Saturday, August 30, 2014

கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

இன்று மாறிவரும் காலத்திற்கு ஏற்ப நமது உணவு பழக்க வழக்கங்களும் மாறி வருகின்றன. அதனால் நமக்கு ஏற்படும் நன்மையைகாட்டிலும் தீமையே அதிகம். இதனால் இன்று பலர் தனது உணவு பழக்கவழக்கங்களை மாற்றி கொள்ள பெரிதும் ஆசைப்படுகின்றனர். நாவிற்கு சுவை தரும் உணவைகாட்டிலும் உடலுக்கு நன்மை விளைவிக்கும் உணவே சிறந்தது. அதிலும் எண்ணெய், நெய் நிறைந்த உணவுபொருட்களை குறைவாக உட்கொண்டால் நமது உடல் சீராக செயல்படும்.

கைக்குத்தல் அரிசி ஊட்டச்சத்து நிறைந்த முக்கிய உணவாகும். இதில் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்துள்ளதால் வெள்ளை அரிசியைக்காட்டிலும் கைக்குத்தல் அரிசியானது அதிக சுகாதார பலன்களை கொண்டது. கைக்குத்தல் அரிசியை அதன் வெளித்தோலான உமியை நீக்கி பதப்படுத்துவார்கள். வெள்ளை அரிசியில் நீக்கப்படும் பலவாரியான தோல் நீக்கத்தால் அதிக அளவில் ஊட்டச்சத்து குறைவு ஏற்படுகின்றது. இதனைகாட்டிலும் கைக்குத்தல் அரிசியில் ஊட்டச்சத்து நீங்கிவிடும் வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கும். கைக்குத்தல் அரிசியானது நார்ச்சத்தை தக்கவைப்பதால் நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்க உதவும். உடல் எடையை குறைக்க உதவும் உணவுவகைகளில் இது ஒரு முக்கிய உணவாகும்.

நார்ச்சத்து நிறைந்துள்ளதால், கைக்குத்தல் அரிசியை ஜீரணிக்க அதிக சக்தி தேவைப்படும். உங்கள் பசியை நீண்ட நேரம் வரை கட்டுக்குள் வைத்து அதிக அளவில் உணவு உட்கொள்ளுவதை தவிர்க்க உதவும். இந்த கைக்குத்தல் அரிசி ஒரு நாளில் நமக்கு தேவைப்படும் 80%மாங்கனீஸ் அளவை தரக்கூடியது. மேலும் கார்போஹைட்ரேட் மற்றும் ப்ரோடீன் சக்திகளையும் தரக்கூடியது. எல்லா வகை அரிசிகளான பாஸ்மதி, ஜாஸ்மின் மற்றும் சுஷி அரிசிகளிலும் கைக்குத்தல் வகை வந்துள்ளது. இதனால், சராசரியாக அரிசி உட்கொள்ளுபவர்கள் வெள்ளை அரிசியை தவிர்த்து கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தலாம்.

மாங்கனீஸ் நிறைந்துள்ளது

ஒரு கப் கைக்குத்தல் அரிசியில் நமக்கு ஒரு நாளில் தேவைப்படும் 80% மாங்கனீஸ் சக்தியை கொண்டுள்ளது. மாங்கனீஸ் நாம் உட்கொள்ளும் கார்போஹைட்ரேட் இருந்து சக்தியைப் பெற்று நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை தொகுத்து கட்டுப்படுத்த உதவுகின்றது.

எடை குறைப்பு
கைக்குத்தல் அரிசியின் முக்கிய சுகாதார பலன் அதில் உள்ள எடைகுறைக்கும் தன்மை தான். அதில் நிறைந்துள்ள நார்ச்சத்து நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைத்து அதனை ஜீரணிக்க அதிக சக்தி தரும். இவை மட்டுமல்லாது நார்ச்சத்து நமது பசியை நீண்ட நேரம் வரை தக்க வைத்து அதிக உணவு உட்கொள்ளுவதை தவிர்க்க உதவும்.

நல்ல எண்ணெய் வகைகளை நிறைந்துள்ளது
கைக்குத்தல் அரிசியில் நமது உடலுக்கு தேவையான இயற்கை எண்ணைகளை அதிக அளவில் உள்ளது. நமது உடல் சுகாதாரத்திற்கு தேவையான அதிக பலன்களை கொண்டுள்ளது. இந்த நல்ல எண்ணைகளில் உள்ள நல்ல கொழுப்புச்சத்து நமது உடலின் இரத்தகொழுப்பை இயல்பாக்கி கட்டுப்படுத்தும்.

இதயத்திற்கு நல்லது
கைக்குத்தல் அரிசியின் பதபடுத்தலில் அதன் மேல்தோல் மட்டுமே நீக்கப்படுவதால் அதன் தன்மை குறையாமல் முழுதானியமாக இருக்கின்றது. இதன் முழுதன்மையினால் நமது உடலில் அர்டீரியல் பிளேக் உருவாக்குவதிலும் இதய நோய்கள் வாராமல் தடுப்பது மற்றும் அதிக இரத்தகொழுப்பையும் கட்டுப்படுத்தும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்
தற்போது வெளிவந்துள்ள ஆராய்ச்சிகளின் படி, கைக்குத்தல் அரிசியில் அதிக ஆண்டி ஆக்சிடன்ட்கள் தன்மை நிறைந்துள்ளது என உறுதிபடுத்தியுள்ளனர். இதில் உள்ள பைடோநியூற்றிசியன்ட்கள் அதன் முழுதன்மையை தக்கவைகின்றன. கைக்குத்தல் அரிசியில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட்கள் நோய்களை வராமல் தடுத்து வயது மூப்படைதலையும் மெதுவாக்குகின்றது.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
கைக்குத்தல் அரிசியில் நிறைந்துள்ள மெக்னீஷியம் நமது உடலில் க்ளுகோஸ் இன்சுலின் சுரக்கும் நொதிகள் போன்ற 300 மேலான நொதிகள் உருவாக்க உதவுகின்றது. பதப்படுத்தப்பட்ட அரிசி மற்றும் தானியங்கள் தரும் கார்போஹைட்ரேட்டுகளை காட்டிலும் கைக்குத்தல் அரிசியில் நிறைந்துள்ள கார்போஹைட்ரேட்டுகள் நமது உடலுக்கு மிகவும் நல்லது.

எலும்புகளுக்கு நல்லது
கைக்குத்தல் அரிசியில் மெக்னீஷியம் நிறைந்துள்ளதால் நமது நரம்புகளையும் சதைகளையும் சீராக்குவதற்கும் கால்சியம் தன்மையை சமன் செய்வதற்கும் உதவுகின்றது. மெக்னீஷியம் மற்றும் கால்சியம் நமது எலும்புகளுக்கு இன்றியமையாதது. நமது உடலில் மூன்றில் இரண்டு பங்கு மெக்னீஷியம் எலும்புகளில் உள்ளது.

குழந்தைகளின் உணவு
கைக்குத்தல் அரிசியில் இயற்கை சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது குழந்தைகளுக்கு மிகவும் சிறந்த முதல் உணவாக இருக்கின்றது. வளர்ந்து வரும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவு தேவைப்படும். கைக்குத்தல் அரிசியானது குழந்தைகளிடையே ஆஸ்துமா நோயை 50% வரை கட்டுப்படுத்தியுள்ளது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

Thursday, July 31, 2014

படுகொலை பயம்.. சோனியா பிரதமராவதை தடுக்க "கெடு" வைத்த ராகுல்..: நட்வர் சிங்கின் "குண்டுவீச்சு"

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமரானால் அவரும் படுகொலை செய்யப்படலாம் என்று அச்சப்பட்ட ராகுல் காந்தி அவரை 2004-ல் பிரதமர் பதவியை ஒப்புக் கொள்ளவிடாமல் கெடு விதித்து போராட்டம் நடத்தியதாக மூத்த காங்கிரஸ் தலைவர் நட்வர்சிங் தெரிவித்துள்ளார். நட்வர்சிங்.. தீவிர அரசியலில் இருந்த காலத்திலும் சர்ச்சைதான்.. இப்போதும் சர்ச்சைதான்.. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 2005ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த நட்வர்சிங், ஈராக்குக்கான மருந்துகள், உணவுக்கு எண்ணெய் திட்ட ஊழலில் சிக்கியதால் ராஜினாமா செய்தார். பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸைவிட்டு வெளியேறினார். கடந்த மே மாதம் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தாம் ஒரு சுயசரிதை (ஒன் லைப் இஸ் நாட் எனப்) எழுதி இருப்பதாக குண்டைத் தூக்கிப் போட சோனியா உள்ளிட்டோரின் தூக்கம் தொலைந்தது.

கைதிகளின் உடல் உறுப்புகள் தானத்திற்கு எதிர்ப்பு... அமெரிக்காவின் தீர்மானத்திற்கு சீனா கண்டனம்

வாஷிங்டன்: உடல் உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்காக சீனக் கைதிகள் மரண தண்டனை என்ற பெயரில் சீனக் கைதிகள் கொல்லப் படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ள குற்றச்சாட்டிற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவில் மரணதண்டனை விதிக்கப்படும் கைதிகளின் உடல் உறுப்புகளை எடுத்து மாற்று உறுப்பு தேவைப்படும் நோயாளிகளுக்குப் பொருத்தும் வழக்கம் உண்டு. இதற்கு நீண்ட காலமாக மனித உரிமைக் குழுக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. 
அதனைத் தொடர்ந்து இன்னும் மூன்று அல்லது ஐந்து வருடங்களுக்குள் இந்த வழக்கத்தை முற்றிலும் நிறுத்திவிடுவதாக கடந்த 2012-ம் ஆண்டு சீனா தெரிவித்திருந்தது. விவாதம்.... இந்நிலையில், நேற்று அமெரிக்க வெளியுறவு விவகாரங்கள் குழுவில் இது குறித்த விவாதம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது சீனாவில் இன்னமும் இத்தகைய உடல் உறுப்பு நீக்க செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பகமான மற்றும் நிலையான அறிக்கைகள் தெரிவிப்பதாக கூறப்பட்டது. ஃபலுன் கோங் பிரிவு... குறிப்பாக கடந்த 1999-ம் ஆண்டு சீனாவில் தீய வழிபாட்டு முறைகளைக் கொண்டதாகத் தடை செய்யப்பட்ட ஃபலுன் கோங் பிரிவின் பெரும்பான்மையோரும், மற்ற சிறுபான்மை மதத்தினரும் இத்தகைய வற்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. குற்றச்சாட்டு... மேலும், இவர்களை இலக்காகக் கொண்டு வன்முறைகளைப் பிரயோகிக்கும் அரசு, உடல் உறுப்புகளுக்காக இவர்களை மரண தண்டனை என்ற பெயரில் கொல்வதாக அமெரிக்க அரசின் தீர்மானத்திற்கான தலைமை ஆதரவாளரான இல்லியானா ரோஸ் லெஹ்டினென் குற்றம்சாட்டினார். தீர்மானம்.... இதனைத் தொடர்ந்து சீனா உடனடியாக இத்தகைய நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றும், சீன அரசுத்துறை இதுகுறித்து ஒரு விசாரணையை மேற்கொள்ளவேண்டும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதிருப்தி... இந்தத் தீர்மானம் குறித்துக் கேள்விப்பட்ட அமெரிக்காவிற்கான சீனத் தூதரகத்தின் தகவல் தொடர்பாளரான கெங் ஷுவாங், இதற்கு சீன அரசின் வலுவான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். விளக்கம்... மேலும், சீன அரசின் கட்டுப்பாடுகளின்படி ஒவ்வொரு உறுப்புதானத்தின்போதும் கொடையாளரின் விருப்பம் எழுத்து மூலம் பெறப்படுகின்றது என அவர் விளக்கமளித்துள்ளார்.

லிபியா: பெங்காஸி நகரை கைப்பற்றியதாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

லிபியாவின் 2வது பெரிய நகரமான பெங்காஸி நகரை கைப்பற்றி விட்டதாக அன்சர் அல் ஷரியா இயக்கம் அறிவித்துள்ளது. லிபியா அதிபராக இருந்த கடாபி கொல்லப்பட்டதையடுத்து கிளர்ச்சியாளர்கள் கை மேலோங்கி வருகிறது. இதனால் தலைநகர் திரிபோலியில் செயல்பட்ட தங்கள் தூதரகத்தை கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்கா மூடியது. 
ஐ.நா அமைப்பு, பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளும் தங்களது தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றுள்ளன. லிபியாவின் பெரும் பகுதியை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் அமைப்பான அன்சர் அல் ஷரியா கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதுவரை வன்முறைக்கு நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ள நிலையில், உயிர் பயத்தில் நாட்டை விட்டு குடும்பம், குடும்பமாக வெளியேறும் மக்கள் அண்டை நாடான துனிசியாவில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில் லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காஸி நகரை கைப்பற்றி விட்டதாகவும், அந்நகரம் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகவும் அன்சர் அல் ஷரியா கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். அறிவித்து தடை செய்யப்பட்ட அல் கொய்தாவுடன் தொடர்புடைய அன்சர் அல் ஷரியா என்ற இஸ்லாமிய போராளிகள் இயக்கம் இன்று அறிவித்துள்ளது. பெங்காஸியின் ராணுவ தலைமையகம் உள்பட அனைத்தும் தங்கள் வசமாகி விட்டதாக அன்சர் அல் ஷரியா இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.


இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு பொலிவியா பிரகடனம்

காஸா மீது இனப்படுகொலை நடத்தி வரும் இஸ்ரேலை ஒரு பயங்கரவாத நாடாக பொலிவியா பிரகடனப்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை அரபு நாடுகள் மவுனமாக வேடிக்கை பார்த்து வருகின்றன. அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன.
பொலிவியா, சிலி மற்றும் பெரு ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கான தூதர்களை வாபஸ் பெற்றன. இந்த நிலையில் இஸ்ரேலை பொலிவியா, ஒரு பயங்கரவாத நாடாக பிரகடனம் செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டு அதிபர், இஸ்ரேலை ஒரு பயங்கரவாத நாடாக அறிவிக்கிறோம். அந்த நாட்டுடனான விசா நடைமுறைகள் ரத்து செய்யப்படும் என்றார். அதாவது 1972ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி, பொலிவியாவுக்குள் இஸ்ரேலியர்கள் விசா இன்றி செல்ல முடியும். ஆனால் தற்போது இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது பொலிவியா என்பது குறிப்பிடத்தக்கது.

லினோவா P780 மொபைல் ஒரு சிறப்பு பார்வை

இன்றுள்ள மொபைல் சந்தை போட்டியில் தினந்தோறும் பல மொபைல்கள் வெளிவந்த வண்ணம் தான் உள்ளன அதுவும் பல புதிய புதிய சிறப்பம்சங்களுடன் வெளிவந்துகொண்டே இருக்கின்றது. அந்தவகையில் சென்ற மாதம் வெளிவந்து தற்போது சந்தையில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது லினோவா P780 அப்படி என்னதான் இந்த மொபைலில் இருக்கிறது என்று இந்த மொபைலை கம்பெனியில் இருந்து வாங்கி 7 நாட்கள் பயன்படுத்தி பார்த்தோம். அதில் இந்த மொபைலில் பல வியக்கும் ஆப்ஷன்கள் இருப்பது நமக்கு தெரியவந்தது அப்படி மத்த மொபைல்ல இல்லாத ஆப்ஷன் அதுல மட்டும் அப்படி என்ன இருக்குதுன்னு நீங்க கேக்கறது புரியுதுங்க இதோ அந்த ஆப்ஷன்களை பார்போமா. இந்த மொபைலின் தனித்துவம் என்று சொன்னால் அதில் இருக்கும் பேட்டரி தான் முதலில் நமக்கு தெரிகிறது, மற்ற மொபைல்களில் இருக்கும் பேட்டரி திறன் 2000mAh தான் ஆனால் இதில் இருப்பதோ 4000mAh உள்ளது இது உங்களது பேட்டரி பேக் அப்பை இருமடங்கு தருகிறது. மேலும், இது ஆண்ட்ராய்டு 4.2.1 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸால் இயங்க கூடியதாகும் இதில் 8MP கேமரா உள்ளது இது உங்களது அழகிய தருணங்களை அதிக கிளாரிடியில் படம் பிடிக்கும் மேலும் இதில் 2MP க்கு பிரண்ட் கேமரா உள்ளது. இதில் 4GB க்கு இன்டர்நெல் மெமரி உள்ளது இதில் 3G, 1.2 GHz பிராஸஸர் என அனைத்துமே இந்த மொபைலில் உள்ளது. இந்த மொபைலில் வாய்ஸ் கிளாரிட்டியும் மிக அருமையாக உள்ளது மேலும் கையில் மொபைலை பிடித்து பயன்படுத்த இலகுவாக அழகிய சைட் கிரிப்புடன் கிரிப்புடன் இருக்கிறது இந்த மொபைல். இந்த மொபைலின் மொத்த எடை 176 கிராம் இந்த எடை சற்று அதிகம் தான் ஆனால் மற்ற மொபைகளை ஒப்பிடுகையில் இதன் எடை சற்று குறைவே என்று கூறலாம். இதில் பென்டிரைவ் போட்டு கொள்ளும் ஆப்ஷனும் உள்ளது மேலும் பென்டிரைவில் உள்ள டேட்டாக்களை செக் மற்றும் காப்பி செய்தும் கொள்ளலாம். இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் இந்த மொபைலில் உள்ள டேட்டா கேப்ளை மற்றொரு மொபைலுக்கு இணைத்து இந்த மொபைலுக்கு அதிலுருந்து நாம் சார்ஜ் செய்து கொள்ளலாம் உண்மையிலேயே இது புதுமையான ஆப்ஷனாக நமக்கு இருந்தது. அத்தோடு இந்ச மொபைல் ஒரு டூயல் சிம் மொபைல் ஆகும் இதில் 8MP க்கு கேமரா உள்ளது மேலும் 2MP க்கு பிரண்ட் கேமராவும் இதில் உள்ளது இதன் மூலம் மிக துல்லியமான படங்களை நாம் எடுக்கலாம்.

மைக்ரோமேக்ஸ் விரைவில் வெளியிட இருக்கும் புது மொபைல்

தற்போது மைக்ரோமேக்ஸ் மொபைல்களுக்கான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையானது எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டது எனலாம். அந்தவகையில் விரைவில் மைக்ரோமேக்ஸ் வெளியிட இருக்கும் ஒரு மொபைலுக்கு அமோகமான எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. அதன் பெயர் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் L A108 என்பதாகும் இதோ அந்த மொபைலை பற்றி பார்க்கலாமாங்க.



5.5 இன்ச் டிஸ்பிளேயுடன் வெளியாக இருக்கும் இந்த மொபைலில் 8GB க்கு இன்பில்ட் மெமரியும் 1GB க்கு ரேமும் உள்ளது. மேலும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட் ஓ.எஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மொபைலில் 8MP க்கு கேமரா மற்றும் 2MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றுடன் சந்தையில் நமக்கு கிடைக்கின்றது. இதன் பேட்டரி திறன் 2350mAh ஆகும் மேலும் இந்த மொபைலின் விலை ரூ.10,499 ஆகும்.