Monday, October 29, 2012

எது உன் குறிக்கோள் பகுதி 1


குறிக்கோளும் முடிவெடுத்தலும் 
இப் கட்டுரை பசுமைக்குமார் எழுதிய புத்தகத்தில் இருந்து படித்து அப்படியே உங்களுக்கு தருகிறேன் ... 

இளையவர்களை சமூக முன்னேற்றதுக்கு 
பாடுபடக்கூடிய நல்லவர்களாகவும் லட்சிய
நோக்கம் கொண்ட வல்லவர்களாகவும் 
உருவாக்கிடவேண்டும். அப்படி அவர்கள் 
உருவாகிவிட அவர்களுக்கு குரிக்கொல்குறிக்கோள் 
பற்றிய தெளிவும், எந்த ஒரு பிரச்சனையிலும் 
தெளிவான முடிவெடுக்கும் திறனும் வேண்டும்.
       இளமைப்பருவம் ஆக்கபுர்வமான சக்திகள் கொண்டது. வளமைமிக்கது. அபரிமிதமான ஆற்றல் கொண்ட இந்த இளம் பருவத்தினரைச் சமுதாயம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆக்க நோக்கத்திற்கும் இது பயன்படும். அழிவு நோக்கதிற்கும் பயன்படும். காட்டாற்று வெள்ளத்தை தேக்கி வைத்து விவசாயத்திற்குப் பயன்படுத்துவது போல இளையதலைமுறையினரின் ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இளைய தலைமுறையினர் தீயவர்களின் பிடிக்குள் சிக்கினால் அவர்களின் சக்தி யாவும் வீணாவதுடன் சமுதாயத்திற்கும் கேடாகமாறிவிடும்.
      இளையவர்களை சமூக முன்னேற்றதுக்குப் பாடுபடக்கூடிய நல்லவர்களாகவும் லட்சிய நோக்கம் கொண்டவல்லவர்களாகவும் உருவாக்கிடவேண்டும்.அப்படி அவர்கள் உருவாகிட அவர்களுக்குக் குறிக்கோள் பற்றிய தெளிவும் எந்த ஒரு பிரச்சனையிலும் தெளிவான முடிவெடுக்கும் திறனும் வேண்டும்.
      அவரது குறிக்கோளை அடையலாம் கண்டு கொள்ளும் திறன் மிகவும் இன்றியமையாதது. குறிக்கோள் இல்லாத வாழ்க்கை திசை தெரியப் பயணம் போன்றது. எங்கு தொடங்கி, எங்கு முடிப்பது என்ற தெளிவு வேண்டும்.
      இதுதான் பாதை, இதுதான் பயணம் என்ற புரிதலுணர்வு தேவை. வாழ்க்கை என்பது ஒரு வட்டம் அல்ல, அது இருந்த இடத்திற்கே சுற்றிச்சுற்றி ஒருநாளும் வருவதில்லை.
      வாழ்க்கை என்பது சூலலேணி வளர்சியைக்கொண்டது. ஆனாலும் அதில் தொடர்ச்சியான முன்னேட்டம் இருக்கும். இந்த சூலேணி படியில் எவ்வளவு படிகளைதொட வேண்டும் என்ற இலக்கு நிர்னயிக்காமல் தொடர்ந்து மேலேறுவது சோர்வெனும் பாறாங்கல்லைத் தலைக்குள் முளைக்க வைத்து விடும்.
     லட்சியதிற்குத்தான் சென்றடைய வேண்டிய இலக்கு, இலக்கை அடைவதற்கான திட்டம், திட்டத்தை நிறைவேடற்டறுவதற்கான மனபலம், விடமுயட்சி, துணிச்சல் போன்றன வேண்டும். தோல்வியைக்கண்டு துவண்டு விடக்கூடாது, அதிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளவேண்டும்.
     வெற்றியாளர்கள் பல துறைக்களிலும் இருக்கிறார்கள். அவர்களின் வெற்றிகரமான வாழ்க்கை அனுபவங்களை தெரிந்து கொண்டாலே, அவை வெற்றியை நோக்கி வீர நடை போட உத் வேகம் ஊட்டும். 
     வெற்றியை விட ஒருபடி மேல் சாதனை. ஒரு இலக்கைத்தொட்டு, வெற்றியை ஆரத் தழுவிக்கொண்டவகள், அடுத்து நிர்ணயிக்க வேண்டிய இலக்கு என்பது சாதனை புரிவது. பல துறைகளிலும் நாமறிந்த, தெரிந்து கொண்ட சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகள், நமது சாதனை மனோ பாவத்தை உரமூட்டி வளர்க்கும்.
     குறிக்கோளை அடைய நினைப்பவர்கள், வேர்ரியலர்களைத் திகழ விரும்புகிறவர்கள், சாதனையாளர்களை மாறத் துடிப்பவர்கள்ஆகிய இவர்களுக்கெல்லாம் வலிமை மிக்க அறிவாற்றல் தேவை. பலவீனமான எண்ணம் தோல்வியைத்தான் தழுவும். 
     எதிர் மறையான எண்ணம் உங்கள் வெற்றிக்கு தடையாக இருக்கும். ஒருவர் தன்னுடைய குறிக்கோளை கண்டு கொள்வது அவசியம். அது போலவே முடிவெடுக்கும் திறனும், பிரச்சனைகளை சந்திக்கும் துணிவும் அவசியம்.
     குழந்தைப்பருவம் முதல் இதற்கான பயிற்சி பெற்றால், இளமைப்பருவ வளர்ச்சியில் அவர்களிடம் ஆக்கபூர்வமான முன்னேர்ரதைக்கொண்டுவரும்.
     கால்களில் சிக்கியிருப்பது, உதறினால் கீழே விழும் கயிறு என்பதனை அறியாமல், பாம்பு ஒன்று காலைச் சுற்றியிருப்ப்பதாய் கருதிவிடக்கூடாது. சிக்கல் எதுவாயினும், சிக்கலி இருந்து விடுபட சிக்கல் முடிப்பபதை அவிழ்ப்பதா அறுத்து விடுவதா என்று முடிவெடுக்கத் தெரிய வேண்டும். 
     ஆதிரக்காறனுக்கு புத்தி மட்டு என்பார்கள், ஆத்திரம் அறிவுக்ககன்களை மறைத்துவிடும். ஆத்திரத்தில் எடுக்கும் முடிவு பயணத்திற்கு தடையாக முடியலாம். முஇவு தவறாகும் போது, வெற்றி வெகுதுரம் பொய் விடும்.
     முடிவெடுக்கும் போது அறிவு பூர்வமா முடிவெடுத்தல் சாலச்சிறந்தது. உணர்ச்சி பூர்வமாக முடிவெடுக்கக்கூடாது. “எண்ணித் துணிக கருமம்” என்றார் வள்ளுவர். அதே சமயம் நிதானமாக எடுக்கும் முடிவு அல்லது தாமதமாக எடுக்கும் முடிவும் தொல்வியைத் தளுவலாம். காலம் கருதி செயற்பட்டால் ஞாலத்தையும் வெல்ல முடியும். 
     முவேடுக்கும்போது, தன் வலிமை, பிறரது  வலிமை, இடம், பொருள், இவள யாவும் நமது கவனத்திற்கு வர வேண்டும். மனித வாழ்க்கைக்கு பலவகையான திறமைகளை பெற வேண்டியுள்ளது. அதில் முடிவெடுக்கும் திறனும் ஒன்று. 
     குறிக்கோள் பற்றிய தெளிவும், முடிவெடுக்கும் திறனும் உங்களை வெற்றிபடிகளில் வீர நடை போட வைக்கும்! அந்த வீர நடைக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
     சரியாகக் குறிக்கோளைக் நிர்ணயித்துக்கொல்வதும் சரியான முடி வெடுக்கும் திறன் பெறுவதும் தன்னம்பிக்கை தரும். தன்னம்பிக்கை இல்லாதவர்களால் தங்களுக்கான குறிக்கோள்களை நிச்சயித்துக்கொள்ள முடியாது. குறிக்கோளை அவர்கள் இனங்கண்டு கொள்ள  முடியாமலும் போய் விடும்.

    நாம் ஏன் குறிக்கோளை நிர்ணயிக்கத் தயங்குகிறோம்                   *நாம் வாழ்க்கையை பெரும்பாலும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. நம்மில் பலர் வாய் சொல்லில் வீரர்தான். அதை செயலில் காட்ட தயங்குகிறோம். 
*நம் வாழ்க்கைக்கு நாம் தான் பொறுப்பு என்று ஏற்றுக்கொள்வதில்லை. பிறர் நம்மை புரிந்து கொள்வது இல்லை என்போம். என் விதி என்போம். அனால், நம் செய்கைகளே நம் வாழ்க்கை தரத்தை நினஇக்கிறது என்று மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம். வாயில் வந்ததைப்பேசி, வேந்ததைத்தின்று விதி வந்தால் சாவோம் என்றே பலர் எண்ணி வாழ்கின்றனர். 
*நம்மில் பலருக்கு தம்மை பட்டிய தால்வேன்னம் இருக்கிறது. ஒரு விதமான குற்ற உணர்வு அவர்களை அலைக்கழிக்கிறது. சிறு வயது முதலிலே, நாம் விரும்பத்தகதவர்கள் என்ற எண்ணத்துடனேயே வளர்ந்தால் இலக்குகளை நோக்கி வெற்றி நடை போட இயலுமா?
*பலர் இலக்கு நர்ணயம் செய்வது முக்கியம் என்று நினைப்பது இல்லை. வாழ்க்கையின் அன்றாட அலைச்சல்களில் சிக்கித்தவிக்கும் பலருக்கு குறிக்கோள் பற்றி தெரிந்திருக்க வழியில்லை. எப்படி குறிக்கோளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரிவது இல்லை.
*பலருக்கு பிறர் என்ன சொல்வார்களோ என்று பயம். நம்மைச்சுட்டி இருப்பவர்களால் நாம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஒரு ஆவல். இதனால் பல நேரம் நாம் உண்மையாக விரும்புவதை செய்ய தயங்குகிறோம். சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்களே செய்ய விழைகிறோம். நம்மை கேலி செய்வார்களோ என்ற எண்ணத்தில் குறிக்கோளை நிர்ணயிக்க மறந்து விடுகிறோம். நமது குறிக்கோள் நம்மை மட்டும் தெரிந்திருந்தால் போதுமானது. யார் நம்மை உற்சாகப்படுத்துவார்கள் என்று நினைக்கிறமோ அவர்களிடம் மட்டும் பகிர்ந்து கொண்டால் போதுமானது. 
*கடைசியாக தோல்வி அடைந்து விடுவமோ என்ற பயத்தின் காரணமாகவும் குக்கொல்களைதவித்து விடுகிறோம். தோல்வியே வெற்றியின் ஆரம்பம் என்பதை நாம் மறந்து விடுகிறோம். தோல்விக்கு பயந்தால் நம்மால் எந்த வேலைதான் செய்ய இயலும்?
          வெற்றியடைய வேண்டு என்ற தாகம் உடையவர்கள். மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களை அவர்களுடைய வாழ்க்கையில் நிரும் அகற்ற வேண்டும். 
          குறிக்கோளை அடைய தன்னம்பிக்கை தேவை. திட்டவட்டமான முடிவெடுக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கும் தன்னம்பிக்கை தேவை. 
          குறிக்கோளும் தன்னம்பிக்கையும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. இவற்றை புஎஇந்து கொண்டு செயற்படும் போது, இளைய தலைமுறையின் ஒவ்வருவரின் ஆற்றலும் பயனுள்ள வழியில் பாய்ந்தோடும். பலன் பெருகும்!
          சரி, தன்னம்பிக்கை என்றால் என்ன? ஒருவர் வாழ்க்கையில் முன்னேற எவ்வாறு உதவுக்கிறது, தன்னம்பிக்கைகளுக்கு தடைகள் யாவை?

தன்னமிப்பிக்கை என்றால் என்ன?
“மனிதன் அற்புதமானவன், பல அற்புதங்களை படைக்கும் பிரம்மா” என்று உலக இலக்கிய மேதை மக்சிம்காங்கி வியர்ந்து பேசுவஅற. அத்தகைய அற்புதமான மனிதனின் வாழ்க்கை அருமையும் பெறுமையும் உடையதாக இருக்கவேண்டும்!
       ஆனால், 
       செயற்கரிய சிய நினைக்கும் மனிதன் நடந்தும் கடந்து செல்ல வேண்டிய பாதை வழுக்கம்நிலமாகவும், பாளை நிலமாகவும், காலை இடறச் செயும் பறைதளமாகவும் இருக்கிறது. சிறிது கவனம் தப்பினாலும் உடலும் உள்ளமும் ரணமாகிவிடும்! 
       அதனால், 
       “முன்னேறு மேலே மேலே” என அவன் நடை நடந்து செல்லும் போது கால்களில் ஒட்டிய துசிகளை உத்தற மறந்தால் அந்த துசிகளுக்கு இரும்பின் கணம் வந்து விடும்! ஈரம் சுமந்த பஞ்சு பொதியாய் மனம் கனத்துப் போகும், அவன் இட்ட அடி நோகும். எடுத்த அடி தளரும், நடை வேகம் குறையும். முன்னேற்றம் தோடு வனமாய் போய் விடும்! 
       பயிர் நிலதில்ன் கலைகள் மிகுந்திருந்தால் பயிரின் வளர்ச்சி தடைப்படும். மனித வாழ்வின் தளைகள் மிகுந்திருந்தால் முன்னேற்றம் தடைப்படும். ஆக, களைஎடுத்தலும், தளையறுதலும் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்! 
       ராபர்ட்புரூஸ் என்ற மன்னன், போரில் பல முறை தொல்விய்று, பகைவருக்கு அஞ்சி ஒளிந்து கொண்டு இருந்த போது, அவன் விழிகளுக்கு ஒழி எற்றி அவன் நெஞ்சுக்கு உரம் ஏற்றிய ஒரு நிகழ்ச்சி உங்களுக்கு ஞாபகம் வருக்கிறதா? 
       வலை பின்னும் சிலந்தி தமக்குரிய வலையை பின்னி முடிப்பதர்கில் அது திரும்ப திரும்ப முயற்சி மேற்கொள்வதை புரூஸ் மன்னன் வைத்த விழி அசைக்காமல் பார்துக்கொண்டு இருக்கிறான். அந்தச் சிலந்திக்கு சோர்வே இல்லையா? அதற்கு அலுப்பு ஏற்படவே இல்லையா? திரும்ப திரும்ப நூள் அறுபடும், வலை பின்னும் முயற்சி தடை படும். அதனால் என்ன? வலை பின்னி முடிக்கும் வரை அது ஓயவில்லை. வலை பின்னிய வெற்றி பெருமிதத்துடன் சிலந்தி?
      இவன் மட்டும் என்ன சோர்ந்து கிடக்க வேண்டும்? திரும்ப திரும்ப முயற்சி செய்தல் வெற்றி கிட்ட முடியாமலா போய்விடும்? வலை பின்னும் சிலந்தி சொல்லித்தந்த பாடம் இவன் உள்ளத்தில் அடைந்து கிடந்த தன்னம்பிக்கை ஊற்றைத் திறந்து விட்டது. அந்தத் தன்னம்பிக்கை அவனை  வெற்றியாளனாக்கி விட்டது. 

Monday, October 22, 2012

முன்னேறு!முன்னேற்று!! (சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்)பகுதி 4


சின்ன வயதிலேயே இதற்கு முன்பும் சீனிவாசன் சென்னைக்குப் போயிருக்கிறார். நண்பர் ஒருவர் இவரை வால்டாக்ஸ் ரோடில் ஒத்தக்கடை தியேட்டரில் வேலைக்குச் சேர்த்து விட்டிருந்தார்.

   அங்கு எடுப்பு வேலை, நாற்காலி தூக்கணும், துடைத்துச் சுத்தம் செய்யணும். காலையில் 1 பணம், இரவு 1 பணம் கூலி கிடைக்கும்.

   அதையே கை மேல் பலனாய் நினைப்பார். கையில் காசு பார்க்கும் சந்தோஷம். உழைப்பின் ஊதியம்! சின்னதோ பெரிதோ பலன் உடன் கிடைக்கிறது. வருமானம் கண்முன் தெரிகிறது.

   விவசாயத்தில் உடனே எதையும் எதிர்பார்க்க முடியாது. நிலம் சுத்தம் பண்ணி –உழுது –பயிரிட்டு –களை பறித்து –மருந்தடித்து –உரமிட்டு –மழை –இயற்கை சீற்றத்துக்குப் போராடி –ஈடு கொடுத்து –இரவு பகலாய்ப் பாடுபட்டாலும் –மூன்று மாதமோ –ஆறு மாதமோ கழித்துத்தான் பலன் தெரியும்.

   தானியம் வீட்டுக்கு வந்தாலும்கூட விற்கும்போது உரிய விலை கிடைக்காது. தூக்கிச் சுமந்து கொண்டு போய்ப் போன விலைக்குத் தள்ள வேண்டும்!

   ஆனால் –அங்கே –மதிப்பு மரியாதையில்லாவிட்டாலும் உடனே காசு கிடைக்கிறது! சொத்து சுகமில்லாவிட்டாலும் எங்கே வேண்டுமானாலும் போய்ப் பிழைக்கலாம் என்கிற தன்னம்பிக்கை அவருக்கு அப்போது வந்திருந்தது.

   அந்தத் துணிச்சல் காரணமாய் –வானமே எல்லை –பூமியில் எதுவும் இல்லாமலில்லை –ஒரே வானம் –ஒரே பூமி –எல்லாம் நமதே என்று பொள்ளாச்சிக்கு ஓட்டம்!

    ஆழியாறு டேமில் கல் தூக்கினார். அங்கு ஒருவாரம் பத்து நாட்கள் சம்பாதித்துச் சென்னைக்குப் பயணம்!

    வால்டாக்ஸ் ரோட்டில் சுந்தர் லாட்ஜில் தங்கி அங்கு இரவு கடையில் மாலை 4 முதல் 11 வரை எடுபிடி. 60 ரூபாய் சம்பளம், கூட வேலை பார்த்தவர்கள் பகலில் தூங்கி அல்லது ஊர் சுற்றிப் பொழுதைக் கழிக்க, சீனிவாசனுக்கு அப்படி வெட்டியாய்ச் சுற்றித் திரிய மனமில்லை.

   சும்மா சுற்றுவதற்குப் பதில் பகலிலும் ஏதாவது வேலை செய்யலாமே என்று வேலை தேடினார். எக்மோர் சந்திரபவனில் கிடைத்தது. காலை 8 முதல் மதியம் 1 மணி வரை –அங்கும் 60 ரூபாய் சம்பளம்.

   இரண்டு இடத்திலும் தொடர்ந்து வேலை. ஓய்வு கிடையாது. லீவ் எடுப்பதில்லை. எந்த  ஒரு காரியத்திலும் ஆத்மார்த்தமாய், மனம் ஒன்றி ஈடுபட்டால் உடல் சோர்வதில்லை. ஓய்வும் தேடுவதில்லை, உற்சாகமாய்ச் செயல்பட முடியும்.

   முடிந்தது!

   இதற்கிடையில் பாட்டிக்கு உடம்பு முடியாமல் போக – சீனிவாசனைத் தேடியிருக்கிறார்கள். ஆறு மாதத்திற்கு பிறகு எப்படியோ தகவல் பெற்று அண்ணன் இவரைத் தேடி வந்து விட்டார், கண்டுபிடித்து -``வா ஊருக்குப் போகலாம் –பாட்டி உன் நினைப்பில் வாடுகிறது ‘’என்று அழைத்தார். உடன் இவரது மனதும் கரைந்து போயிற்று, பாட்டி நினைப்பு எடுக்க -``சரி போய் ஒரு எட்டு பார்த்து வருவோம்’’ என்று கிளம்பினார்.

(4)

   விவசாயம் என்பது இன்று மட்டுமில்லை அன்றும்கூட லாபகரமானதாய் இல்லை. விவசாய நாடு என்கிறோம். விவசாயிதான் நாட்டின் முதுகெலும்பு என்போம். ஆனால் அவனுக்கு இருக்கும் பிரச்சனைகளை எவரும் கண்டுகொள்ள மாட்டோம்.

   தண்ணீர், மின்சாரம் தட்டுப்பாடு, உரத்தட்டுப்பாடு, கூலிக்கு ஆள் கிடைப்பதில்லை. கெளரவம் பார்த்துக் கொண்டு ஆட்கள் நகரத்திற்கு படையெடுத்தல்! பட்டணம் என்றால் சொகுசு வேலை – சொகுசாய் இருக்கலாம் என்கிற கனவு.

      கஷ்டப்பட்டுப் பயிர்களை வளர்த்தாலும் நோய்த்  தாக்குதல், பூச்சி, அரிப்பு! மருந்தடித்து மாள்வதில்லை. தேவைக்கு மழை இல்லாமல் அறுவடை சமயம் வந்து அழித்தல்!

   முன்பெல்லாம் ஆடு,   மாடுகள் கிராமங்களில் பெருத்திருக்கும். மாடுகள் –வண்டி –ஏர்- அவற்றிற்குத் தீவனம் –அவற்றின் மூலம் பால்  -எரு என இயற்கையோடு ஒன்றி –செயல்பட்ட காலத்திலும் கூட நஷ்டம்.

   என்னதான் முனைந்து பாடுபட்டாலும்,எதிர்ப்பார்க்கிற பலன் விவசாயிக்குப் போய்ச் சேர்வதில்லை. எல்லாப் பிரச்சனைகளையும்  மீறி மகசூல் எடுத்தாலும் கூட உரிய விலை கிடைப்பதில்லை.

   ஆகையால் விவசாயத்தை மட்டும் நம்பியிருந்து பிரயோஜனமில்லை என்பது சீனிவாசனுக்குப் புரிந்தது. இளம் ரத்தம். உள்ளுக்குள் வேகம் –உடலில் தெம்பு! மனதில் மமதை! நம்மால் முடியும் –முடியாதது எதுவுமில்லை என்கிர வெறி.

   ஊரில் வானம் பார்த்த பூமி ஆறு மாதத்திற்கு மட்டுமே வேலை. மற்ற நாட்களில் வெட்டியாய்ப் பொழுது போக்குவரத்து இவருக்குப் பிடிப்பதில்லை. உருப்படியாய் எதுவும் செய்யாமல் –வாழ்வை வீண்டிக்கிறோம் என்கிற உறுத்தல்.

   வேலையில்லை –சும்மாயிருக்கிறோம் என்பதற்காக ஊரை விட்டுப் போக முடியாது! விவசாயப் பணிகள் இல்லாவிட்டாலும் கூட மாடுகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும். வயிலிலும் சின்னச்சின்ன வளப்படுத்தும் வேலைகளையும் செய்தாகணும்.

   நிலங்களையும் கவனித்துக் கொண்டு, அதிகப்படி வருமானத்திற்கு என்ன செய்யலாம் என்கிற யோசனை போயிற்று.அப்போது உதித்தது  மளிகைக்கடை! அத்துடன் டீ ஸ்டால்! அப்புறம் சைக்கிள் கடை!

   கடை என்று ஆரம்பித்த பின்பு –பலருடனும் பழகும் வாய்ப்பு! செல்வாக்கு! அத்துடன் கொஞ்சம் செருக்கும் தோன்றும். எப்போதும் எதிலாவது உடலைச் செலுத்தும் போது திருப்தி. மனதும் செழிக்கும், உடலும் வளப்படும், நம்மால் எதையும் செய்யமுடியும் என்கிற தன்னம்பிக்கையும் வளர ஆரம்பித்தது.

   புது நடுவலூரில் கடை வளர்ந்து வந்த போது சீனிவாசனின் அண்ணன் ஒருவர் இறந்து போனார், கடைக்கும், வயலுக்கும் ஆள் தேவைப்பட்டது.

    அப்போது 1959.

   இன்னொரு அண்ணன் எல்லாவற்றையும் அழித்துவிட்டு ஆதரவில்லாமல் இருக்கவே சீனிவாசன் அவரை அழைத்து வந்து தன்னுடன் வைத்துக் கொண்டார்.

    அதுவரைப் பட்ட கஷ்டமெல்லாம் போய்ச் செல்வாக்குடன் அவர் முன்னுக்கு வரும்போது கண்படுகிற மாதிரி சிக்கல் ஒன்று இவரது கதவைத் தட்டிற்று.

    ஆக்கல் என்பது கடினம், அழிப்பது ரொம்ப எளிது. கிராமத்தில் அடிமட்டத்தில் கிடந்த ஒருவன் –அதுவும் சிறுவன் வேகமாய் முன்னுக்கு வருகிறான் என்பதைப் பலராலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

   இவனை எங்கே தட்டலாம் –எப்படிக் குழி பறிக்கலாம் என்று பலரும் பார்த்திருந்தனர். சீனிவாசன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எந்த பிரச்சனைக்கும் இடம் தராமல் காரியமே கண்ணாய் இருந்தார்.

  அங்கு ஊரில் அப்போது ராஜ் ரெட்டியார் என்பவர் மிகவும் செல்வாக்குடன் இருந்தார். வசதி –மிடுக்கு –செருக்கு என எல்லாமும் கொண்டவர். அவருக்கு ஒரு மகள்.

   அவள் கடைக்கு வரப்போக –சும்மா திரிவதைச் சிலர் திரித்துவிட்டனர். தீ கொளுத்திப் போட்டனர்.

சோழர்களின் பழங்கால செப்பேடுகள் மயிலாடுதுறையில் கண்டெடுக்கப்பட்டன


பிற்காலச் சோழர்களின் வரலாறு அடங்கிய செப்பேடுகள் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் கிராமம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவில் பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலில் தமிழக அரசின் இந்து சமய அற நிலையத் துறை மூலம் இந்தக் கோயிலில் முன் மண்டபம் கட்டும் பணிக்காக குழி தோண்டியபோது, பத்து அடி ஆழத்தில் சோழர் காலத்தைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்பேடுகள், 12 செப்புத் திருமேனிகள், பூசைப் பொருள்கள், வாத்தியக் கருவிகள், போன்றவை கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு. கருணாநிதியின் பார்வைக்காக வைத்தனர். "இந்த செப்பேடுகள் கிபி 1053 ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கலாம்," என்று மு.கருணாநிதி கூறியுள்ளார்.

கிடைத்துள்ள புதிய செப்பேடுகள் மூலம் பல்லவர்களிடமிருந்து தஞ்சாவூரை சோழர்கள் கைப்பற்றியதாக, ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனருமான ரா.நாகசாமி தமிழோசையிடம் தெரிவித்தார்.

முத்தரையர்கள் என்ற சிறு மன்னர்களிடமிருந்து தஞ்சையை சோழர்கள் கைப்பற்றியதாகவே இது வரை வரலாற்று ஆசிரியர்கள் நம்பியிருந்ததாகவும், ஆனால் இந்த செப்பேடுகள் தஞ்சை பற்றி முன்பு அறியப்படாத விபரங்களைத் தருவதாகவும் இரா.நாகசாமி தெரிவித்தார்.

தற்போது கிடைத்திருப்பவைதான் இந்தியாவிலேயே இதுவரையில்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவிலான செப்பேட்டுத் தொகுதிகள் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செப்பேடுகள் தமிழிலும் சமஸ்கிருத்திலும் எழுதப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த செப்பேடுகளை கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணித்த இராசேந்திர சோழனின் இரண்டாவது மகனான இரண்டாம் ராசேந்திரசோழன் வெளியிட்டுள்ளான்.

இந்த செப்பேடுகள் செய்யுள் வடிவில் எழுதப்பட்டுள்ளதாகவும், போரை நேரில் பார்த்த ஒருவர் அதை வருணிப்பது போல இந்த தகவல்கள் அமைந்துள்ளன என்றும் நாகசாமி குறிப்பிட்டார்.