Friday, July 12, 2013

சுயபிம்பம், சுய அறிவாற்றல், சுய ஏற்பு


எனக்கு பிடித்த புத்தகத்தில் இருந்து நீங்களும் அறிய வேண்டும் என்ற நோக்கத்துடன்  அந்த புத்தகத்தில் உள்ளதை உள்ள படியே தருகிகிறேன் இந்த புத்தகம் எது என்றால்  ”எது உன் குறிக்கோள்” என்பதே புத்தகத்தின் பெயர் ஆகும்.. இதை எழுதியவர் “பசுமைக்குமார்” இப்படியே சொல்லிக்கொண்டே போகளாம் நான் தலையங்கத்துக்குள் வருகிறேன்…
நூல்களைப் படிப்பது, தொலைக்காட்சி, திரைப்படங்கள், இலக்கியங்கள், இணைய தளங்கள் எனப் பல சாதனங்கள் நமது அறிவற்றல் பெருக்கத்திற்குத் துணையாக இருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் ஞானம் வளர வளர மனதில் பக்குவம் வளரும். அது ஒரு செயலை நிறைவேற்றுவதில் வெளிப்படும். அவரது செயல்போக்கு அவரது மதிப்பை உயர்த்துவதாக இருக்கும்..
சுயமதிப்பு ஒரு மாணவன் படிப்பதில் ‘திறமைசாலி’ என்ற பிம்பம் (IMAGE) பெற்றிருக்கலாம் . இன்னொரு மாணவன் விளையாட்டுப் போட்டிகளில் திறமைசாலி என்ற பிம்பம் எற்பட்டிருக்கலாம் . இப்படி மாணவர்கள், இளைஞர்கள்,பெண்கள், உழைக்கும் மக்கள் எனப் பல தரப்பினரும் தங்களுக்கென ஒரு சுய பிம்மபம்பத்தை உருவாக்கி கொள்ள முடியும்.
1.      சிறந்த் படிப்பாளி
2.      விளையாட்டில் சூரப்புலி
3.      பேச்சில் கெட்டிக்காரன்
4.      தையிரியசாலி
5.      இரக்க குணம் கொண்டவன்
6.      விட்டுக்கொடுப்பவன்
7.      உதவக்கூடியவன்
8.      கடும் உழைப்பாளி
9.      புத்திசாலி
10.  மரியதையானவன்
11.  தந்திரசாலி
12.  நல்லவன்
13.  வல்லவன்
14.  சகிப்புத் தன்மை கொண்டவன்
15.  சுறுசுறுப்பானவன்
இம்மாதிரி பிம்பங்கள் நல்ல பிம்பங்கள் (Good images) எனில் அவை வளர்ச்சிக்கு உதவும். மேலும் ஒருவரின் சுய மதிப்பை உயர்த்தும். ஆனால் இந்த சுய பிம்பம் (Self-images) எதிர்மறையாக இருந்துவிடுமானால் முன்னேற்றம் தடைப்படும்.
உதாரணமாக…..

  1.         சிடுமூஞ்சி
  2.         அழுமூஞ்சி
  3.         சோம்போறி
  4.         கஞ்சன்
  5.         கோபாக்காரன்
  6.         தூங்குமூஞ்சி
  7.        இளிச்சவாயன்
  8.         அரக்கத்தனமானவன்
  9.         கோழை
  10.  முட்டாள்
  11.      கெட்டவன்
  12.      மோசக்காரன்
  13.      சூழ்ச்சிக்காரன்
  14.      உதவாக்கரை
  15.       புளுகன்



    போன்று சுய பிம்பங்க: ஒருவரது வளர்ச்சிக்கு உதவாது அவை தீய பிம்பங்கள் (BAD IAMAGE).
     நாம் எப்படிப்பட்டவர் என்ற பிம்பத்தை பிறர் மனதில் தோன்றாத வரையில் நம்மைப் பற்றிய பிறரது மதிப்பீடு சரியாக அமையாது. அதனால் நம்மை பற்றிய தெளிவான சுய பிம்பத்தை ஆக்கப்பூர்வ மானதாக (நல்லதாக) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.