Monday, September 24, 2012

நல்லதங்காள்



தமிழ்மொழியில் எழுதப்பட்ட நாவல் பிரதாப முதலியார் சரித்திரம். இது பிரிசுரிக்கப்பட்ட ஆண்டு 1879.இதுதான் தமிழில் எழுதப்பட்ட முதல் நாவலாகும். இது வசன நடையில் உள்ளது. இந்த நாவலை எழுதியவர் வேதநாயகம் பிள்ளை.
ஆதியூர் அவதானி சரிதம் என்ற ஒரு நூல் தமிழில் எழுதப்பட்டு இருக்கிறது. இந்த நூல் முதன் முதலில் 1875-ஆம் ஆண்டு புத்தகமாக வெளியிடப்பட்டது. இது பாட்டு (கவிதை) வடிவில் இருக்கிறது. இதை எழுதியவர் து.வி. சேஸய்யங்கார். கவிதை வடிவில் எழுதியுள்ளதை நாவல் என்று ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எனவே ஆதியூர் அவதானி சரிதம், பாட்டு வடிவில் இருந்தாலும் அதுவும் நாவல்தான் என்று சாதிக்க சிலர் சில காலமாக முயற்சி செய்து வந்தார்கள். எழுத்து துறையில் பத்திரிகை தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்த இதை ஒரு சாதகமாகப் பயன்படுத்த நினைப்பார்கள்.
“அமுத சுரபி” என்ற மாத இதழில் (1.9.1989) ‘கிட்டி’ என்ற எழுத்தாளர் தம்முடைய கட்டுரையில் கூரியது.
“வடிவம் ஒன்றைத்தவிர , மற்ற எல்லா அம்சங்களிலும் நாவல் என்று ஓட்டிகொள்ளக்ககூடிய, இந்த படைப்பு தமிழ் உரை நடையில் இந்த வடிவம் வருவதற்கு முன்பு, தோன்றிவிட்டதால், முதல் தமிழ் நாவல் என்றாகிவிடுகிறது”.
அசோகமித்திரன் என்ற எழுத்தாளர், ‘சில இந்திய மொழிகளில் முதல் நாவல்’ என்ற புத்தகம் எழுதியுள்ளார். இதன் முதல் பதிப்பு 2001-ல் வெளியிடப்பட்டது. இந்த நூலில், ஆதியூர் அவதானி சரிதம் என்ற நூல் பற்றி அவர் எழுதியது. 
(பக்கம் 143)”சேஷய்யங்கார் தன் படைப்பை அதன் வடிவம் காரனமாகச் சலசலப்புக்கு உட்பட வைத்துவிட்டார். சேஷய்யாங்க்காருடைய படைப்பை சந்தேகமற நாவல்தான் என்று கூற முடியாவிட்டால் 1875-ஆம் ஆண்டிலேயே தமிழ் நாட்டிலும் ஜாதி, ஆசாரம், திருமணம், விதைவைகள் நிலைபற்றித் தீவிரமாகச் சிந்தித்து எழுத்தில் வடித்து, செயலிலும் காட்டியது தமிழ் நாவல் வரலாற்றில் அவசியம் இடம் பெற வேண்டியதே”
இவர்களுடைய முயற்சியெல்லாம் கிறிஸ்தவர் எழுதிய நூல்களை முதல் நிலையிலிருந்து இறக்கி, பிராமணர் எழுதிய நூலுக்கு கெளரவம் தேடித்தந்த நம் முயற்சியாகும். 
வசன நடையில் இல்லதிருந்தளும்கூட, பாட்டு நடையில் சமூகப்பார்வை கொண்டதாக இருக்குமேயானால் அது நாவல் என்று சொல்கிறார். இவர்களும் ‘நல்லதங்காள்’ கதை தெரியுமா? 
புகழேந்தி என்றொரு தமிழ் புலவர், வாழ்ந்த காலம் 12-ஆம் நூற்றாண்டு. இவர் எழுதிய நூல்களில் ஒன்று ‘நல்லதங்காள்’ என்ற நூல். இது பாட்டு நடையில் எழுதப்பட்டது. இவர்களது அர்த்தத்தின்படி சமூகப்பார்வையில் சமூகப் பிரச்சினையை பாட்டாகச் சொல்லும் யதார்த்த நூல்.
 நல்லதங்காள் என்ற குடும்ப பெண்ணிற்கு ஏழு குழந்தைகள். கணவர் வெளிதேசம் சென்றவன், பல காலமாகியும் திரும்பி வீடு வரவில்லை. குடும்பம் வறுமையில் வாடியது. குழந்தைகளை அழைத்துக்கொண்டு நல்லதங்காள் பக்கத்து நாட்டிலுள்ள அண்ணன் வீட்டிற்குப் போகிறாள். அண்ணன் அந்நிய நாட்டிற்கு திரும்பவில்லை. அண்ணியின் பெயர் அலங்காரி. அண்ணியின் கொடுமையைத் தாங்கமுடியாமல், பசியால் தவிக்கும் தன்னுடைய ஏழு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி அருகாமையிலுள்ள காட்டில் உள்ள கிணற்றில் விழுந்து மடிந்தாள். நல்லதங்காளை தேடிக்கொண்டு அண்ணன் வீட்டுக்கு கணவன் வந்தான், வீடு திரும்பி வந்த அண்ணனும் நல்லதங்காளை தேடிச்சென்று, குழந்தைகளும் நல்லதங்காளும் மாண்டுபோனதைக் கண்டு கதறி அழுதார்கள் . 
 இது நல்லதங்காள் கதை. எனவே சேஷய்யங்கார் எழுதிய ஆதியூர் அவைதனை சரிதம் தமிழில் எழுதப்பட்ட ‘முதல் நாவல்’ அல்ல. வேதநாயகம் பிள்ளை எழுதிய “பிரதாப முதலியார் சரிதம்” தான் தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல்.....