று! (சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்) தொடர் 2


 அது அப்படியே மனதிலும் இரத்தத்திலும் ஊறிப்போச்சு, உழைக்கணும், முயற்சிக்கணும். வளரணும், ஏதாவது செய்து முன்னுக்கு வரணும்.உயரணும். மத்தவங்களையும் உயர்த்தணும்னு ஆரம்பித்த ஓட்டம் இன்னும் தொடர்கிறது!’’

  உதவியாளர் தேநீர் கொண்டு வர ``எடுத்துக்கங்க’’ என்கிறார். அது ஏலம் –எலுமிச்சை-கிம்பு –இஞ்சி கலந்த தே(ன்)நீர்!

   கஷ்டப்பட்டு முன்னுக்கு வருபவர்களிடம் இரண்டு விதமான மனோபாவங்களைப் பார்க்கலாம். ``நாம் கஷ்டப்பட்டு வளர்ந்தோமே –இவர்கள் எளிதாய் மேலே வந்துவிடுவதா –இவர்களும் கஷ்டப்படட்டுமே’ என ஒரு ரகம்.

   சந்தர்ப்ப –சூழ்நிலையில் நாம் கஷ்டப்பட வேண்டி வந்தது. அந்தக் கஷ்டம் பிறருக்கு வந்துவிடக் கூடாது –இவர்கள் வளர எல்லா உதவியும் செய்து தர வேண்டும் என்று நினைப்பது அடுத்த ரகம்.   சீனிவாசன் ஐயா நிச்சயமாய் இரண்டாம் ரகம்தான்.

   உலகத்தில் ஜனங்களுக்கு மிகமிக அவசியமாய்த் தேவைப்படுவது கல்வி அறிவுதான் அது இல்லாமல் –கிடைக்காமல்தான் நம் நாட்டில் பெரும்பாலும் கீழ் மட்டத்திலேயே அல்லாடுகிறார்கள். அதுவும் குறிப்பாய்ப் பெண்கள். இந்த பகுதியில் சரியான கல்வி நிறுவனங்கள் இல்லாததால் பெண்களைப் படிக்க வைப்பதென்பதே குறைவாயிருந்தது. டவுனுக்கு அனுப்ப வசதிப் பிரச்சனை! அடுத்தது –வெளியே படிக்க வைப்பது பாதுகாப்பில்லாதது என்கிற  எண்ணம்.

  இவற்றிற்கு வழிவகுப்பதுதான் இவர்களின் நோக்கம் அந்த நோக்கத்தில் வெற்றி கண்டிருக்கிறார்கள். இல்லாவிட்டால் வறண்ட பகுதியில் இத்தனை கல்வி நிறுவனங்கள் சாத்தியமாகுமா?

   ஏறக்குறைய 30 ஆயிரம் மாணவ மாணவியர்! எட்டாயிரத்திற்கும் மேல் விடுதியில்! 150 பஸ்கள்! இவற்றில் பெரும்பாலும் இலவசம்! பஸ்ஸிற்கும், கல்விக்கும் பெரிய அளவில் கட்டணங்கள் கிடையாது! ஏழை மாணவர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள்!

   இவற்றுடன் தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் அருகே தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை. அங்கு இலவச சிகிச்சை! பெரம்பலூர் மற்றும் அக்கம் பக்கமிருந்து நோயாளிகல் பயணிக்க வாகனங்கள். அவையும் இலவசம்!.

                                                         (2)

  சீனிவாசனின் சொந்த ஊர்,  புகுந்த ஊர் எல்லாமே பெரம்பலூர் அருகேதான். இவரது தந்தை அருணாசல ரெட்டியாரின் ஊர் பெரகம்பி எனும் கிராமம். அப்பாவுக்கு மூன்று உடன் பிறப்புகள். அங்குச் சாதாரண விவசாயக் குடும்பம்.

  சொந்த ஊரில் பிழைக்க முடியாமல், அப்பா, அருகில் புது நடுவலூர் எனும் கிராமத்திற்குக் குடி பெயர்ந்திருந்தார். அங்கும் விவசாயம் தான்! அங்கும் சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்லை!

  சீனிவாசனுடன் பிறந்தவர்கள் 5 பேர்கள். இவர் 6வது கடைசி, மூன்று உடன்பிறப்புகல் சின்ன வயதிலேயே காலரா நோய் தாக்கி இறந்து போனார்கள்.

   இங்கே அவசியம் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்.

   சீனிவாசனின் இன்றைய வளர்ச்சி –எதைத் தொட்டாலும் சிறக்கும் –சிறப்பிக்கும் –வெற்றி பெறச் செய்யும் பாங்கு இவற்றை வைத்து இவர் `அதிர்ஷ்டசாலி’ என்று பேசுபவர்கள் உண்டு.

  அதிர்ஷ்டம் –துரதிர்ஷ்டம் இவற்றில் இவருக்கு நம்பிக்கையிருந்ததில்லை. இவரது மூலதனம் –உழைப்பு –முயற்சி –போராட்டம் – தன்னம்பிக்கை!

  ஊரோடு ஒத்துக் கும்பலாய்ச் செயல்படுதல் –காற்றுள்ள போது தூற்றிக் கொள்ளுதல் –அவையோடு அடித்துச் செல்லப்படுதல் –ஆற்று நீரோட்டத்தில் கலத்தல் இப்படி எந்தவித `சாமர்த்திய’மும் இவரிடம் இருந்ததில்லை.

  வாழ்க்கை முழுக்கவே இவருக்கு எதிர் நீச்சல்தான்! வெள்ளம், கடற்சுழற்சி, சுனாமி என்று எப்படி வர்ணித்தாலும், அவற்றிற்கு எதிராய்ப் போராடி –சோதனைகள் வர வர அவற்றை எதிர்த்து முன்னேற வேண்டும் என்கிற வைராக்கியம்!

   அந்தந்தக் காலகட்டத்தில் தோல்விகளும், பிரச்சனைகளும் மனச் சங்கடத்தை  ஏற்படுத்தினாலும் கூட அதற்காக இவர் தளர்ந்து போவதில்லை.

   எதிர்ப்பு இவருக்கு எழுச்சி தரும். வெகுண்டெழ வைக்கும் உந்து சக்தி! எத்தனை சிக்கல்கள் வந்தாலும் அவற்றை மீறி வெல்ல வேண்டும். வென்று காட்ட வேண்டும் என்கிற ஊக்க மருந்தாகவே இவர் தடைகளையும், எதிர்ப்புகளையும் எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்.

   கவனத்தை எந்த நேரத்திலும் வேறு எதிலும் கசிய விடுவதில்லை. ஒரே சிந்தை! ஒரே செயல்! அதனால் இவருக்கு எதிரிகளே கிடையாது. எதிரிகளாக –போட்டியாளராக யாரையும் நினைப்பதுமில்லை. தொழில் போட்டியாக ஆரம்பிப்பவருக்குக் கூட கை கொடுத்துத் தூக்கிவிடுவதுதான் இவரது சுபாவம்.

   இங்கே யாரும் யாருக்கும் எதிரியில்லை. போட்டியாளர்கள் இல்லை. அவரவர்களுக்கு உள்ளது அவரவர்க்கு! முதலில் தன்னை உணரனும். தன் பலம் அறியணும். அதற்குக் களம் அமைத்து அதற்கு ஏற்றபடி செயல்படணும். எந்தத் தருணத்திலும் நாணயம் தவறக்கூடாது நன்றி மறத்தல் கூடாது.

   வாழ்க்கையில் பணம் –காசு –சொத்து சுகம் இல்லாமல் இருக்கலாம். நம்பிக்கை –நாணயம் தவறக் கூடாது. அதில் உறுதி காப்பவர்.

   இவர் தப்பான வழிக்குச் செல்வதில்லை. கூட இருப்பவர்களும் அப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார். அறிவுறுத்துவார். அதே போல பொய் பித்தலாட்டம் கூடாது. வாக்குக் காப்பாற்ற வேண்டும்.

   ஓரிடத்தில் ஒரு உதவியோ, பணமோ பெற்றால் அதைத் திருப்பிச் செலுத்துகிற மனப்பக்குவம் வேண்டும். அந்த உத்தரவாதமும் பொறுப்பும் இல்லாதபோது பிறரிடம் கைநீட்டவே கூடாது!

   இந்த மாதிரி இளம் பருவத்திலேயே இவருக்குள் ஆயிரம் சிந்தனைகள் ஓடுவதுண்டு. ரத்தத்தில் கீதையும், புத்தரும், விவேகானந்தரும் கலந்திருந்தனர்.

   எந்த அளவிற்கு அதிர்ஷ்டக்காரர் –எப்படியெல்லாம் அதிர்ஷ்டமும், ராசியும் அவருக்கு உறுதுணையாயிருந்திருக்கிறது?

   சீனிவாசன், பத்து மாத குழந்தையாயிருக்கும்போதே தாய் பெரியம்மாள் இறந்து போனார், அம்மாவிற்கு என்ன நோய் –என்னாயிற்று என்று தெரியாது –திடீரென வயிறு வீங்கி –அக்கம்பக்கம் போதுமான மருத்துவமனையில்லாமல் –டவுனுக்குக் கொண்டு போய்ச் சிகிச்சை கொடுக்க முடியாமல் இறந்து போனார். அம்மா இறந்த அதிர்ச்சி –துக்கத்தில் உழன்று அதிலிருந்து மீள முடியாமலேயே அடுத்த இரண்டு மாதத்தில் அப்பாவும் இறப்பு.

   வீட்டில் கடைசிப் பிள்ளையாய்ப் பிறந்து –பெற்றோர்களின் அடையாளமே தெரியாமல் அவர்களின் முகங்களைக் கூட ஞாபகப் படுத்திக் கொள்ள முடியாத அளவிற்கு `அதிர்ஷ்டசாலி’ இவர்.

   அடுத்த இரண்டு வருடங்களில் அக்கா  ஒருவரும்கூட இறப்பு!

   எந்தவித ஆதரவுமின்றி கைக்குழந்தையாயிருந்த இவரை எடுத்து வளர்த்தது பாட்டி! தாய்வழிப் பாட்டி! அவர் கண்ணாப்பாடி எனும் கிராமத்திலிருந்தார். அவரும் தாத்தாவை இழந்து தனி மரமாசு!

   அங்கே சமாளிக்கக்கூடிய அளவிற்குக் கொஞ்சம் வசதி இருந்தது. அதன்பிறகு இவரது குடும்பத்திற்கு எல்லாமே பாட்டிதான்! அன்பு –ஆதரவு –நல்லொழுக்கம் –நற்சிந்தனைகளை போதித்தல் – ஊக்கம் –உற்சாகம் தந்து வளர்த்த்தெல்லாம் அவர்தான்.

   பாட்டி, தன் பேரப்பசங்கள் எல்லோரையும் ஒரே மாதிரி சீராட்டி, பாராட்டித்தான் வளர்த்தார். ஆனால் இவரது அண்ணன்கள் இருவர் பொறுப்பாய் இல்லை. வீட்டைப் பகைத்துக் கொண்டு எதிர்மறையாய்ச் செயல்பட ஆரம்பித்தனர். வேண்டாத கூட்டுச் சேர்ந்து ஊதாரித்தனம்!

Monday, July 23, 2012

ஞான முத்திரை : அறிவு முத்திரை




ஞானம் என்றாலே அறிவுதானே, இந்த முத்திரை அறிவைப் பெருக்கும். அறிவு முத்திரை என்றும் இதனை அழைக்கலாம். 
முறை: கட்டை விரலின் நுனியானது சுட்டு விரலைத் தொடுமாறு மற்றைய விரல்கள் நீட்டப்பட்டும் அமையத் தியானம் செய்ய வேண்டும். நீங்கள் இருந்துகொண்டோ அல்லது நின்றுகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ செய்யலாம். 
இடம்: எந்தவொரு அமைதியான இடமும் இதற்கு உகந்தது.
நேர அளவு: இந்த முத்திரைக்கு குறிப்பிடும்படியாக நேர அவகாசம் தேவையில்லை, எந்த நேரத்திலும் இதனைச் செய்யலாம்.
பலன்கள்: அறிவு முத்திரையல்லவா, அறிவைக் கூட்டும். கட்டை விரலின் நுனியானது அகஞ்சுரப்பிகளின் (முக்கியமாக கபச்சுரப்பி – pituitary ) மையமாக விளங்குகிறது. விரல்கள் அமுக்கப் படுவதால் இந்தச் சுரப்பிகள் நன்கு வேலை புரிகின்றன. ஆகவே இந்த முத்திரை,
  • ஞாபக சக்தியைக் கூட்டும், மூளையைக் கூர்மையாக்கும்.
  • கிரகிக்கும் செயற்பாட்டைக் கூட்டும், மேலும் தூக்கமின்மையை நீக்கும்.
  • ஒழுங்கான பயிற்சியின் மூலம் மன உள நோய்களான ஹிஸ்டீரியா, மன எரிச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும். மனம் சாந்தமடையும்.

யோக முத்திரைகள்: முன்னுரை


பெரும்பாலான உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் ஐந்து வகை மூலங்களின் சமத்துவமின்மையால் ஏற்படுகிறது. பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியன சமநிலையில் இருப்பதற்குத் தியானம் உதவுகிறது. இந்த ஐந்து வகை மூலங்கள் வேறுவிதமாக நிலம், நீர், நெருப்பு, மரம், உலோகங்கள் என சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் கூறப்படுகிறது.
இந்த ஐந்து வகை மூலங்களும் ஒன்றுக்கொன்று பூரண தொடர்புடையதாக காணப்படுகிறது. மரம், நெருப்பு, நிலம், உலோகம், நீர், மரம் என்னும் ஒன்றுகொன்று தூண்டும் விதத்திலும் மற்றும் நிறுத்தும் விதத்திலும் காணப்படுகிறது. இவை எல்லாம் உடலின் இயக்கத்திற்கு இன்றியமையாதது, யோகாசனம், தியானம் செய்வதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தி அவற்றின் சமநிலையைப் பேணுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் சீர்படும். இவை சிலவகை முத்திரைகள் மூலம் பெறப்படுகிறது. ஒழுங்கான முத்திரை உபயோகமும் தியானமும் எம் வாழ்வில் ஆரோக்கியத்தை உண்டாக்கும். 
நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலங்களைக் குறிப்பிடுகின்றன.
கட்டை விரல் - நெருப்பையும் 
சுட்டுவிரல் - காற்றையும் 
நடுவிரல் - ஆகாயத்தையும் 
மோதிர விரல் - நிலத்தையும் 
சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன.
பழைய காலங்களில் முனிவர் நாட்கணக்கில் கடும் தவம் புரிந்தனர் என்றெல்லாம் கேள்விப்படுகின்றோம் அவர்களுக்கு எந்தவிதமான நோயும் அணுகாமல் இருப்பதற்குரிய காரணிகளுள் இதுவும் ஒன்றாக இருந்திருக்கலாம். முத்திரை இந்து சமயத்திலும் பௌத்தமதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன. முத்திரைகளைப் பற்றிய படிப்பு தத்வ யோகம் ( Tatva Yoga ) என அழைக்கப்படும்.
இனி, முத்திரை வகைகளைப் பற்றிப் பார்ப்போம். பொதுவாக தியானத்தில் 20 – 45 நிமிடங்கள் உங்களுக்குத் தேவையானதென நீங்கள் கருதும் முத்திரையைத் தெரிவு செய்து கொண்டு ஆழ்ந்த சுவாசத்தில் ஈடுபடுதலே போதுமானதெனக் கருதப்படுகிறது, எனினும் சிலமுத்திரைகளுக்கு மந்திரங்களைப் பயன்படுத்துவர்.
                                          
 நன்றி:- சாந்தன்.கோம்

Sunday, July 22, 2012

Java Programming Tutorial - 2 - Running a Java Program

Java Programming Tutorial - 1

சிந்து சமவெளி நாகரீகமும் சரஸ்வதி நதியும்


சிந்துசமவெளி நாகரீகம் என அழைக்கப்படும் நாகரீகத்தை பேணிக்காத்ததில் "சரஸ்வதி நதி" பெரும் பங்கு ஆற்றியுள்ளது. சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட "புதிய ஆய்வில்" இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

"ஹரப்பா நாகரீகத்தின் நீர் வழி கட்டமைப்பு", என்னும் புதியஆய்வு சமீபத்தில் ஒருமுடிவுக்கு வந்துள்ளது. சிந்து சமவெளி நாகரீகத்தை ஆறுகள்தான் காப்பாற்றி வந்தன. அந்த ஆறுகளை வளப்படுத்தி வந்த "பருவ மழைகள் "கிழக்குத் திசை" நோக்கி இடம் பெயர்ந்ததால் சிந்து சமவெளி நாகரீகம் அழிந்துவிட்டது. இதைத்தான் அந்த ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தி உள்ளன. ஆறுகள் வற்றிப்போனதால் 4000 வருடங்களுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரீகம் அழிந்துபோனது. 2003 மற்றும் 2008 ஆண்டுகளுக்கு இடையே அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ருமானியா ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தஆய்வை மேற் கொண்டனர். சிந்து சமவெளி நாகரீகம் அழிந்ததற்கு "விதிவசத்தால் நேர்ந்த கொடுமையான "அயல் நாட்டுப் படையெடுப்புதான்" காரணம் என்று இதுவரை பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது. அதை இந்த ஆராய்ச்சி முடிவுகள் பொய் என நிரூபிக்கின்றன. ஆறுகள் தங்கள்போக்கை மாற்றி கொண்டதால் தான் சிந்து சமவெளி நாகரீகம் அழிந்தது என்னும் வாதத்தையும் இந்தகண்டுபிடிப்பு பொய் ஆக்குகிறது. இப்போது சிந்து சமவெளி நாகரீகம் என்று நாம் அழைக்கும் நாகரீகம் சரஸ்வதி நதியின் கரையில் அமைந்து இருந்தது என்னும் கருத்துக்கு இந்த ஆய்வு வலு சேர்க்கிறது.

சரஸ்வதி நதி புராணத்திலும், வேதத்திலும் குறிப்பிடப்படுகிறது. சிந்து சமவெளி நாகரீகத்தின் அடையாளங்களாக இதுவரை பல தொல்பொருள் விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 70 சதவீதத்திற்கும் மேலானவை இந்த சரஸ்வதி நதிக்கரையில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்போது இந்த சரஸ்வதி நதிவறண்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 3000 அகழ்வாராய்ச்சி படிமங்களில் 2000 கும் மேற்பட்டவை சிந்துவெளி எல்லைக்கு அப்பால் இருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவைகளில் இருந்துதான் சிந்து வெளிநாகரீகம் என்ற பெயரே வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வேறு வார்தைகளில் சொல்வது என்றால் சிந்துவெளி நாகரீகம் என்று அழைக்கப்படுவது உண்மையில் பெரும்பகுதியில் சரஸ்வதிநதி நாகரீகம்தான். இருந்தும் நமக்கு சொல்லப்பட்டது போல், இந்த நாகரீகத்தை சிந்து சமவெளி நாகரீகத்துடன் மட்டுமே சம்பந்தப்படுத்தி நாம் பேசுகிறோம். அப்படித்தானே பள்ளிக் கூடங்களிலும் சொல்லிக் கொடுக்கிறோம்? பல வருடங்களாக இடதுசாரிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ள நமது அரசாங்கம், சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே சரஸ்வதி நதி என்று ஒன்று இருந்ததைக் கூட ஒப்புக் கொள்ளவில்லை. அப்படி இருக்கும்போது உலகின் மிகப்பண்டைய நாகரீகத்தை சரஸ்வதி நதிக்கரை உருவாக்கியது என்னும் உண்மையை அவர்கள் எப்படி ஒப்புக் கொள்வார்கள்? மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் எச்சூரி சமீப வருடங்களில் இந்தியாவின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை "தொலைந்து போன சரஸ்வதி நதியை" ஆராய்வதில் நேரத்தையும், பணத்தையும் வீணடித்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றார். 2006 ஆம் ஆண்டில் சீதாராம் எச்சூரி போக்குவரத்து, சுற்றுலா, கலாச்சார பாராளுமன்ற நிலைக்குழு தலைவராக இருந்தார். அப்போது அவர் பின்வருமாறு கூறி உள்ளார்.

"இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை தனக்கு இடப்பட்ட பணியில் இருந்து மாறிப்போகிறது. தொல்பொருள் விஷயமாக 'விஞ்ஞான பூர்வ ஆராய்சிகளை மேலேடுத்து செல்வதில் அது தவறி விட்டது. விஞ்ஞான பூர்வ இலாகாவான தொல்பொருள் ஆராய்ச்சி துறை இந்த விஷயத்தில் சரியாக செல்லவில்லை".

இப்படி திரிக்கப்பட்டாலும் கூட, விஞ்ஞான பூர்வ ஆராய்சிகள் "சரஸ்வதி" ஒரு மாபெரும் நதியாக இருந்ததை சந்தர்பங்கள் நிரூபித்துள்ளன. நிலத்துக்கு அடியில் ஓடிக்கொண்டு இருந்த நீர்வழிகளைக் குறித்து "பல வரைபடங்கள்" இன்றும் காணக் கிடைக்கின்றன. அவைகளை எல்லாம் நன்கு ஆராய்ந்துள்ள நிபுணர்கள் சரஸ்வதி நதி 1500 கிலோமீட்டர் நீளமும், 3 இல் இருந்து 15 கிலோமீட்டர் வரை அகலமும் கொண்டு இருந்தது என்று கண்டு பிடித்துள்ளனர்.

நேஷனல் அகடமி ஆப் சயின்ஸ் நிகழ்வுகள் என்பதில் சரஸ்வதி நதி குறித்த மிக சமீபத்திய கண்டு பிடிப்புகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. சரஸ்வதி நதி இருந்தது, இந்த பண்டைய நாகரீகம் செழிக்க சரஸ்வதி நதி காரணமாக இருந்தது என்பது அந்த கண்டு பிடிப்புகளில் விளக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி நதி இமயமலையில் இருந்து பருவமழை காரணமாக எப்போதும் பெருக்கடுத்து வரும் தண்ணீரை சார்ந்து இருக்கவில்லை என்று அந்த கண்டுபிடுப்புப் பிரசுரம் கூறுகிறது. சரஸ்வதி நதி உள்பட அந்த நாகரீகப் பிரதேசத்தில் இருந்த நதிகள் அனைத்தும் மிகப் பெரியதாக, மிகவும் ஜீவ நதிகளாகவும் இருந்தன என்றும் அந்த ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இந்த புது கண்டு பிடிப்பால் அரசாங்கத்திற்கு "புதிய சிந்தனை உருவாகுமா"? சிந்து சமவெளி நாகரீகம் என்று இப்போது அழைக்கப்படும் நாகரீகத்தை சரஸ்வதி – சிந்து – நாகரீகம் என்று அதிகாரபூர்வமாக "புதுப் பெயரிட்டு அழைக்கும் வேளை வந்து விட்டதை அரசு ஒப்புக் கொள்ளுமா? ஆனால் இடதுசாரிகள் காலம் காலமாக இதை மறுத்து வந்துள்ளது போல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் இந்த உண்மையை பல வருடங்களாக எற்றுக் கொள்ளமல்தான் இருந்து வருகிறது. அப்போது மத்திய அமைச்சரவையில் கலாச்சார துறை மந்திரியாக் இருந்த ஜெயபால் ரெட்டி, "இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், மண்மூடிப்போன எந்த நதி பற்றியும் கண்டு பிடிக்கவில்லை என்று பாராளுமன்றத்தில் சொன்னார். அவருக்கும், அவரது அரசுக்கும், சரஸ்வதி நதி என்பது கற்பனை மனங்களில் உருவானது; அந்த நதி பற்றி புராணங்கள்தான் இன்னும் அதிக கற்பனையோடு பேசுகின்றன என்ற எண்ணம் உள்ளதை ஜெயபால் ரெட்டியின் பேச்சு எடுத்துக் காட்டுகிறது. சரஸ்வதி நதி பாரம்பரிய திட்டம் என்னும் திட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உருவாக்கி இருந்தது. அதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கலைத்துவிட்டது. செப்டம்பர் 2003 இல் இந்த திட்டத்திற்கு 32 கோடிகள் செலவாகும் என்று தோரயமாக கணக்கிடப்பட்டு இருந்தது. அதை காங்கிரஸ் கூட்டணி அரசு எவ்வித இரக்கமும் காட்டாமல் கைவிட்டது. இன்று 5 கோடிகளாக குறைத்து. அதாவது சரஸ்வதி நதி பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு தொடரவிடாமல் காங்கிரஸ் கூட்டணி அரசு செய்து அந்த திட்டத்தையே குழி தோண்டிப் விட்டது புதைத்து.

சரஸ்வதி நதி என்பதே இல்லை என்று கூறிட காங்கிரஸ் கூட்டணி அரசு முழு முயற்சி செய்தாலும், உண்மைகள் அவ்வப்போது வெளிவந்துகொண்டுதான் உள்ளன. சரஸ்வதி நதி இருந்தது என்பதற்கும், சிந்து சமவெளி நாகரீகம் என்று அழைக்கப்படும் நாகரீகம் தழைக்க சரஸ்வதி நதி ஆற்றிய இன்றியமையாத பங்கையும் காங்கிரஸ் கூட்டணி அரசால் ஒதுக்கித்தள்ள இயலாத வகையில் இப்போது உண்மைகள் வெளி வந்துள்ளன. இப்போது கண்ணுக்கு தெரியாமல் உள்ள சரஸ்வதி நதி இருந்ததற்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை என்ற தன்னுடைய முந்தைய நிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை இப்போது காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி ஏற்ற பின்பு முதல் ஐந்து வருடங்களின் மத்தியில், "விஞ்ஞானிகள் நீர் வழி பாதைகளை கண்டறிந்துள்ளனர். அவை "சந்தேகத்திற்கு இடமின்றி" (இந்த பதம் ஆராய்ந்த விஞ்ஞானிகளால் பயன்படுத்தப்பட்டது). "வேத கால சரஸ்வதி நதி இருந்ததை நிரூபிக்கின்றது" என்று காங்கிரஸ் கூட்டணி அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ராஜ்யசபாவில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. "சரஸ்வதி நதி பூமிக்கு கீழே ஓடுவதை" சாடிலைட் புகைப்படங்கள் நிரூபித்து உள்ளனவா"? அப்படி இருந்தால் அந்த மிகவும் இன்றியமையாத நீர் வழிப் பாதைகளை நம் நாட்டு தேவைக்காக ஏன் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது" என்பதுதான் ராஜ்ய சபாவில் கேட்கப்பட்ட கேள்வியாகும். காங்கிரஸ் கூட்டணி அரசு சரஸ்வதி நதி இருந்ததை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர் என்னும் உண்மையை அந்த கேள்விக்கு பதில் அளித்து ஒப்புக் கொண்டுள்ளது.

ஜோத்பூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் உள்ளது. ராஜஸ்தான் அரசு நிலத்தடி நீர் துறையும், இந்த விண்வெளி ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து ஆய்வுகளை நடத்தின.அதன் முடிவுகள் "நுண்ணறிவுக்கான இந்திய சமூகத்தின் இதழில்" வெளியிடப்பட்டுள்ளது. அந்த முடிவுகளை மத்திய நீர் வழி அமைச்சரகம் இப்போது "எழுத்து பூர்வமாக" வெளியிட்டுள்ளது. பிற விஷயங்களைத் தவிர பின் வருவனவற்றையும் அந்த ஆராய்சிகளை செய்தவர்கள் கூறியுள்ளனர்.

"ஹரப்பா நாகரீகத்திற்கு முந்தைய, ஹரப்பா நாகரீகத்தை – ஹரப்பா நாகரீகத்திற்குப் பிறகு, என பிரித்து விண்வெளி புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த புகைப்படங்கள் மூலம், இந்த நாகரீகத்தின் வடகிழக்குப் பகுதியில், வேதசரஸ்வதி நதியின் வலிமையான, தொடர்ச்சியான, கழிவு நீர்த் திட்டம் இருந்துள்ளது தெரிகிறது. அகழ்வாரய்சிகளும் இதை உறுதிப் படுத்துகின்றன. இதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை... வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ள சரஸ்வதி நதி பற்றிய வர்ணனைகளுடன் இந்த ஆராய்ச்சி முடிவுகளும், விண்வெளி புகைப் படங்களும் மிகச் சரியாக ஒத்துப் போகின்றன.

இதில் விசேஷம் என்னவென்றால், இந்த விஷயம் குறித்து இந்திய அகழ்வாராய்ச்சி துறையின் தேசிய பொருட்காட்சி வெளிப்படையாக அறிவித்துள்ளது. தேசிய பொருட்காட்சி அலுவலகத்தில் "ஹரப்பா நாகரீகம்" என்று ஒரு அரங்கு உள்ளது. அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நிதானமாக, அடுத்தடுத்து இந்த மக்கள் ஒரு நாகரீகத்தை உருவாக்கினர். இந்த நாகரீகம், ஹரப்பா நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம், சிந்து – சரஸ்வதி நாகரீகம் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இவ்வாறு சொல்லிவிட்டு சரஸ்வதி நதியின் முக்கியத்துவம் குறித்து அந்த அறிவிப்பு இவ்வாறு மேலும் குறிப்பிடுகிறது. "இப்போது ஒரு விஷயம் மிகவும் தெளிவாகி விட்டது. ஹரப்பா நாகரீகம் என்பது இரண்டு நதிகளின் நன்கொடை ஆகும். சிந்து, சரஸ்வதி என்னும் இரு நதிகளின் நன்கொடைதான் ஹரப்பா நாகரீகம் ஆகும். இது வரை நம்பப்பட்டது போல், ஹரப்பா நாகரீகம் சிந்து நதியின் நன்கொடை மட்டுமே அல்ல ".

சர்வதேச விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த புது ஆராய்ச்சிக்கு மற்றொரு பரிமாணமும் உள்ளது. அந்த விரும்பத்தகுந்த விஷயத்தையும் இங்கு குறிப்பிடுவது அவசியம். இந்த பண்டைய ஹரப்பா நாகரீகம் அழிந்து போக அந்நிய ஆக்ரமிப்புகள், படையெடுப்புகள் காரணமாக இருந்தன என்னும் வாதத்தை இந்த புதிய கண்டுபிடிப்புகள் முற்றிலும் நிராகரிக்கின்றன. ஆனால் இந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு பல காலம் முன்பாகவே நவரத்னா ராஜாராம் "சரஸ்வதி நதியும், வேத நாகரீகமும்" என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். அதில் சரஸ்வதி நதி இருந்தது என்ற கண்டுபிடிப்பால், ஆர்யர்கள் இந்தியாவை ஆக்ராமித்தனர் என்ற ஆரிய திராவிட இனவாதம் முற்றிலும் பொய் என்று நிருபிக்கப்பட்டுள்ளது, என

நவரத்னா ராஜாராம் குறிப்பிட்டுள்ளார். சரஸ்வதி நதி இருந்தது என்ற கண்டு பிடிப்பு இந்த பொய்க்கு மரண அடி கொடுத்துவிட்டது என்று அவர் சரியாக குறிப்பிட்டுள்ளார்.

ஆரிய திராவிட இனவாதம் கூறுவது என்ன? ஆரியர்கள் இந்தியாவை ஆக்ரமித்தபோது அங்கு ஹரப்பா நாகரீகம் இருந்தது. அந்த ஹரப்பா நாகரீகம் வேத சம்பந்தம் கொண்டது அல்ல. அந்த நாகரீகத்தை ஆரியர்கள் அழித்துவிட்டு, வேத நாகரீகத்தை ஸ்தாபித்தனர் என்பதுதான்.

ஆனால் சரஸ்வதி நதி குறித்த பல விவரங்கள் வேதத்தில் உள்ளது. வேத காலத்தில் சரஸ்வதி நதி ஓடியுள்ளது. எனவே வேத காலமும், ஹரப்பா நாகரீக காலமும் இணைந்தே இருந்திருக்க வேண்டும், எனவேதான் ராஜாராம் தனது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் சரியாக.

"ஹரப்பா நாகரீகம் என்பது ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சரஸ்வதி நாகரீகம்தான்" , அப்படி என்றால் பொருள் என்ன? ஹரப்பா நாகரீக மக்கள் வேத நாகரீகத்தை பின்பற்றியவர்கள்.

எனவே ஆரிய திராவிட இனவாதம் எவ்வளவு பெரிய ஹிமாலயப் பொய், பித்தலாட்டம் என்பது இதில் இருந்து தெளிவாகிறது. நிபுணர்கள் ஹரப்பா நாகரீகம் ஆக்ரமிப்பால் அழிந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை, அது ஆரியர்களால் அழிக்கப்பட்டது என்பதற்கு சுத்தமாக எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிடுவது மிகச் சரியாகும். ஆரியர்கள் வெளி நாடுகளில் இருந்து இங்கு வந்தனர் என்பதற்கும் ஆதாரம் எதுவும் இல்லை. ஹரப்பா நாகரீகம் சிந்து மற்றும் சரஸ்வதி நதிக் கரைகளில் செழித்த நாகரீகம். அது வேத சம்பந்தம் கொண்டது. அந்த நாகரீகம் அழிந்ததற்கு "சரஸ்வதி நதி" வற்றிப்போனதே முக்கிய "காரணமே தவிர எந்த ஒரு அன்னியப் படையெடுப்பும் அல்ல. இதை ராஜாராமும் மற்ற பலரும் தெளிவாக்கி உள்ளனர்.

சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியில் சரஸ்வதி நதியின் உற்பத்தி ஸ்தானம் எது என்பது மட்டும் இன்னும் கேள்விக் குறியாக உள்ளது. சரஸ்வதி நதி ஹிமாலய நதி அல்ல என்று அந்த ஆராய்ச்சி கூறுகிறது. ஆனால் பல நிபுணர்கள் சரஸ்வதி நதி கார்வால் (ஹிமாலயாவில் உள்ளது) பகுதியில் உள்ள "ஹர – கி – துன்" வீழ்ச்சியில் இருந்து உற்பத்தி ஆகிப் பெருகி வந்தது என்று குறிப்பிடுகின்றனர். இது விஷயமாக இறுதி வார்த்தை என்ன என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்
ஆங்கிலத்தில்: ராஜேஷ் சிங்
தமிழாக்கம்: லா.ரோஹிணி
நன்றி: tamilthamarai

Friday, June 29, 2012

நேதாஜி பற்றி சுவையான சிறு குறிப்புகள்

  • இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறியச் செய்தவர். இந்தியாவுக்கு என முதல் ராணுவத்தைக் கட்டமைத்தவர். காந்தியை எதிர்த்த காங்கிரஸ் கலகக்காரர். தன் மரணத்தையே மர்மமாக்கியவர். அவரது வாழ்க்கையின் திறந்த பக்கங்களில் இருந்து...
  • ஜனவரி 23, 1897-ம் வருடம் ஜானகிநாத் போஸ்- பிரபாவதி தேதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். குடும்பத்தின் 14 குழந்தைகளில் 9-வது குழந்தை போஸ்!
  • கல்கத்தா மாநிலக் கல்லூரியில் படிக்கும் போது, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைச் சொன்னதால், பேராசிரியர் ஓடென் என்பவரைத் தாக்கினார் போஸ், அதற்காக, கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். சுதந்திரப் போராட்டத்துக்கான நேதாஜியின் முதல் அடி அது!
  • லண்டனில் எனக்குக் கிடைத்த ஒரே சந்தோஷம் என்ன தெரியுமா? வெள்ளைக்கார சேவர்கள் எனது ஷீக்களுக்கு பாலீஷ் போட்டுக் கொடுத்துதான். அது ஓர் அற்ப மகிழ்ச்சியை அளித்தது. மற்றபடி வெள்ளையர்களின் ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவை எனக்குப் பாடமாக அமைந்தன!”-ஐ.சி.எஸ் தேர்வு எழுத லண்டன் சென்று திரும்பியதும் இப்படிச் சொன்னார் நேதாஜி!
  • ஐ.சி.எஸ். தேர்வில் தேறிய போஸ், லண்டனில் பொறுப்பை ஏற்றிருந்தார். அப்போதுதான் இந்தியாவின் ஜாலியன் வாலாபாக் படுகொலை கொடூரம் அரங்கேறியது. அது அவருக்குள் விடுதலை வேட்கையைத் தூண்டிவிட, 1921-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியா திரும்பினார்!
  • சித்தரஞ்சன் தாஸ்தான் நேதாஜியின் குரு. அவரின் வழிகாட்டுதலில்தான் காங்கிரஸில் இணைந்தார். `ஸ்வராஜ்’என்ற பத்திரிகையிலும் பணியாற்றினார்!
  • `குருதியைக் கொடுங்கள். உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன்!’ என்று இவர் உரக்கக் கூவிய பிறகுதான் இளைஞர்கள் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்க ஆர்வமுடன் முன் வந்தார்கள்!
  • நான் தீவிரவாதிதான். எல்லாம் கிடைக்க வேண்டும். அல்லது ஒன்றுமே தேவை இல்லை என்பதுதான் எனது கொள்கை!’ – 1938ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இப்படி முழங்கினார்!
  • போஸ், காங்கிரஸ் தலைவரானதும், மகாகவி ரவீந்திரநாத் தாகூர் அவரை சாந்திநிகேதனுக்கு அழைத்துப் பாராட்டு விழா நடத்தினார். அப்போதுதான் போஸீக்கு `நேதாஜி’ என்ற பட்டத்தை அளித்தார் தாகூர். `மரியாதைக்குரிய தலைவர்’ என்பது அர்த்தம்!
  • ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் உத்தம் சிங். அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் நேதாஜி, காந்திக்கும் நேதாஜிக்கும் இடையிலான உரசலை அதிகமாக்கிய சம்பவம் இது!
  • 1939 –ல் இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை நிறுத்தினார். போஸ். 1,580 வாக்குகளுடனும், சீதா ராமையா 1,371 வாக்குகளுடனும் இருந்தனர். சீதா ராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அப்போது அவர் ஆரம்பித்தது தான் `ஃபார்வர்டு பிளாக்’ கட்சி! 
  • பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்த சுபாஷ், 1941 ஜனவரி 17அன்று தப்பினார். பெஷாவர் வழியே காபூல் தொட்டு,கைபர் கணவாய் வழியாக நடந்தே ஆஃப்கானிஸ்தானை அடைந்தார். பிறகு இத்தாலிக்குச் சென்று, இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவில் நுழைந்து, மாஸ்கோ சென்றார். இப்படி 71 நாட்கள் பயணித்து இறுதியில் அவர் பெர்லின் அடைந்ததை `Great Escape’ என்று சிலாகிக்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்! 
  • ஆயுதப் போராட்டம் மூலம் இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் சர்வாதிகாரி ஹிட்லரைச் சந்தித்தார் நேதாஜி `இந்தியாவின் வருங்கால சர்வாதிகாரியை வரவேற்பதில் பெருமைகொள்கிறேன்!’ என்று ஹிட்லர் கை குலுக்க, `வருங்கால சுதந்திர இந்தியாவை உருவாக்க மட்டுமே உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்!’ என்று உடனே பதில் அளித்தார் நேதாஜி!
  • திருமணம் செய்துகொள்வதில்லை என்ற முடிவில் இருந்தார். ஆனால், 1934-ல் ஆஸ்திரியப் பெண்மணி எமிலி ஷெங்கலைச் சந்தித்ததும், அவர் மனதில் காதல் துளிர்விட்டது. இரண்டு ஆண்டுக் காதலின் சாட்சியாகப் பிறந்தவர்தான் அனிதா, ஜெர்மனியில் இருந்து நீர் மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் செல்லும் சூழலில் விடைபெற்றது தான் எமிலியுடனான இறுதிச் சந்திப்பு!
  • ஜெர்மனியில் இருந்தபோது இவர் ஆரம்பித்த `இந்திய சுதந்திர அரசு’ என்ற அமைப்புக்கு, ஜெர்மன் அரசு நிதி உதவி அளித்தது. 1944-ம் ஆண்டின் இறுதியில் அந்தக் கடனைக் கழிக்கும் விதமாக, இந்திய நாட்டு மக்களிடம் திரட்டப்பட்ட நிதியில் இருந்து 50 லட்சம் யென் பணத்தை டோக்கியோவில் இருந்த ஜெர்மன் தூதரிடம் அளித்தார் நேதாஜி!
  • இன்னும் உயிரோடு இருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் பேசுகிறேன்!’ இப்படித்தான் நேதாஜியின் முதல் வானொலி உரை தொடங்கியது, 1944-ல் `ஆசாத் ஹிந்த்’ வானொலியில் உரை நிகழ்த்தியபோதுதான் மகாத்மா காந்தியை,`தேசப்பிதா’ என்று முதன்முதலில் அழைத்தார்.`ஆசாத் ஹிந்த்’ என்றால் `சுதந்திர இந்தியா’ என்று பொருள்! 
  • காந்திக்கும் போஸீக்கும் கொள்கைரீதியாக வேறுபாடு இருந்தாலும், மனதளவில் அன்பைப் பொழிபவர்களாகவும் இருந்தனர். எப்படி சுபாஷ், காந்தியை `தேசப் பிதா’ என்று அழைத்தாரோ, அப்படியே, காந்தி, போஸை `தேச பக்தர்களின் பக்தர்’ என்று அழைத்தார்!
  • சிங்கப்பூரில் 1942-ம் வருடம் மோகன் சிங் என்பவரால்தான் முதன்முதலில் இந்திய தேசிய ராணுவம் அமைக்கப்பட்டது. அது ஜப்பானியப் படைகளால் சிதைக்கப்பட்டது. மீண்டும் 1943-ல் நேதாஜியின் தலைமையின் கீழ் கட்டமைக்கப்பட்டது.
  • தனது இந்திய தேசிய ராணுவத்துக்குத் தாரக மந்திரமாக `ஜெய் ஹிந்த’.... அதாவது, `வெல்க பாரதம்’ என்ற சொல்லைப் பரவலாக்கியவர் நேதாஜி, அந்தச் சொல்லை நேதாஜிக்கு அறிமுகப்படுத்தியவர் செண்பகராமன் பிள்ளை என்ற தமிழர்!
  • பர்மாவின் மேஜர் ஜெனரல் ஆங் சான் என்னும் புரட்சித் தளபதி தலைமையில் பர்மியப் புரட்சி ராணுவம் ஜப்பானியரை எதிர்த்துப் போராடியது. அந்தப் புரட்சிப் படையை ஒடுக்க நேதாஜியின் உதவியை ஜப்பானியர் கேட்டனர். ஆனால், நேதாஜி மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், `இந்திய தேசிய ராணுவம் என்பது ஒரு கூலிப் படை அல்ல!
  • ஒரே ஒரு முறை மதுரைக்கு வந்தார், பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் மேற்கொண்ட முயற்சியால் அது சாத்தியமாயிற்று. இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜியின் பட்டாலியனின் கீழ் 600-க்கும் அதிகமான தமிழர்கள் இருந்தார்கள். `அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!’ என்று அன்று நெகிழ்ந்தார் நேதாஜி! 
  • பெண்களை ராணுவத்தில் பங்கேற்கச் செய்தது முக்கியமான வரலாற்று நிகழ்வு. காந்தி எப்படி பெண்களை அகிம்சையின் வடிவமாகப் பார்த்தாரோ, அதற்கு நேர்மாறாகப் பெண்களைச் சக்தி வாய்ந்த துர்க்கைக்கு நிகராகப் பாவித்தார் நேதாஜி!
  • 1943-ல் நேதாஜியின் படை வெள்ளையர்களிடம் இருந்து அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளைக் கைப்பற்றியது. அவற்றைக் கைப்பற்றியவுடன், நேதாஜி செய்த முதல் வேலை அந்தத் தீவுகளுக்கு `ஷாஹீத்’ (தியாகம்) மற்றும் `ஸ்வராஜ்’ (சுயராஜ்யம்) என்று பெயர் மாற்றியதுதான். அந்தத் தீவுகளுக்கு ஆளூநராக தமிழர் ஒருவரைத்தான் நியமித்தார். அவர்.... கர்னல் லோகநாதன்!
  • டோக்கியோவில் நடைபெற்ற கிழக்கு ஆசிய மாநாட்டில் நேதாஜி உரையாற்றி முடித்ததும், எழுந்த ஜப்பானியப் பிரதமர் டோஜோ, ``இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நேதாஜி அந்நாட்டில் எல்லாமுமாக இருப்பார்!’’ என்றார். உடனே நேதாஜி, ``சுந்திர இந்தியாவில் யார் எல்லாமுமாக இருப்பார் என்பதை இந்திய மக்கள்தான் முடிவு செய்வார்கள்’’ என்றார். ஜனநாயகத்தின் மீதும், மக்களாட்சியின் மீதும் அவருக்கு இருந்த அளவற்ற நம்பிக்கைக்கு இது ஒரு சான்று!
  • 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல, நேதாஜி தன் தோழர் ஹபீப்புடன் விமானத்தில் ஏறினார். ஆகஸ்ட் 18-ம் தேதி தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தைவான் அரசாங்கமோ... அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது. இதுவரை 12 கமிஷன்கள் வைத்து விசாரித்தும் ஒரு பயனும் இல்லை. நேதாஜியின் மரணம் இன்றும் மர்மம்!
  • ஒரு இந்தியனின் புனித யாத்திரை’ இவர் எழுதி முற்றுப் பெறாத சுயசரிதை, 1937-ல் எழுத ஆரம்பித்தார். 1921 வரை தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை எழுதினார். `என்னுடைய நம்பிக்கைத் தத்துவம்’ என்று தலைப்பிட்டு தனியே ஒரு கட்டுரையுடன் சேர்த்து இவர் எழுதியது 10 அத்தியாயங்கள் மட்டுமே!.