Tuesday, November 6, 2012

எது உன் குறிக்கோள் பகுதி 2


              குறிக்கோளும் முடிவெடுத்தலும் பகுதி  2

 மனித வாழ்க்கையில் வளர்ச்சி என்பது ஒவ்வொரு மனிதனும் தன்னால் இதைச் செய்து முடிக்க வேண்டுமென்று நம்புவது நம்பிக்கையை செயல்படுத்தி திட்டமிடுவதும் அதை நிறை வேற்ற முயற்சி செய்யும்போது தடைகளைக் கண்டு தளர்ந்து விடாமல், விடா முயற்சியுடன் அந்தக் காரியத்தைச் சாதிக்கும் திசை நோக்கி முன்னேருவதும்தான் நம்பிக்கை ஆகும். 
     மனிதன் தான் மீதும் தன்னுடைய செயல் மீதும் நம்பிக்கை வைக்கதிருந்ததால் அவனால் எதுவும் செய்து முடிக்க இயலாது. ‘முயற்சி திருவினை ஆக்கும், முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ எனும் வாசகங்களில் எல்லாம் தன்னம்பிக்கையில் இருந்து தோன்றியவையாகும். ‘முயன்றால் முடியாதது எதுவும் இல்லை’ என்ற அழுத்தமான சிந்தனைதான் தன்னம்பிக்கையின் அடித்தளமாகும். 
     நம்பிக்கை எனும் வலைப்பின்னல் சூழவே மனிதன் வாழ்ந்து விடுகிறான். 
     பெற்ற தாய் மீதும், கல்வி கற்பிக்கும் அசிரியர் மீதும் நண்பர்கள் மீதும் நம்மை சுற்றியுள்ளவர் மீதும் தம்மால் முடியாதஇயற்கையின் மீதும் நம்பிக்கை வைக்கும் நாம், தொடர்ந்து வாழ் நாள் எல்லாம் பலவிதமான நம்பிக்கை மீது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே,ஒருவர் தான் மீதும் நம்பிக்கை வைப்பதும் அதை வளர்ப்பதும் முடியாத ஒன்இல்ல. 
     தன்னம்பிக்கை என்பது ஒரு மனநிலை. இதனை எந்த வயதிலும் வளர்த்துக்கொள்ள முடியும். இது பெரியவர்களிடமும் இளைஞர்களிடமும் ஏன் குழந்தைக்களிடமும் காணப்படுகிறது. ஆம், தன்னம்பிக்கை மனோபாவம்  குழந்தைப்பருவத்திலேயே தோன்றி விடுகிறது. 
     ஒரு பசு மாடு கன்றை ஈன்றவுடன், பிறந்த கன்றுக்குட்டி தட்டி தடுமாறி எழுந்து நின்று நடக்கத்தொடங்குகிறது. முட்டயில் இருந்து வெளி வந்த கோளிக்குங்சு, பிறந்தவுடன் நடக்கிறது. 
     ஆனால், 
     மனிதன் மட்டும் பிறந்தவுடன் எழுந்து நடப்பதில்லை. குழந்தைப்பருவத்தில் நடப்பது எப்படி என்று கற்றுக்கொள்கிறான். உட்காரவும்,தவழ்ந்து செல்ல கற்றுக்கொண்ட குழந்தை எழுந்து நிற்க முயற்சி செய்கிறது. பல முறை எழுந்தும் விழுந்தும் பின்னர் உறுதியாக நிக்கவும் கருக்கொள்கிறது. 
     அந்தக்குழந்தை தனது முதலாவது காலடியை எடுத்து வைக்கும் போதே, விழுந்து விடுவோம் என்ற பய உணர்வை மீறித்தான் அடி எடுத்து வைக்கிறது. அடுத்த அடி எடுத்து வைக்கும்படி ஊக்கம் கொடுப்பவர் தாய். தான் குழந்தையை ஓரடி, ஈரடியாகக் காலடி எடுத்து வைக்கச்சொல்லி அக் குழந்தையின் மனதில் ‘உன்னால் நடக்க முடியும்’ என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்துபவர் தாய்! குழந்தையின் ஒவ்வரு வளர்ச்சி பருவத்திலும் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது, தாய் ஊட்டி வளர்க்கும் தன்னம்பிக்கையே!
    இத்தகைய தன்னம்பிக்கை ஊட்டம் பெறாத குழந்தைகளின் வளர்ச்சியில் கால தாமதமும் முன்னேறுவதில் சிறு தடுமாற்றமும் இருக்கும். இதனை, அக் குழந்தை நடை பயிலுவதிலும், பேசப்பழகுவதிலும் நாக்கு காண முடியும். 
    ஒரு குழந்தை சிறு வயதிலிருந்தே ஒரு கோழையாக வளர்வதற்கும் பெற்றோர் காரணமாகி விடுக்கின்றார்கள். இந்தக் கோழைத்தனம் தன்னம்பிக்கைக்கு தடையாக முன் நிற்கும். 
    குழந்தைப்பருவத்தில் தாயின் அரவணைப்பில் கட்டுண்டு கிடந்த குழந்தை, பள்ளிக்குச் சென்றவுடன் அதன் தன்னம்பிக்கையை வளர்ப்பார்கள் ஆசியியர்கள். பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் எடுத்து கூறுகின்ற நம்பிக்கை ஒளி மிகுந்த சொற்கள், மாவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதில்முக்கிய பங்காற்றுகின்றனர். மாணவப்பருவத்தில் மாணவர்கள் படிக்கும் பல நூல்கள், மாமனிதர்களின் வரலாறுகள், அவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. பள்ளியில் தங்கள் அறிவாற்றல் திறனை அறிந்தும் வளர்த்தும் தன்னம்பிக்கை பெறுவது போலவே, மாணவர்கள் தங்கள் பலத்தை தாங்களே உணர்ந்து கொள்ளச் செயும்படியான செயல்கள் மூலமாகவும் அவர்களது தன்னம்பிக்கை வளர்க்கப்படுகிறது.  
     விளையாட்டு ஆசிரியர் தரும் மாணவர்களின் விளையாட்டுத்திறனை வளர்க்கிறது. ஓவிய ஆசிரியர் தரும் பயிற்சி அவர்களது கலைத்திறனை வளர்க்கிறது. இலக்கிய ஆசிரியரின் தன்னம்பிக்கை ஊட்டம் பெற்ற மாணவர்கள் பிற் காலத்தில் எழுத்தாளர்களாக, பீச்சலனாக சிறந்து விளங்க முடியும். 
     மாணவர்களிடம் காணப்படும் உடல் திறன், அறிவுத்திறன் ஆகியவற்றை உணரச்செய்து, அவர்கள் எதிர்காலத்தில் பல்வேறு துறைக்களில் திறமை சளிகளை விளங்குவதற்கு பள்ளி பருவத்தில் தன்னம்பிக்கை டானிக்குகள் தருபவர்கள் ஆசிரியர்களே!
     ஆசிரியர்கள் எவ்வளவுதான் தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்த போதிலும், அந்த தன்னம்பிக்கையை அசைத்துப் பார்க்கிற அளவுக்கு வலித்தன பிரச்சனைகள், மாணவப்பருவம் கடந்த பிற காலத்தில், சொந்த வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும்  ஏற்படும் போது, மழையில் கரையும் மண்மலை போல  அப்படியே சரிந்து போகிறார்கள் இளம் தலை முறையினர்! 
     வேலையின்மை,வறுமை, குடும்பச்சூழல் எனப் பல சூல்நிலைக்களில் துவண்டு போகும் இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை தேவை படுக்கிறது. மனம் தளர்ந்து, சலிப்பு மிகுந்து, கடைசியில் விரக்தியடைந்து தற்கொலை பாதையை தேடும் இளையர்களும் இருக்கிறார்கள்.  இத்தகைய இளைஞர்கள் சொந்த வாழ்க்கையிலும், சமூக வல்ல்க்கயிலும் செயலூக்கக்கமாக பங்கு பெற அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டம் அவசியம். இச் சமயத்தில், அவர்கள் தங்களுடைய சிறந்த நண்பர்களிடமிருந்தும், அவர்களின் மரியாதையை  பெற்ற மூத்தவர்களிடமிருந்தும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்கிறார்கள். 
          ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்,
          வாசல் தோறும் வேதனை இருக்கும்,
          வந்த துன்பம் எதுவென்றாலும், 
         வாடி நின்றால் ஓடுவதில்லை’
    என்று கவியரசன் கண்ணதாசன் சுட்டிக்கட்டுவார். வாழ்க்கையை எவ்வாறு எதிர் கொள்வது என்பதை கற்று தருவதில் இலக்கியம் சிறந்த பங்காற்றுக்கின்றது. 
 ‘வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்! 
 ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்! வாழத்தேரியமலேயே       கொளைத்தனமகவே  
வாலிபத்தை விட்டு விடக்கூடாது!’
        என்று வலியுறுத்தும் கவிஞர் அ. மருதகாசி, ‘உள்ளத்தில் உரம் வீனுமடா’ என்று அழுத்தம் திருத்தமாக கூறுகின்றார்.
                    எண்ணெய் தீர்ந்து அணையப்போகும் அகல்விழக்கென எல்லா நம்பிக்கைகளும் வறண்டு போய் தற்கொலை பாதையைத் தேர்ந்து எடுத்துக்கொண்ட ஒருவரை, அந்த தற்கொலை எண்ணத்தை கைவிட்டு, நம்பிக்கையோடும்,செயல் துடிப்போடும் வாழ்க்கையை எதிர்கொள்ளச்செய்ய ஒரு புதினத்துக்கு ஆற்றல் உண்டா? 
        உண்டு! 
       என்னால் அடையாளம் காட்டமுடியும்! நச்சுக்கோப்பையை ஒரு கையிலும் அந்த நாவலை மறு கையிலும் எடுத்துக்கொள்ளட்டும்!
      இதக்கதையை படித்து முடித்ததும் ‘தாராளமாய் செத்துப்போ’ என்று சொல்லிவிட்டு கம்பீரமாய் தன்னம்பிக்கையோடு காத்திருங்கள்!
     அந்தப் புதினத்தை படித்து முடித்ததும் விஷக்கோப்பையை தூக்கி எறிந்துவிட்டு, ஒளிமயமான எதிர்காலத்தை தேடும் ஆன்ம பலம் கொண்ட மானிடனாய் அவன் மாறி விடுவான்!
     ‘சாவுக்கே சவால்’ என்பது அந்த நாவலின் பெயர். இந்த நாவலை எழுதியவருக்கு இரண்டு கைகளும் இல்லை. பரர்களை பேனாவால் பிடித்து இந்த நாவலை எழுதிஉள்ளார். கால்விரலால் பேனாவைப்பிடித்து எழுதுவதை விட கடினமானது, உதடுகளில் பேனாவை பற்றி எழுதுவது! உலகில் எண்ணற்ற மொழிகளில் அச் செறிய அந்த நாவலைப் படித்தவர் ஒரு நாளும் அந்த நாவலை மறந்திட முடியாது. 
     ‘நீங்கள் பலவீனமானவர் என்று எண்ணிக்கொண்டு இருந்தால் நீங்கள் பலமர்ரவர்களாகவே ஆகிவிடுவீர்கள். நீங்கள் பலம் பொருந்தியவர் என்று எண்ணினால், பலமுடையவர்களாக ஆகிவிடுவீர்கள்’ என்று கூறும் விவேகனந்தர், உனது பலம் உனக்குள்ளே என்று தன்னம்பிக்கை ஊட்டுகிறார். 
     ஒருவன் தன பலத்தை தானே உணர்ந்து கொள்ளாது இருந்தால் அவன் பலவீனமனவனாகவவே இருப்பான். தன்னம்பிக்கை உள்ளவன்தான் தன பலத்தை உணர்ந்து இருப்பன்.
     தன்னம்பிக்கை என்பது ஒரு பொருள் அல்ல. அது ஒரு கருத்துதான். ஆனால் அந்தக்கருத்து ஒருவர் மனதைப்பற்றிக்கொண்டதுடன்அதற்கு பொருள் வகை சக்தி வந்துவிடுகிறது. இந்த சக்திதான் தடைகளைத்தாண்டி ஒருவர்க்கு வெற்றிபாதை நோக்கி நடை போடவைக்கிறது. ஒருவர்க்கு மன வலிமை ஊட்டுவதும் இதே நம்பிக்கைதான். ஒருவர் தன வால்க்கசில் ‘எடுத்த காரியம் யாவினும் வெற்றி,வெற்றி’ என எக்க்கலாமிடத்தன்னம்பிக்கை தேவை! 
     வாழ்க்கை என்பது நீர் தேங்கிக்கிடக்கும் குளம். குட்டையாக இல்லாமல் தெளிந்த நீரோட்டமாய் இருக்க தன்னம்பிக்கை தேவை!
     கணம்தோன்றி கணம் மறையும் புழுக்களின் வாழ்க்கையாக மனித வாழ்க்கை இருந்து விடக்கூடாது. அதில் சாதனைகள் நிறைந்திருக்க வேண்டும். அப்படி சாதனைகள் நிறைந்த வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை தேவை!இந்த தன்னம்பிக்கையே வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு வலிக்கட்டும் ஒழி விளக்கு! அதன் வெளிச்ச மழையில் நனைபவர்க்கு முன்னேற்றம் கை தொடும் தூரமே! 
     உங்கள் மீது அதிக அக்கறையை உங்கள் பெற்றோரை விட யார் காட்ட முடியும்! அவர்கள் ஊட்டும் தன்னம்பிக்கை முன்னேற வைக்கும் உங்களை! தன்னம்பிக்கை உங்களிடம் குறைவாக இருக்கிறதா? கவலையை விடுங்கள்.
#உங்கள் நல்ல நண்பரிடம் பேச்சு கொடுங்கள்! உள்ளத்தில் ஊரும் தன்னம்பிக்கை.
#உங்கள் மீது அக்கறை காட்டும் ஆசிரியர் ஒருவர் இருந்தால் போதுமே, தன்னம்பிக்கை உறமேர்ருவர் உங்களுக்கு. 
      _இது என்னால் முடியும்.
      _எனது முயற்சி வெல்லும்.
      _என்னால் சாதிக்க முடியும் என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொள்ளுங்கள்.
                         
                   நன்றி
                                    இளவரசி