Thursday, August 29, 2013

குழந்தைகளின் தோல்விகளும் அதற்க்கான தீர்வுகளும்








குழந்தைகளின் தோல்விகளும் அதற்க்கான தீர்வுகளும் ................

  


     
நாணயத்தை சுண்டினால் பூ, தலை என இரண்டில் ஏதாவது ஒன்று தான் விழும் என்பது போல் முயற்சியின் விளைவுகள் இரண்டு தான். ஒன்று வெற்றி, மற்றொன்று தோல்வி. கரும்பின் சுவை போன்று இனிப்பானது வெற்றி. கசக்கும் இயல்பு கொண்டது தோல்வி. பெற்றோர்களாகிய நாம் தோல்விகளாலேயே துவண்டு போய் இருப்பதால் நம் குழந்தைகளும் தோல்வியடைவதை விரும்புவதில்லை. அனுபவம் என்னும் அகராதியை வைத்துக் கொண்டு குழந்தைகளின் ஒவ்வொரு முயற்சிக்கும் ஏதேனும் வகையில் உதவி அவர்களுக்கு வெற்றியை அளிக்க முயற்சிக்கிறோம்.

ஒரு சிறுவன் போட்டி ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்தான். மைதானத்தில் அமர்ந்து அவனின் பெற்றொர் மகன் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அச்சிறுவன் விளையாடும் போது ஒரு பாயிண்ட் எடுத்து விட்டால் பார்த்துக் கொண்டிருக்கும் பெற்றோர் துள்ளிக் குதிப்பதும், ஏதேனும் தவறு செய்து விட்டால் உடனே வெளியிலிருந்து கடிந்து கொள்வதுமாக பெற்றோரின் நடத்தை இருந்தது. கிட்டத்தட்ட சிறுவன் தோற்பது உறுதியாகிவிட்ட நிலை நிலவிய போது பெற்றோரின் முகம் பெரும் சோகத்தில் இருந்தது. விளையாட்டின் முடிவில் தோற்ற அந்த சிறுவனின் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருக்க அவனின் பெற்றோர் ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தனர். என்னுடைய மதிப்பீட்டின் படி சிறுவன் விளையாட்டில் தோற்றதைவிட பெற்றோரிடம் அவமானப்பட நேரிட்டதே என்பதற்காகத்தான் அழுவது போல் தெரிந்தது. ஏனென்றால் பெற்றோருடன் வராத சிறுவர்கள் தோற்றபோது பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தங்கள் நண்பர்கள் போட்டியில் விளையாடுவதுப் பார்த்து அவர்களை மகிழ்ச்சியுடன் ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தனர். குழந்தைகளுக்கு ஏற்படும் தோல்விகளை பூதாகரமாக்குவது பெற்றோர்தான் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

நல்ல பெற்றோரின் கடமை வெற்றி தோல்வி பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதல்ல. மாறாக முயற்சி என்றால் என்ன என்பதை சொல்லிக் கொடுப்பது தான். விளையாட்டு, போட்டி, வாழ்க்கை என எல்லாவற்றிலும் முயற்சிப்பதே முக்கியம் என்பதையும், அறிவுப்பூர்வமாக முயற்சி செய்வது எப்படி என்பதையும், கடினமாக உழைப்பது எப்படி என்பதையுமே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

முயற்சியின் முடிவு வெற்றியாக அமைந்துவிட்டால் குழந்தை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்த வேண்டுமே தவிர, அதனைப் பெரிதுபடுத்தி குழந்தையின் மனதில் கர்வம் ஏற்பட பெற்றோர்க் காரணமாக இருக்கக் கூடாது. முடிவு தோல்வி என்றால் முயற்சி சரியான பாதையில் இல்லை என்பதை பெற்றோர் உணர்த்த வேண்டும். தோல்வியைக் காட்டி குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தக் கூடாது.

சிறுவயதில் எளிய காரியங்கள் செய்யும் போது குழந்தைகள் தோல்வியை சந்திப்பது நல்லது. தோல்வி என்றால் என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள இவ்வனுபவங்கள் உதவும். வெற்றிக்கான முயற்சிகளை எவ்வாறு எடுக்க வேண்டும் என்பதை இத்தோல்விகள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும். பிற்காலத்தில் பெரிய முயற்சிகளில் தோல்வியடையும் போது மனம் கலங்காமல் மீண்டும் முயற்சிக்கும் மனப்பான்மை வளரும். இக்கால கட்டத்திலோ சிறுவயதில், சின்னசின்ன முயற்சிகளில் பெற்றோர் உதவியுடன் ஏராளமான வெற்றிகளை குழந்தைகள் பெறுகின்றனர். எல்லோராலும் சாதிக்கக் கூடிய இவ்வெற்றிகளால் பயன் ஏதும் இல்லை. இதே குழந்தைகள் பெரியவர்களானதும் ஒரே தோல்வியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்களால் தனித்து முயற்சி செய்யவும் முடிவதில்லை. தோல்வியைத் தாங்கிக் கொள்ளவும் இயலவில்லை.

ஒரு குழந்தை எல்லா முயற்சிகளிலும் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது என்றால் பெற்றோர் சற்று உஷாராக இருக்க வேண்டும். அக்குழந்தையின் மனதில் தோல்வியே எனது வாழ்க்கை என்ற மனப்பான்மை உருவாக வாய்ப்புண்டு. அந்த மனப்பான்மை உருவாகிவிட்டால் அதற்குப் பின் குழந்தை எந்த முயற்சியையும் எடுக்காமல் வாழ்க்கையில் எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குப் போய்விடும். இது போன்ற குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகளை புதிய முயற்சி எடுப்பதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். பழைய சூழ்நிலையில் ஏற்பட்ட தோல்விகள் புதிய சூழ்நிலையில் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதையும், புதிய சூழ்நிலை எவ்வாறு மாறியிருக்கிறது என்பதையும், குழந்தைக்கு அறிவு வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் உணர்த்துவது பெற்றோரின் கடமை.

வெற்றியடைந்து விட்டால் வியாக்கியானம் பேசுவதும், தோல்வியடையும் போது துவண்டு போவதும் குழந்தைகளின் இயல்பு. பெற்றோர் இரண்டையுமே ஊக்குவிக்கக் கூடாது. வெற்றி தோல்வியை வைத்து குழந்தைகளை மதிப்பிடக் கூடாது. ஒரு குழந்தை வெற்றி பெறலாம் அல்லது தோற்கலாம். அவைகளுக்காக நம் குழந்தைகளுக்கு பாசத்தைக் காட்டுவதை விட அவர்கள் நம் குழந்தைகள் என்பதற்காக பாசத்தைக் காட்டினாலே உங்கள் குழந்தை வெற்றிக் குழந்தையாக வளரும்.

Sunday, August 25, 2013

தாழ்வு மனப்பான்மையை விட் டொழியுங்கள்...


தாழ்வு மனப்பான்மையை விட் டொழியுங்கள்...





கடவுள் எப்போதுமே ஓரவஞ்சனை காட்டுவதில்லை. ஒருவரை சிறந்தவராகவும், இன் னொருவரை தாழ்ந்தவராகவும் படைப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் மூளையின் திற னில் வித்தியாசம் இருப்பதி ல்லை, ஆனால் அதன் விரு ப்ப செயல்பாட்டில் வேறுபாடு இருக்கிறது. ஒருவரால் சிறப் பாக செய்ய முடிந்த ஒரு விஷயத்தை இன்னொருவ ரால் செய்ய முடி யாது. அவர் வேறொரு விஷயத்தை சிறப் பாக செய்யும் ஆற்றலைப் பெற்றிருப்பார்.

நீங்கள் உங்களின் நினை வாற்றலை மேம்படுத்த விரும்பி னால், முதலில் உங்களின் தாழ்வு மனப்பான்மையை விட் டொழியுங்கள். உலகின் மிக ப்பெரிய மேதைகள் பலர், மிக மோசமான ஞாபக மறதி நோயுள்ளவர்கள் (உதாரணம்-ஐன்ஸ்டீன்) என்பதை நீங்கள் படித்தி ருப்பீர்கள். எனவே நி னைவுத்திறன் குறைபா டு என் பது அறிவுத் திற ன் தொடர்பானதல்ல. அதேசமயம் அது வாழ்க் கைக்கு தேவையான விஷ யமாகவும் இருக்கிறது. எனவே முறையான பயிற்சி களின் மூலம் உங்களின் குறையை சரிசெய்யலாம்.

பலாப் பழம் இயற்கை மருந்துகள்

முக்கனிகளில் ஒன்றான பலா சில குறிப்பிட்ட காலங்களில் மட்டுமேக் காய்க்கக் கூடியது. ஆனால் பலாப் பழத்தை விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள். அவ்வளவு சுவையான பலாப் பழத்தில் எத்தனையோ மருத்துவ குணங்கள் உள்ளன.
கண் பார்வைக்கு உதவும் விட்டமின் ஏ பலாப்பழத்தில் அதிக அளவில் உள்ளது.
இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தைத் தரும். நரம்புகளை உறுதியாக்கும், ரத்தத்தை விருத்தி செய்யும்.
அடிக்கடி நோய் தாக்கி அவதிக்குள்ளாகுபவர்கள் பலா பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும்.

Friday, August 23, 2013

தமிழர்களின் வீரத்தின் சிலம்பம்

சிலம்பம், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் விளங்குகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. "சிலம்பல்' என்ற வினைச் சொல்லுக்கு "ஒலித்தல்' என்பது பொருள். மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, மிருகங்களின் இரைச்சல் போன்ற நாலாவித ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற பெயருண்டு. எனவே, மலை நிலக் கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்ற காரணங்களால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட் டத்தில் கடையநல்லூருக்கு மேற்கே உள்ள மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியினருள் "சிலம்பரம்' என்ற பெயரும் வழக்கில் உள்ளது.

சிலம்பம், தமிழர்களின் வீரவிளையாட்டு. திருக்குறளில் "கோல்' என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே' என்ற வரிகள் மூலம், "தண்டு' என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகிய நோய்கள் நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடியில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கிறது.

அகத்தியர் தமிழகத்திற்குள் நுழைந்த காலம், ராமனின் வருகைக்கு முன்பாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். சுக்ரீவன் தென் பகுதியில் சீதையைத் தேட, வானரங்களை அனுப்பும் போது பொதிகை மலையில் இருக்கும் அகத்திய முனிவரை வணங்கிச் செல்லுமாறு கட்டளையிடுகிறான். எனவே, கி.மு., 2000க்கும் முன்பாக சிலம்பக் கலைக்கு, பொதிகை மலை அடிவாரத்தில் ஒரு பயிற்சிக்கூடம் இருந்து வந்துள்ளது என தெரிகிறது.

ஆனால், சிலம்பக் கலை பற்றிய அகழாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மையானவை. கி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்சநல்லூர் அகழாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன.

சிப்பி வளையல்கள், உலோகத் தொழிற்கலையில் வல்லவரும், ஜப்பானியத் தீவுகளை ஆய்வு செய்தவருமான பேராசிரியர் கௌலாண்ட், ""பெரும் எண்ணிக்கையிலான இரும்புப் படைக்கலங்கள், கருவிகள் மற்றும் இரும்பை உருக்கும் ஆழ்ந்த அறிவு ஆகியவை இருப்பதிலிருந்து இரும்பை உருக்குதல் என்ற எதிர்பாரா நிகழ்ச்சி, இரும்புத் தொழில் ஐரோப்பாவைக் காட்டிலும், பழைய இரும்புக் காலத்தில் இடம் பெற்றிருந்த இந்திய தீபகற்பத்தில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

சிலம்பத்தில் சுவடு, தெக்கன் சுவடு, வடக்கன் சுவடு, பொன்னுச் சுவடு, தேங்காய் சுவடு, ஒத்தைச் சுவடு, குதிரைச்சுவடு, கருப்பட்டிச் சுவடு, முக்கோணச் சுவடு, வட்டச் சுவடு, மிச்சைச் சுவடு, சர்சைச் சுவடு, கள்ளர் விளையாட்டு, சக்கர கிண்டி, கிளவி வரிசை, சித்திரச் சிலம்பம், கதம்ப வரிசை, கருநாடக வரிசை போன்றவை அடங்கும்.

கராத்தே என்ற வீர விளையாட்டின் "கடா' என்ற போர்ப்பிரிவு, தன் பெயரைப் பெற்றதற்கு, கதம்ப வரிசையைக் காரணமாக ஏற்கலாம். இரண்டின் செயல்பாடுகளும் ஒன்றே.

"கராத்தே' என்ற பெயரிலும் "கரம்' என்ற சொல் மூலமாக உள்ளது. கராத்தே வீரக் கலையின் தாய் குங்பூ. இக்கலையை கி.பி.522ல் சீனா சென்ற பல்லவ இளவல் புத்திவர் மன், (போதி தர்மன்) புத்த துறவி களுக்கு கற்றுக் கொடுத்தார்.

சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.

சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., திரைப்படங்களின் வாயிலாக சிலம்பக்கலைக்குப் புத்துயிர் ஊட்டினார். சிலம்பத்தில் "வளரி' என்ற எறி ஆயுதம் மருதுபாண்டியர் காலத்தில் வழக்கில் இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட மருது பண்டியர், வளரி வீசுவதில் வல்லவராய் விளங்கினார்.

சின்ன மருதுவைத் தூக்கிலிட்ட கர்னல் வெல்ஸ் என்பவர் எனது ராணுவ நினைவுகள் என்னும் நூலில், ""சின்ன மருது தான் எனக்கு ஈட்டி எறியவும், வளரி வீசவும் கற்றுக் கொடுத்தான். வளரி என்னும் ஆயுதம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆற்றலும், திறமையுமிக்க ஒருவரால் 300 அடி தூரம் குறி தவறாமல் வீச முடிகிறது'' என்று கூறியுள்ளார்.

இந்த ஆயுதம் தமிழருக்கும் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கும் பொதுவானது. தெற்காசியாவிலிருந்து 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய பழங்குடியினர், அங்கு குடிப்பெயர்ந்து சென்றதாகவும், அவர்களின் மொழி, கலாசாரம், பண்பாடு உருவ அமைப்பு முழுவதும் தமிழரோடு ஒப்புமை உடையது எனவும் கூறியுள்ளனர்.

தமிழர்களின் வளரியைப் பற்றி அக்காலத்தில் புதுக்கோட்டை திவானாய் விளங்கியவர் தர்ஸ்ட்டனுக்கு எழுதியிருப்பது, வளரியின் அமைப்பு பற்றியும் அது பயன்பட்டு வந்தவிதம் பற்றியும் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.

""வளரி என்பது இழைக்கப்பட்ட மரத்தில் செய்யப்பட்ட சிறு ஆயுதம். சில சமயங்களில் இரும்பினாலும் செய்யப்படுவதுண்டு. பிறை வடிவிலான அதன் ஒரு முனைப்பகுதி அடுத்ததை விடக் கனமாய் இருக்கும். (அரிவாள் அல்லது கத்தியைப் போல் அல்லாமல்) இதன் வெளி விளிம்பே கூர்மைப்படுத்தப் பட்டிருக்கும். இதை எறிவதில் பயிற்சி உள்ளவர்கள், இதன் லேசான முனையைக் கையில் பிடித்து, வேகம் கொடுப்பதற்காகச் சிலமுறை தோளுக்கு உயரே சுழற்றி விசையுடன் இலக்கை நோக்கி வீசி எறிவார்கள்.

ஒரே எறியில் குறி வைக்கப்பட்ட விலங்கையோ, ஏன் மனிதரையோ கூட வீழ்த்தும் படி வளரியால் எறியும் வல்லமை படைத்தவர்கள் உண்டெனத் தெரிகிறது. ஆனால், தற்சமயம் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்றே கூறும்படியான நிலை உள்ளது. ஆனாலும், தற்சமயம் முயல், குள்ளநரி முதலியவற்றை வேட்டையாடுவதற்கு வளரி பயன்பட்டு வருவதாகத் தெரிகிறது. இருந்த போதிலும், வளரியின் வாழ்வு முடிந்து கொண்டு வருகிறது என்று தான் கூற வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.  பெரிய பாண்டியர், தெப்பக்குளத்தின் வடகரையில் இருந்து எறிந்த வளரி, அதன் மைய மண்டபத்தைத் தீண்டாமல் அதையும் தாண்டி எதிர்கரையில் உள்ள முத்தீசுபுரத்தில் போய் வீழ்ந்ததாம்; அதுவும் எதிர்கரையிலிருந்த ஆலமரக் கொப்புக்களைக் கத்தரித்து, அதைக் கடந்து வீழ்ந்ததாம். இது இக்கால ஒலிம்பிக் சாதனையை விட அதிக தூரமாகும் என ஆய்வாளர் மீ.மனோகரன் "மருதுபாண்டிய மன்னர்கள்' என்ற நூலில் வியப்புடன் கூறுகிறார்.

தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் பெரும் முயற்சியால் தமிழக அரசு சிலம்பாட்டத்தை பள்ளிகளில் விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. பூ.திருமாறன் அவர்களின் பெரும் முயற்சியால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயப்படிப்பாகவும் நடத்தப்படுகிறது.

பாளையங்கோட்டை தூயசவேரியர் தன்னாட்சி கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தென்பாண்டி தமிழரின் "சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்'  என்ற நூலை வெளியிட்டுள்ளது.

Saturday, August 17, 2013

நோக்கு வர்மம் சில அடிப்படைகள்

நோக்கு வர்மம். தீபாவளி நாளில் இருந்துதான் இந்த வார்த்தை பிரபலமாகி இருக்கிறது. அதற்கு முன்னர் வரை இப்படியான ஒன்றைப் பற்றி நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திக்க வாய்ப்பில்லை. இத்தனைக்கும் இது நம்முடைய அடையாளம், குறைந்த பட்சம் இப்படியான தகவல்கள், திரைப்பட ஊடகம் மூலமாவது தமிழர் பார்வைக்கு வந்திருப்பது மகிழ்வைத் தருகிறது. தமிழன் தன் பார்வையையும் கூட ஆயுதமாக உணர்ந்து அறிந்து பயன்படுத்தியிருக்கிறான் என்பதே பெருமிதமான உணர்வுதானே!.

இப்படித்தான் தமிழரின் அநேக பெருமைகள் மறைவாகவே இருக்கின்றன. அவை தாமாய் மறைந்ததா இல்லை மறைக்கப் பட்டதா என்று ஆராயப் புகுந்தால் தேவையில்லாத வீண் மன கசப்புகளே மிஞ்சும்.

நோக்கு வர்மம் என்பது அடிப்படையில் வர்மங்களின் வகைகளில் ஒன்று. இதைப் பற்றிய அறிமுகம் மற்றும் விளக்கத்தினை ஏற்கனவே ஒரு பதிவில் பகிர்ந்திருக்கிறேன். அதன் விவரங்களை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம். இந்த முறை வர்மம் பற்றி அகத்தியர், போகர் போன்ற பெருமக்கள் தங்களின் நூல்களில் விளக்கிக் கூறியிருக்கின்றனர்.

ஒரு சிலர் நமது நோக்கு வர்மம் மேல் நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் ஹிப்னாடிஸம், மெஸ்மரிசம் கலைகளுக்கு இணையானதா என்ற கேள்விவியினை மின்னஞ்சல்களில் முன் வைத்திருக்கின்றனர். என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் இரண்டும் வெவ்வேறான அடிப்படையைக் கொண்டவை என்றே கருதுகிறேன். இதற்கு இவற்றின் அடிப்படைகளை புரிந்து கொள்வது அவசியமாகிறது.

பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்பவரால் பிரபலமானதால் இதற்கு மெஸ்மரிசம் என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஹிப்னாடிஸம், மெஸ்மரிசம் போன்ற கலைகள் பற்றி திரைப்படங்கள், கதைகள் மிகையான ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன என்பதே உண்மை. நிதர்சனத்தில் இந்த ஊடகங்கள் காட்சிப் படுத்துவதைப் போல நினைத்த மாத்திரத்தில் ஒருவரை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவே முடியாது. ஏனெனில் இந்த முறையில் ஒருவரை இயக்க விரும்புபவர் அவர் அனுமதி இன்றி நிச்சயமாக அதைச் செய்திட முடியாது.

அவர் அனுமதி பெற்ற பின்னர் "அறிதுயில் நிலைக்கு" அவரை கொண்டு சென்று அதன் பின்னர் அவர் ஆழ்மனதிற்குள் ஊடுருவி அவரை கட்டுப்பாடிற்குள் கொண்டுவர வேண்டும். அதிலும் அறிதுயில் நிலைக்கு செல்பவர் யாருக்கும் எக்காரணம் கொண்டும் சொல்ல கூடாது அல்லது தெரியகூடாது என்று தீர்மானமாக இருக்கும் விஷயங்களை தெரிந்து கொள்ள முடியாது.

இங்கு அறி துயில் என்பது கேட்டல், பேசுதல், தொடுகை போன்ற உணர்வுகளுடன் கூடிய ஒருவகை உறக்க நிலை.

இந்த ஹிப்னாடிஸம், மெஸ்மரிசம் போன்ற கலைகளால் ஒருவரிடம் இருக்கும் மன அழுத்தம், கவலைகள், தீய பழக்கவழக்கங்கள், குற்ற உணர்ச்சி போன்றவற்றை இல்லாது செய்யலாம் அது தவிர அவரின் கடந்தகால வாழ்க்கை சம்பவங்கள். முற்பிறப்பு நினைவுகள் வரை அறியலாம் என்று கூறப்படுகிறது.

மாறாக நோக்கு வர்மம் என்பது நொடிப் பொழுதில், நினைத்த மாத்திரத்தில் பார்வையாலேயே எதிரியை வீழ்த்தவோ அல்லது தன் முன்னாலிருக்கும் ஒருவரை தனது முழுக் கட்டுப்பாடிற்குள் கொண்டுவரவோ முடியும். இது மிகையான வாதமாக இருக்க முடியாது. ஏனெனில் இது பற்றி அகத்தியரும், போகரும் உறுதியான கருத்துக்களையே தங்களின் நூலில் கூறியிருக்கின்றனர்.

எல்லோரும் நினைப்பதைப் போல இந்த கலை அடியோடு அழிந்து போய் விட்டதா என்றால் இல்லை என்றுதான் சொல்லுவேன். இன்றும் கூட இந்த கலையின் எச்சங்கள் நம்மிடையே இருந்து கொண்டுதானிருக்கின்றன. அது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

நன்றி சித்தார்கள் . கொம்


Wednesday, August 14, 2013

ஆண் பெண் மூளை வித்தியாசங்கள்

    
பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடியவகை ­யில் வடிவமைக்கப்பட்டுள்ளது!
உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில்பேசவும் சமையல் செய்யவும் முடியும்.
ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒருபணியை செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டள்ளது.

உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியை பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது! ( அவர்களின் கவணம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது! )
மொழி
பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக் கொள்ள முடியும்!
அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் ­ பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ­ ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.
பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS).
ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்துதீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாளான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் ­ உணர்ந்துகொள்ள முடியாது.
வாகனம் ஓட்டுதல் :
வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும்ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால்முடியும்.
ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவேஇந்த கணிப்புக்களை மேற்கொள்ளும்.
இதற்கு காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறன்”ஆகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையைக்கேட்டுக் ­கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம்இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றா­ர்கள்.

பொய்ப்பேச்சு :
ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்துகொள்வார்­கள்! ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை.
காரணம் பெண்கள் பேசும் போது 70%ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை!

பிரச்சனைக்கான தீர்வுகள் :
பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் ­ தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும். இதனால் பிரச்சனையுள்ள ஆண்கள் தனிமையில்தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.
ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்னின் மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது ­ யாராவது ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக சொல்வதனூடாக திருப்தியடைந்து ­கொள்ளும்.
சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நின்மதியாக படுத்துறங்குவாரகள்.

தேவைகள் :
மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும் ­.
ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில் பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும் ­.
மகிழ்ச்சியின்மை ­.
ஒரு பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை இருந்தால்  அவர்களால், அவர்களின் வேலையில் கவணம் செலுத்த முடியாது.
ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவணம் செலுத்த முடியாது.
உரையாடல்.
பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்­கள்.
நடவடிக்கை :
பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்!

மூளை எப்போதும் ஒவ்வறு நிலையிலும் இருக்காது அவை எப்போதும் தமது செயலை செய்தவண்ணமே இருக்கும்......

உங்கள் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் தினமும் போனில் குலாவும் சகோதரர்களே உங்கள் தாயிடமும் தந்தையிடமும் பேசி எவ்வளவு காலமிருக்கும்???


அவள் ஒரு கிராமத்து அம்மா......
நான் பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தேன்......

என்னிடம் வந்தாள்....." ஆத்தா இத எப்படி பேசுவது? சொல்லித் தறியா? கையில் புதிய போன்..."

நான் சொன்னேன்:" அம்மா பச்சை பட்டன் அமுக்கினால் பேசணும்.....சிகப்பு புட்டன் அமுக்கினால் கட் பண்றது அம்மா என்று சொன்னேன்....


அதற்கு அந்த அம்மா:_" இது என்னோட பையன் வாங்கி கொடுத்தது....." எவ்வளவு பெருமிதம்.......

அந்த அம்மா முகத்தில்......

என்னோட பையன் வெளிநாட்டுல இருக்கான்......மாசம் ஒரு தடவை பேசுவான்.........

இந்த தடவை இரண்டு மாசம் ஆச்சு? பேசவே இல்லை.....

Tuesday, August 13, 2013

சாமுத்திரிகா லட்சணமும் மச்ச சாத்திரமும் - ஆண்கள்

உடலில் அமைந்துள்ள அங்கங்களின் அமைப்பைப் பற்றிக் கூறுவது தான் சாமுத்ரிகா சாத்திரம். மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துக் கூறுவது இந்த சாத்திரம்
அடிப்படை
தான் எப்படிப்பட்டவன்; தன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்கிற கேள்விகளுக்கு விடை அறிய எண்ணும் மனித வேட்கையின் விளைவுகளாக எழுந்த சந்தைச் சாத்திரங்கள் பல. அவற்றில் சிலவற்றிற்கு அறிவியல் பூர்வமான விளக்கங்களும் வானவியல் அறிவின் அடிப்படைகளும் இருந்தன. கைரேகை சாத்திரம், ஜாதகம், எண் சோதிடம், கௌளி சாத்திரம், மச்ச சாத்திரம், அதிர்ஷ்டக் கற்கள் போன்றவை அவற்றில் சில. இந்த வகை சாத்திரங்களில் ஒன்று தான் சாமுத்ரிகா சாத்திரம்.

மேற்கத்திய வகை அறிவியல் வளர்ச்சிக்கு, எந்தக் கண்டுபிடிப்பையும் புத்தகபூர்வமாக்கிப் பரவலாக்கும் பாணி அடிப்படை. ஆனால் கீழை நாடுகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன் அறிஞர்கள் தாம் ஆய்ந்து அறிந்தவற்றைப் பொதுவாக்காமல் தம்முடைய முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களுக்கு மட்டுமே சொல்லித் தந்து மறையும் வழக்கம் இருந்தது. அதனாலேயே காலப்போக்கில் அடிப்படையும் ஆழமும் தனித் தன்மையும் இழந்து மறைந்துபோன பழமை வாய்ந்த இந்தியக் கலைகளும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் அதிகம். சாமுத்ரிகா சாத்திரம் அவற்றில் ஒன்றாக இருக்கலாம்.
சாமுத்ரிகா சாத்திரம்
உடலில் அமைந்துள்ள அங்கங்களின் அமைப்பைப் பற்றிக் கூறுவது தான் சாமுத்ரிகா சாத்திரம். மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துக் கூறும் இந்த சாத்திரம் சிலை வடிப்பவர்களுக்கும் சித்திரம் வரைபவர்களுக்கும் அடிப்படையாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்த சாத்திரத்தில் தேர்ந்த சிற்பிகளும் ஓவியர்களும் படைக்கும் சிற்பங்களும் ஓவியங்களும் காலம் கடந்து புகழ்பெறும்.
இந்த சாத்திரத்துக்கு இன்றைய தேதியில் எந்த வித அறிவியல் பூர்வ ஆய்வுகளின் பின்னணித் துணையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆண்களில் அழகன் எப்படி இருக்க வேண்டும்; பெண்களில் சிறந்த அழகி எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கப்பட்டிருக்கும் இந்த சாத்திரத்தின் அடிப்படையில் எப்படிப்பட்ட அவயவங்கள் இருந்தால் அந்த ஆண் அல்லது பெண்ணின் இயல்புகள் எப்படி இருக்கும் என்றும் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளது.
ஆண் பெண் வகைகள்
மூவகை ஆண்கள் (முயல், காளை, குதிரை), மூவகைப் பெண்கள் (மான், பெட்டை, யானை), நான்கு சாதிப் பெண்கள் (பத்தினி, சித்தினி, சங்கினி, அத்தினி) போன்ற வகைப்பாடுகள் பிரபலமாக அறியப்பட்டவை. எந்த வகை ஆண்கள் எந்த வகைப் பெண்களை மணந்தால் இல்வாழ்க்கை சிறப்புற அமையும் என்று சொல்லப்பட்டிருக்கும் இந்த சாத்திரத்தின் அடிப்படையில் பலன்கள் சொல்வோர் இப்போது இல்லை.
சில உதாரண லட்சணங்கள்
ஆண்
ஆள்காட்டி விரல் நீளமாக இருந்தால் எதிலும் தலைமை ஸ்தானம் வகிப்பவர்களாகவும், மிகுந்த அதிகாரங்களை உடையவராகவும் இருப்பார்கள். சற்றே நீலம் பாய்ந்த நாக்கினைப் பெற்றிருப்பது உத்தமம்; அவர்கள் திரண்ட ஐசுவரியங்களைப் பெற்றிருப்பார்கள். குழிந்த மலர்ந்த கண்களைப் பெற்றவர்கள் இரக்க சிந்தை உடையவர்களாக இருப்பார்கள்.
பெண்
சங்கு போன்ற கழுத்தினை உடைய பெண்கள் பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை தேடித் தருவார்கள். மூக்கு நீண்டு இருந்தால் நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் பெறுவார்கள். கண்புருவங்கள் வில்லைப் போல் வளைந்து இரு புருவங்களும் சேராமல் இருந்தால் உலகில் ஒருகுறையும் அற்ற சுகபோக வாழ்வு வாழ்வார்கள்.
ஆண்கள் சரீரம்(உடலமைப்பு) 
1. தலை - ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம் உண்டு. பின் பகுதி புடைத்திருப்பின் அறிவு உண்டு. தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரம்.
2. நெற்றி - அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வமும் உண்டு. மிகச் சிறுத்திருப்பின் மூடனாவான். நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம் உண்டாகும். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடமாம்.
3. கண் - ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக்கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும்.
4. மூக்கு - உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர்ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.
5. வாய் - அழகான,சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும்.
6. உதடு - உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறைந்திருக்கும்.
7. கழுத்து - ஆண்களின் கழுத்து பருத்தும், மத்திம உயரம் உடையதாகவும் இருப்பின் அதிர்ஷடமாம். மிக உயரமாகவோ, மிகக் குட்டையாகவோ, நரம்புகள் தெரியும்படியோ இருந்தால் வறுமையாம்.
8. தோள் - தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த காரியம் முடியாது.
9. நாக்கு - நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கருப்புப் புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷடமாம். கருத்தும், வெளுத்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரமாம்.
10. பல் - மெல்லிய ஒடுக்கமான பற்களை உடையவர்கள் கல்விமான் ஆவர். கூரிய பற்கள் இருப்பின் கோபம் அதிகம் வரும். வரிசை தவறி, ஒன்றுக்கு மேல் ஒன்று இருப்பின் தரித்திரமாம்.
11. காது - காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடமாம். மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் கபட தாரி.
12. கைகள் - நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்புதல் கூடாது. கைப்பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரமாம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின் செல்வந்தன் ஆவான்.
13.மணிக்கட்டு - மணிக்கட்டில் சதையிலிருந்து கெட்டியாக இருப்பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இருந்தாலும், மடக்கும் போது சப்தம் வந்தாலும் தரித்திரமாம்.
14. விரல்கள் - கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரமாம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந்தால் அற்ப ஆயுளாம். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்கு மூலைகளும் சமமான உயரத்தோடு தட்டையாக இருப்பின் அரசனாவான்.
15. மார்பு - ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் முலைக்காம்புகள் எடுப்பாகவும் இருப்பின் அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பின் அற்பாயுளாம். ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் காம இச்சை அதிகம் இருக்கும்.
16. வயிறு - பானை போன்ற உருண்டையான வயிறு இருப்பின் செல்வம் இருக்கும். வயிறு தொங்கினால் மந்த நிலை உண்டாகும். ஒட்டிய வயிற்றைப் பெற்றவர்கள் குபேரனாய் இருப்பர். வயிற்றில் மடிப்புகள் இல்லாதிருப்பதே உத்தமம்.
17.முதுகு - சமமான முதுகைப் பெற்றவர்கள் எதிலும் வெற்றி பெறுவர். முதுகில் எலும்புகள் காணப்பட்டால் தரித்திரமாகும்.
18. கால்கள் - கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின் தரித்திரமாம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால் நன்மைகள் பெருகும்.
19. கால்பாதம் - கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப்பின் புகழ் பெறுவான். பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித்தனியே விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்.
மச்ச சாத்திரம்-ஆண்களுக்கு 
· இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.
· நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.
· வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.
· வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.
· வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.
· வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.
· இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.
· இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.
· இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.
· இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.
· இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.
· இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.
· மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.
· மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
· மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.
· மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.
· மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.
· நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.
· மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.
· மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.
· மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.
· மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.
· வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
· இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.
· வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.
· இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.
· இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.
· தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.
· கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.
· கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.
· இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.
· வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.
· மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.
· வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.
· வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
· வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.
· தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.
· வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.
· வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.
· இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்
· முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.
· முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.
· முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்.

Friday, August 9, 2013

சர்வ காரிய சித்தி தரும் - மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் , ஸ்லோகங்கள் Part 3

வறுமை நீங்கி வளமுடன் வாழ மகா கணேசாஷ்டகம்

கடினமாக உழைத்தும், ஒழுக்கத்துடன் இருந்தும், கடவுளின் மீது பக்தியுடன் இருந்தும் நமக்குக் கஷ்டங்கள் தீராதிருக்கும். இவ்வாறு பிரச்சனைகளுடன் தொடர்ந்து வாழ்ந்து வருபவர்கள், நிம்மதியான வாழ்வு பெற கீழ்க்கண்ட ஸ்லோகங்களை, நாள்தோறும் விநாயகருக்கு முறைப்படி பூஜைகள் செய்து பாராயணம் செய்து வந்தால் நற்பலன்கள் கிட்டும். விநாயகரை வழிபடும் போது மோதகம், அவல்பொரி, அப்பம், அதிரசம், விளாம்பழம் போன்றவற்றை நிவேதனமாக வைத்து அருகம்புல்லைக் கொண்டு அர்ச்சனை செய்து இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.

1. ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம்
லம்போதரம் விசாலாக்ஷம் வந்தே அஹம் கண நாயகம்
2. மௌஞ்சி கிருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோப வீதினம்
பாலேந்து விலஸன் மௌலிம்வந்தே அஹம் கணநாயகம்
3. அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம்
பக்த ப்ரியம் மதோன்மத்தம்வந்தே அஹம்கணநாயகம்
4. சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம்
சித்ரரூபதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்
5. கஜவக்த்ரம் ஸுர ச்ரேஷ்டம் கர்ணசாமர பூஷீதம்
பாசாங்குச தரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்
6. மூஷிகோத்தம ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே அஹம் கணநாயகம்
7. யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா
ஸ்தூயமானம் மஹபத்மானம்வந்தே அஹம்கணநாயகம்
8. ஸர்வவிக்ன ஹரம்தேவம் ஸர்வவிக்ந விவர்ஜிதம்
ஸர்வஸித்திப் ப்ரதாதாரம் வந்தே அஹம் கணநாயகம்
9. கணாஷ்டகம் இதம் புண்யம் பக்திதோ: ய: படேந்நர
விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரோம் ஸகச்சதி.

அமைதியான வாழ்வு பெற ஸ்ரீராம ஸ்தோத்திரம்

இச்சுலோகத்தை நாள்தோறும் பத்து முறை கூறி பாராயணம் செய்தால் தோஷங்கள் விலகி நிம்மதியான வாழ்வு பெறலாம். மன நிம்மதி, குடும்ப அமைதி ஆகியவைகள் கிட்டும்.

ஆபாதாம் பஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம்
ஆர்த்தானா மார்த்தி பீதானாம் பீதி நாசனம்
த் விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம் யஹம்
ஸன்னத்த: கவசீ கட்கீசாப பாண தரோயுவா
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ?மண
நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ஸராயச
கண்டிதாகில தைத்யாய ராமாயாபந் நிவாரிணே
ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய: பதயே நம
அக்ரத: ப்ருஷ்ட தச்சைவ பார்ச் வதஸ்ந மஹாபலௌ
ஆகர்ண பூர்ணதன்வானௌ ரக்ஷதாம் ராமலக்ஷ்மணௌ

வேண்டியதைப் பெற அபிராமி ஸ்லோகம்

திருக்கடவூரில் எழுந்தருளியுள்ள அபிராமி அம்மையைப் போற்றினால் நாம் வேண்டியதை அருள்வாள். அபிராமி தேவி மீது அபிராமிப் பட்டர் பாடிய அந்தாதி
மந்திர சக்தி வாய்ந்தது.
வருந்தா வகை என் மனத்தா
மரையினில் வந்து புகுந்து
இருந்தான் பழைய இருப்பிட
மாக இனிஎனக்குப்
பொருந்தா தொருபொருள்
இல்லைவிண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தா
னதைநல்கும் மெல்லியலே

பாற்கடலிலே தோன்றிய அமிழ்தத்தைத் திருமால் தேவர்களுக்கு வழங்கிட காரணமாக இருந்த அபிராமவல்லி, யான் பிறந்தும் இறந்தும் வருந்தாமல் என் இதயத்தாமரையில் எழுந்தருளித் தமது பிறப்பிடமாக எண்ணி உறைவிடமாக உறைந்தருளினாள். எனவே, இனி உலகில் எனக்கு வந்தமையாத செல்வம் ஏதுமுண்டோ?

பிரிந்தவர் ஒன்றுசேர சொல்ல வேண்டிய ஆஞ்சநேயர் புஜங்க ஸ்தோத்திரம்

ஸ்ரீஆஞ்சநேயப் பெருமான் கணவனைப் பிரிந்த சீதையை ராமரிடம் கொண்டு சேர்க்க அரும்பாடு பட்டார். அவரைத் துதித்தால் கணவன்-மனைவி கருத்து வேற்றுமை நீங்கி, குடும்ப ஒற்றுமை மேலோங்கும். பிரிந்தவர் ஒன்று சேர்வர். ஆதிசங்கரர் அருளிய ஆஞ்சநேயர் புஜங்க ஸ்தோத்திரத்தை தினசரி விடியற்காலையில் ஆஞ்சநேய சுவாமியின் முன் அமர்ந்து பாராயணம் செய்தால் நல்ல பலனைப் பெறலாம்.

ப்ரபந்நாநுராகம் ப்ரபாகாஞ்சநாங்கம்
ஜகத்பீதாஸெளர்யம் துஷாராத்ரிதைர்யம்
த்ருணீபூதஹேதிம் ரணோத்யத் விபூதிம்
பஜே வாயுபுத்ரம் பவித்ராப்த மித்ரம்
பொன் போன்ற மேனியன். கற்றோன். ராஜ சிம்மம் போல தைரியம், கம்பீரம் நேர்மை ஆகியவற்றைக் கொண்டு உலகத்தை குறையேதுமில்லாமல் காப்பவன். ஆன்ம நேயன். அப்படிப்பட்ட வாயு புத்திரனாகிய எங்கள் அனுமா போற்றி.

பஜே ராம ரம்பாவநீ நித்யவாஸம்
பஜே பாலபாநு ப்ரபாசாருபாஸம்
பஜே சந்த்ரிகா குந்த மந்தாரஹாஸம்
பஜே ஸந்ததம் ராம பூபாலதாஸம்
பேரொளி கொண்டவனாயினும் அன்பர்க்குத் தென்றலாய் வருடிக் கொடுப்பவன். பாலனாக இருக்கையிலே சூரியனை பழமென்று எண்ணிப் பாயந்தவன். தீமைகளை அடியொடு சங்காரம் செய்வதில் சங்கரனே இவன். அந்த ராமதாசனான அனுமனைப் போற்றுவோம்.

பஜே லக்ஷ?மணப்ராண ரஹாதிதக்ஷம்
பஜே தோஷிதாநேக கீர்வாண பக்ஷம்
பஜே கோர ஸங்க்ராம ஸீமாஹதாக்ஷம்
பஜே ராமநாமாதி ஸம்ப்ராப்த ரக்ஷம்
லக்ஷ?மணனின் உயிரை மீட்டதால் ரகுவம்ச நாசத்தைத் தவிர்த்தவன். ஞானி. சிவ நேசச் செல்வனாய் புவனம் காத்து ஸ்ரீ ராமனையே (அவனே வியக்கும் வண்ணம்) நெஞ்சில் சுமந்து நிற்கும் அனுமனே போற்றி.

க்ருதா பீலநாதம் சிதிஷிப்த பாதம்
சநக்ராந்த ப்ருங்கம் கடிஸ்தோரு ஜங்கம்
யத்வ்யாப்வ கேஸம் புஜா ஸ்ரோஷி தாசம்
ஜய ஸமேதம் பஜே ராமதூதம்
சிம்ம கர்ஜனை செய்பவன். அழகான பாதங்களைக் கொண்டவன். வியக்கும்படியான அழகான நடையினை உடையவன். வனப்பான கேசத்தை உடையவன். அவன் தாவல் அசாத்ய அழகு. அத்தகைய சீதாராம தாசனைப் போற்றுவோம்.

சலத்வாலகாத் ப்ரமச்சக்ரவாளம்
கடோராட்டஹாஸ ப்ரபிந்நாப் ஜஜாண்டம்
மஹாஸிம்ஹநாதாத் விஸீர்ணத்ரிலோகம்
பஜே சாஞ்ஜநேயம் ப்ரபும் வஜ்ரகாயம்
ஆஞ்சநேயா போற்றி. வஜ்ரம் போன்ற உடல் வலிமையுள்ளவனே போற்றி. சிம்ம நாதா போற்றி. உனது ஒப்பற்ற வாலின் துணை கொண்டு விண்ணில் ஏகி, கருடனைப்போல் பறந்தாய். இலங்கையில் அட்டஹாசம் செய்தாய். நீயே சத்திய ஞான சொரூபன். மூவுலகும் நடுங்கும் சிங்கநாதா போற்றி.

ரணே பீஷிணே மேகநாதே ஸநாதே
ஸரோஷம் ஸமாரோப்யஸிவாவ்ருஷ்டி முக்ராம்
ககாநாம் கநாநாம் ஸுராணாஞ்ச மார்கே
நடந்தம் மஹாந்தம் ஹநூமந்தமீடே
போரிலே நீ ருத்ரனாக எரிப்பாய். மேகநாதனுடன் நடந்த போரிலே, இலக்குவனாக வந்த ஆதிசேஷனே உயிரற்ற சடலம் போல் வீழ்ந்து கிடந்தபோது - ஆதர்ஷ பூமியைத் தாங்குபவனாகிய அவனே பூமியில் கிடந்தபோது - நுண்ணறிவின் உதவியாலே விண்ணில் பாய்ந்து சென்று பல்லாயிர லட்ச யோசனைக்கப்பால் இருந்த சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து வந்து இளவலின் உயிர் காத்த அனுமந்தன் பெருமையை யாரால் எப்படிக் கூற இயலும் ?! எவராலும் முடியாது !

கநத்ரத்ந ஜம்பாரி தம்போளிதாரா
கநத்தந்த நிர்தூத காலோக்ர தந்தம்
பதாகாதபீ தாப்தி பூதாதிவாஸம்
ரண÷க்ஷõணிதாக்ஷம்பஜே பிங்காளக்ஷம்
பொன்முடி தரித்தவா போற்றி. மாண்பு மிக்க செல்வா போற்றி. நீ வானரத் தலைவன். நல்ல மதி யூகி. மந்திரி. நீ ஐம் பூதங்களிலும் நின்றவன். நேர்த்தியுடன் செயல்படுபவன். உயர்வான பொன்னாடை தரித்தவன். சாகா நிலை பெற்றவன். உன்னை போற்றுகின்றோம்.

மஹாக்ரோபீடாம் மஹோத்பாத பீடாம்
மஹாக்ராஹபீடாம் மஹா தீவ்ரபீடாம்
ஹரந்தயாஸுதே பாதபத்மாநுரக்கா:
நமஸ்தே கபிச்ரேஷ்டராமப்ரியாய
ராமனுக்கு இனியனே, ராக சொரூபனே, நோய் தீர்க்கும் சஞ்சீவியே, உலக ரட்சகனே, பத்ம பாதனே, வானர சிரேஷ்டனே, குமுதனே, உன்னைப் போற்றுகிறோம்.

ஸுதாஸிந்து முல்லங்க்ய நாக ப்ரதீப்தா:
ஸுதா சௌஷதீஸ்தா ப்ரகுப்தப்ரபாவா க்ஷணே
த்ரோணசைலஸ்ய ப்ருஷ்டே ப்ரரூடா:
த்வயா வாயுஸூநோ கிலாநீய தத்கா:
பேரருளும் பெருமையும் கொண்ட கபீந்தரா (வானரத் தலைவனே). நீ தானே தேடி வந்து எம்மை ரட்சிக்கும் தெய்வம். நீ பெரும் புகழ் நாயகனின் தூதன். மலைகளையும் குகைகளையும் ஆராய்வதில் வல்லவன். வலிமையில் மிக்கவனே. உமை வணங்குகிறேன்.

நிராதங்கமாவிச்ய லங்காம் விசங்கோ
பவாநேவ ஸீதாதி ஸோகாபஹாரீ:
ஸமுத்ரம் தரங்காதி ரௌத்ரம் விநித்ரம்
விலங்க்யோ ருஜங்காஸ்துதோமர்த்ய ஸங்கை:
பொன்னாலான இலங்காபுரியை பொடிப் பொடியாக்கிய பிரபு நீயே ! தீயில் கருகிய இலங்கையும் வெந்தீயில் அழிந்தவற்றுள் நதிகள், கடல் என, எதுதான் உன் வெஞ்சினத்திற்குத் தப்பியது  ? உன் சினம் கண்டால் மடிவோம் என எண்ணும்படி நீலமேக ஸ்யாமளனின் கோபத்தை÷ உன்னுடையதாக்கிக் கொண்டாயோ மாருதி ?

ரமானாக ராம க்ஷமாநாத ராமம்
அசோகே ஸ்சோகாம் விதாய ப்ரஹர்ஷம்
வினார்தர்கநாம் ஜீவநாம் தானவானம்
விடாப்ய பிரஹர்ஷாத் ஹநுமத் ஸ்த்வமேம
ராம நாமத்தையே சதா மனதில் கொண்டவனே ! ராம பிரம்மத்தின் நாத பிரம்மமே. அசோகவனத்தின் சோகத்தை மாற்றிய தீரா. ராமனின் பிராணனாகிய சீதா பிராட்டியின் அன்பைப் பெற்றிட்ட அரிய பேறை பெற்ற தவசீலனே ! இதற்கு என்ன தவம் செய்தனை ?

ஜராபாரதோ பூரி பீடாம் சரீரே
நீரதாரணரூட காட ப்ரதாபி
பவத் பாத பக்தீம் பவத் பக்தி ரக்திம்
குரு ஸ்ரீ ஹநுமத் பிரபோமே தயாளோ!
குருவே ஸ்ரீஹனுமனே ! என இவ்வையகமே போற்றி மகிழ்வோடு போற்றிடும் பெருமைக்கு உரியவன் நீ. உன்னுடைய பூப்போன்ற மென்மையான உடல் பூமியைப் போன்று வலியது. உன் மேனி ரோமாஞ்சனம் தரக்கூடியது. (உன் திருமேனி கண்டால் சிலிர்ப்பு ஏற்படும்) நீ நாவுக்கரசன். சொல்லின் செல்வன். ராமதாசனே, அனைத்தையும் அவனிலிருந்தே பெற்று அவனுக்கே அளிக்கும் பிரபுவாக உள்ளவன் நீயே ! உன்னைத் துதிக்கிறோம்.

மஹாயோகிநோ ப்ரஹ்மருத்ராதயோ வா
ந ஜாநந்தி தத்வம் நிஜம் ராகவஸ்ய
கதம் ஜ்ஞாயதே மாத்ருசைர் நிதயமேவ
ப்ரஸீத ப்ரபோ மாருதே நமஸ்தே
ருத்ரனும் பிரும்மனும் கூடப் போற்றும் மஹா யோகி நீயே ! தத்துவமும் தர்க்கமும்  அறிந்தவன் நீ ! இசையில் லயிப்பவன் ! எங்கெல்லாம் சத்தியத்திற்குக் கெடுதல் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் வலியச் சென்று சத்தியத்தை ரட்சிப்பவன் நீயே ! உன்னைப் போற்றுகிறேன்.

நமஸ்தே மஹாஸத்வ பாஹாய துப்யம்
நமஸ்தே மஹாவஜ்ரதேஹாய துப்யம்
நமஸ்தே பராபூதஸூர்யாய துப்யம்
நமஸ்தே க்ருதாமர்த்யகார்யாய துப்யம்
சத்யவடிவினனே போற்றி. வஜ்ரதேகனே போற்றி ஞான சூரியனே போற்றி. சிரஞ்சீவி பதம் பெற்ற வாழு மைந்தனே போற்றி. தீய்க்கும் கனலினைக் கொண்டவா போற்றி.

நமஸ்தே ஸதா ப்ரஹ்மசர்யாய துப்யம்
நமஸ்தே ஸதா வாயுபுத்ராய துப்யம்
நமஸ்தே பிங்களாக்ஷõய துப்யம்
நமஸ்தே ஸதா ராமபக்தாய துப்யம்
நித்ய பிரம்மசாரியே போற்றி ! வாயு மைந்தனே போற்றி ! எப்போதும் ராமநாம சங்கீதத்தில் திளைத்திருக்கும் நீ ராகங்களின் நுட்பத்தை உணர்ந்தவன். என்றும் நிரந்தர ராமதாஸன் நீயே.

ஹநூமத் புஜங்க ப்ரயாதம் ப்ரபாதே
ப்ரதோஷேபி வா சார்தராத்ரேபி மர்த்ய
படந் பக்தியுக்த: ப்ரமுக் தாகஜால: நமஸ்
ஸர்வதா ராமபக்திம் ப்ரயாதி

இந்த அனுமனது புஜங்க ஸ்தோத்திரத்தை மனம் வாக்கு காயத்தை சுத்தமாக வைத்துக் கொண்டு பிரதோஷ காலங்களில் (தினமும் மாலை நேரத்தில்) ஜபித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். எதிரி பயம் விலகும். நியாயமான கோரிக்கைகள் ஈடேறும். சத்திய வழி நடப்பதால் கிட்டும் நன்மைகள் தடையின்றிச் சேரும் சர்வமங்களம் கூடும். நேர்வழியில் சென்று அனைத்திலும் வெல்லும் திறனும் தானே வரும்.

சரஸ்வதி துவாதச நாம ஸ்தோத்ரம்

ஸரஸ்வதீ த்வியம் த்ருஷ்டா வீணா புஸ்தக தாரிணி
ஹம்ஸவாஹ ஸமாயுக்தா வித்யா தானகரீ மம
ப்ரதமம் பாரதீ நாம த்விதீயஞ் ச ஸரஸ்வதீ
த்ருதீயம் சாரதா தேவீ சதுர்த்தம் ஹம்ஸவாஹினீ
பஞ்சமம் ஜகதீக்யாதா ஷஷ்ட்டம் வாணீச்வரீ ததா
கௌமாரீ ஸப்தமம் ப்ரோக்தா அஷ்டமம் பரம்ஹசாரிணீ
நவமம் புத்திதாத்ரீ ச தசமம் வரதாயினீ
ஏகாதசம் க்ஷúத்ரகண்டா த்வாதசம் புவனேச்வரீ
ப்ராஹ்ம்யா: த்வாதச ;நாமானி த்ரிஸந்த்யம் ய: படேன் நர:
ஸர்வ ஸித்திகரீ தஸ்ய ப்ரஸன்னா பரமேச்வரீ
ஸாமே வஸது ஜிக்வாக்ரே பிரஹ்ம ரூபா சரஸ்வதீ

சரஸ்வதி அஷ்ட மந்திரங்கள்

இம்மந்திரத்தை 4 லட்சம் முறை ஜெபித்தால் பிருகஸ்பதிக்கு சமமாகலாம். இது நாராயணன் வால்மீகிக்கும், பிருகு சுக்கிரருக்கும், மரீசி பிருஹஸ்பதிக்கும்  விபாண்டகர் ரிஷ்யசிருங்கருக்கும், சூரியன் யாக்ஞவல்கியருக்கும் உபதேசித்தனர். சரஸ்வதி அந்தந்த அவயங்களைக் காக்கட்டும் என்பது இந்த அஷ்ட மந்திரங்களின் பொருள்.
ஓம் ஸ்ரீம் ஹரீம் ஸரஸ்வத்யை ஸ்வாஹா
ஸிரோமே பாது ஸர்வத:
ஓம் ஸ்ரீம் வாக்தேவதாயை ஸ்வாஹா
பாலம் மே ஸர்வ தோவது
ஓம் ஸ்ரீம் ஸரஸ்வத்யை ஸ்வாஹேதி
ஸ்ரோத்ரே பாது நிரந்தரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் பகவத்யை ஸரஸ்வத்யை
ஸ்வாஹேதி ஸ்ரோத்ர யுக்மம் ஸதாவது
ஐம் ஹ்ரீம் வாக்வாதின்யை ஸ்வாஹா
நாஸாம் மே ஸர்வ தாவது
ஓம் ஹ்ரீம் வித்யாதிஷ்டாத்ரு தேவ்யை
ஸ்வாஹா சோஷ்டம் ஸதாவது
ஓம் ஸ்ரீம்ஹ்ரீம் ப்ராம்யை ஸ்வாஹேதி
தந்த பங்க்திம் ஸதாவது
ஐம் இத்யேகாக்ஷரோ மந்த்ரோ மம கண்டம்
ஸதாவது
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் பாதுமே க்ரீவாம்
ஸ்கந்தௌ மே ஸ்ரீம் ஸதாவது
ஓம் ஹ்ரீம் வித்யா திஷ்டாத்ரு தேவ்யை
ஸ்வாஹா வக்ஷ: ஸதாவது
ஓம் ஹ்ரீம் வித்யாதி ஸ்வரூபாயை ஸ்வாஹா
மே பாது நாபிகாம்
ஓம் ஹ்ரீம் க்லீம் வாண்யை ஸ்வாஹேதி
மம ஹஸ்தௌ ஸதாவது
ஓம் ஸர்வ வர்ணாத்மி காயை பாத யுக்மம்
ஸதாவது
ஓம் வாக் அதிஷ்டாத்ரு தேவ்யை ஸ்வாஹா
ஸர்வம் ஸதாவது
ஓம் ஸர்வ கண்டவாஸின்யை ஸ்வாஹா
ப்ராச்யாம் ஸதாவது
ஓம் ஸர்வ ஜிஹ்வாக்ர வாஸின்யை ஸ்வாஹா
க்நிதிஸி ரக்ஷது
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸரஸ்வத்யை
புத ஜநன்யை ஸ்வாஹா
ஸததம் மந்த்ர ராஜோயம் தக்ஷ?ணே மாம்
ஸதாவது
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் த்ரயக்ஷரோ மந்த்ரோ
நைருரித்யாம் ஸதாவது
ஓம் ஐம் ஜிஹ்வாக்ர வாஸின்யை ஸ்வாஹா
மாம் வாருணேவது
ஓம் ஸர்வாம்பிகாயை ஸ்வாஹழ வாயவ்யேமாம்
ஸதாவது
ஓம் ஐம் ஸ்ரீம் க்லீம் கத்யாவாஸின்யை ஸ்வாஹா
மாம் உத்தரேவது
ஓம் ஐம் ஸர்வ ஸாஸ்த்ர வாஸின்யை ஸ்வாஹா
ஈஸான்யம் ஸதாவது
ஓம் ஹ்ரீம் ஸர்வ பூஜிதாயை ஸ்வாஹா
சோர்த்வம் ஸதாவது
ஹ்ரீம் புஸ்தக வாஸின்யை ஸ்வாஹா
அதோ மாம் ஸதாவது
ஓம் க்ரந்த பீஜ ஸ்வரூபாயை ஸ்வாஹா
மாம் ஸர்வதோவது.

வாகீச்வரி மந்திரம்

கண்வருஷி : விராட் சந்த : வாகீச்வரி தேவதா
ஐம்-பீஜம் ஸ்வாஹா சக்தி
மாத்ருகாவதங்கானி
மந்த்பதை : பஞ்ச பிஸ்ஸம்ஸ்தைச வா
குர்யாதங்கானி

தியானம்

அமலகமலஸம்ஸ்தா லேகநீ புஸ்தகோத்யத்
கரயுகள ஸரோஜா குந்த மந்தார ஹார
த்ருதஸஸதர கண்டோல்லாஸி கோடீர சூடா
பவது பவபயானாம் பஞ்சனீ பாரதீ வ
மந்த்ர : வத-வத வாக்வாதினீ ஸ்வாஹா
கண்வருஷி : வாகீச்வரி தேவதா
ஐம்-பீஜம் ஹ்ரீம் சக்தி : ஓம் கீலகம்
ஐம்-ஆம் : ளாம்-ஈம் : இதி கரஷடங்க, ஹ்ருதயாதி
ந்யாஸச்ச

தியானம்

ஹம்ஸாரூட பஸிதஹரஹாரேந்து குந்தாவ தாதா
வாணீ மந்தஸ்மிதயுதமுகீ மௌலி பத்தேந்து ரேகா
வித்யா வீணாம் ருதமய கடாக்ஷஸ்ரகா தீப்த ஹஸ்தா
ஸுப்ராப்ஜஸ்தா பவதமிமத ப்ராப்தயே பாரதீ ஸ்யாத்
மந்த்ர : ஓம்-ஹ்ரீம்-ஐம் ஸரஸ்வத்தைய நம: ஹ்ரீம்-ஓம்

ருத்ர வாகீச்வரி மந்திரம் (யந்த்ராந்தரம்)

த்ரிவிக்ரமருஷி : காயத்ரீ சந்த : ருத்ர வாகீச்வரீ தேவதா
வாம்-பீஜம் ஸ்வாஹா சக்தி :
1. ஸாம் ஸர்வஜ்ஞ
2. ஸீம் அம்ருதம் தேஜோமாலினி நித்ய த்ருப்தி
3. ஸூம்-வதவேதினி அநாதிபோத
4. ஸைம்-வஜ்ரிணே வந்ரதராய ஸ்வந்த்ர
5. ஸெளம்-நித்ய மலுப்த சக்திஸ ஹஜே த்ரிரூபிணே
6. ஸ: அனந்த சக்தி (ஓம் ஸ்லீம் பஸுஹும் பட்
பாஸுபதாஸ்த்ராய ஹஸஸ்ராக்ஷõய
இதி கரஷடங்க, ஹ்ருதயாதி ந்யாஸச்ச

தியானம்

ஸுப்ராபாம் த்ரீக்ஷணாம் தோர்பிப்ரதீம் பலபுஸ்தகே
வராபயே ஸர்வபூஷாம் ருத்ரவாகீச்வரிம் பஜே
மந்த்ர : ஓம்-வாம்-ஹ்ரீம்-ஸ்ப்யோம்-ஹயைம் ஸ்வாஹா

விஷ்ணு வாகீச்வரி மந்திரம்

கச்யப ருஷி : காயத்ரீ சந்த : விஷ்ணு வாகீச்வரி தேவதா
ஸ்ப்யோம்-பீஜம் ஸ்ரீம்-சக்தி :
பீஜேனேவ ஷடங் கானி
தியானம்
ஹேமாபாம் பிப்ரதீம் தோர்பி
பலபுஸ்தத்கும்பகான்
அபயம் ஸர்வ பூஷாட்யாம்
விஷ்ணு வாகீச்வரீம் பஜே
மந்த்ர : ஓம்-ஸ்ரீம்-ஸ்ப்யோம்-ஹ்ரீம்-நம

நகுலீ மந்திரம்

நகுலீ சரஸ்வதி மந்த்ரஸ்ய ப்ரஹ்மாருஷி :
காயத்ரீ சந்த :
நகுலீ சரஸ்வதி தேவதா
விகாஸபாஜி ஹ்ருத்பத்மே
ஸ்திதாமுல்லாஸதாயினீம்
பரவாக் ஸ்தம்பினீம் நித்யாம் ஸ்மராமி நகுலீம் ஸதா
மந்த்ர : ஐம்-ஓஷ்டாபிதானா நகுலீ தந்தை: ப்ரிவ்தாபவி:
க்லீம்-ஸர்வஸ்யை வாச ஈசானா சாரு மாமிஹ வாதயேத்
ஸம்ர : ஸெள : க்லீம்-ஐம்

பரா ஸரஸ்வதீ மந்திரம்

ப்ரஹ்மாருஷி : காயத்ரீ சந்த :
பரா ஸரஸ்வதி தேவதா
ஸெள : கரஷடங்க, ஹ்ருதயாதி ந்யாஸச்ச
தியானம்
அகலங்கஸஸாங்காபா த்ரயக்ஷõ சந்த்ர கலாவதி
முத்ரா புஸ்தலஸத் வாஹா பாது பரமா கலா
மந்த்ர : ஸெள

பாலா சரஸ்வதி

ப்ரஹ்மாருஷி : காயத்ரீ சந்த : பாலா சரஸ்வதி தேவதா
ஐம்-பீஜம் ஸெள : சக்தி : க்லீம்-கீலகம்
இதி கரஷடங்க, ஹ்ருதயாதி ந்யாஸச்ச-
தியானம்
அருண கிரண ஜாலை ரஞ்ஜிதா ஸாவகாஸா
வித்ருத ஜபபடீகா புஸ்தகாபீதி ஹஸ்தா
இதரகரவராட்யா புல்ல கல்ஹாரஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண ரூபா
தியானந்தரம்
பாலாஸ்ருணீ புஸ்தக பாஸ ஹஸ்தாம் பாலாம்பிகாம்
ஸ்ரீலிதாம் குமாரீம்
குமார காமேச் வரகேளி லோலாம் நமாமி
கௌரீம் நவ வர் ஷதேஸ்யாம்
மந்த்ர : ஐம் க்லீம் ஸெள : ஸெள : க்லீம் ஐம்

நகுலீ சரஸ்வதி

அஸ்ய ஸ்ரீ நகுலீ சரஸ்வதி மஹா மந்த்ரஸ்ய
விச்வாமித்ர ருஷி : த்ரிஷ்டுப் சந்த :
நகுலீ சரஸ்வதீ தேவதா
ஸாரஸ்வதே மம பாதஜயே வா விநியோக :
ஐம் க்லீம் ஸெள ஸெள க்லீம் ஐம்
என்று கரஷடங்க ஸ்ருதயாதி ந்யாஸம்
பூர்ப்பு வஸ்ஸுவ ரோமிதி திக் பந்த:

தியானம்

ஓஷ்டாப்யாம் பிஹிதைச்ச பங்க்தி நிஸிதை :
தந்தைர்கனைஸ் ஸம்வ்ருதா
தீக்ஷணா வஜ்ரவதத்ர ஸர்வஜகதாம் யாஸ்வாமினீ ஸந்ததம்
ஸாமாம் சாரு கரோது வாதநிபுணம் ஸர்வத்ர ஸா வாக்ரஸா
யேன ஸ்யாமஹமேவ ஸர்வஜகதா மத்யர்த மக்ரேஸர :
தாக்ஷ?ர்யாரூடா மஹிதலளிதம் தாலுஜன்மா விஸங்கீ
சஞ்சத் வீணா கலரவஸுகீ சக்ர ஸங்காஸி பாணி
ராறோத்தும்ஸா மனஸி நகுலீ ராஜது ஸ்யாமளா யா
ப்ரத்யங்கத்வம் பரிகதவதீ ப்ரத்யஹம் மாமகீனே
லம் இத்யாதி பஞ்சபூஜா
மந்த்ர: ஐம் ஓஷ்டாபிதானா நகுலீ க்லீம் தந்தை :
பரிவ்ருதா பவி : ஸெள : ஸரவஸ்யை வாச
ஈஸான சாரு
மாமிக வாதயேத் வத வத
வாக்வாதினீ ஸ்வாஹா
ஹ்ருதயாதி ந்யாஸம் பூர்ப்புவஸ்ஸு
ரோமிதி திக்விமோக
த்யானம் லமித்யாதி புன : பூஜா பூஜா
ஸமர்பணம்

தாரண சரஸ்வதி மந்திரம்

அஸ்ய ஸ்ரீதாரண ஸரஸ்வதீ மஹா மந்த்ரஸ்ய
அநிராகரண ருஷி : அனுஷ்டுப் சந்த : தாரண
ஸரஸ்வதீ தேவதா
தியானம்
ஸுராஸுரா ஸேவித பங்கஜா கரே விரோஜத் கமனீய புஸ்தகா
விரஞ்சி பத்னீ கமலாஸன ஸ்திதா ஸரஸ்வதீ
ந்ருத்யது வாசி மே ஸதா
ஓம் நமோ ப்ரஹ்மனே தாரணம் மே அஸ்த்வனிரா
கரணம் மே அஸ்வத்வனிரா கரணம் தாரயிதா
பூபாஸம் கர்ணயோ: ச்ருதம் மாச்யோட்வம்
மமாமுஷ்ய ஓம் இதி மந்த்ர :

முக்யா சரஸ்வதி மந்திரம்

கண்வருஷி : விராட் சந்த : முக்யா ஸரஸ்வதீ தேவதா
வாகிதி பீஜம் : பர இதி சக்தி :
1. ஐம் வாசஸ்பதே  2. அம்ருத
3. ப்லுவ: 4. ப்லு :
5. ஐம் வாசஸ்பதே அம்ருத
6. ப்லுவ : ப்லு : இதி ஷடங்கானி

தியானம்

ஆஸினா கமலே கரே ஜபவடீம் பத்மத்வயம்
புஸ்தகம் பிப்ராணா தருணேந்து காப்ரமகுடா
முகதேந்து குந்தப்ரபா
பாலீன் மீலிதலோசனா குசபரக்லாந்தா
பவதூபூதயே பூயாத் வாகதி தேவதா
முனிகணேனா ஸேவ்யமானாஸனிஸம்
மந்த்ர : ஐம் வாசஸ்பதே அம்ருதப்லுவ: ப்லு:

வாணீ சரஸ்வதி மந்திரம்

கண்வருஷி : அனுஷ்டுப் சந்த :
வாணீ ஸரஸ்வதீ தேவதா
ஐம் பீஜம் ஹ்ரீம் சக்தி : வித்யார்தே விநியோக :
1. ஐம் ஹ்ராம் 2. ஐம் ஹ்ரீம் 3. ஐம் ஹ்ரூம்
4. ஐம் ஹ்ரைம் 5. ஐம் ஹ்ரௌம்
6. ஐம் ஹ்ர :  இதிஷடங்காளி

தியானம்

ஹம்ஸாரூடா ஹாபப்திதஹாரேந்து குந்தாவ தாதா
வாணீ மந்தஸ்மிதயுதமுகீ மௌலி
பத்தேந்து ரேகா
வித்யா வீணாம் ருதமய கடாக்ஷஸ்ரகா
தீப்த் ஹஸ்தா
ஸூப்ராப்ஜஸ்தா பவதமிமத ப்ராப்தயே
பாரதீ ஸ்யாத்
மந்த்ர: ஓம் ஹ்ரீம் க்லௌம் ஸரஸ்வத்யை நம:
ஹ்ரீம் ஓம்

நீல சரஸ்வதீ ஸ்தோத்திரம்

கோரரூபே மஹாராவே ஸர்வ சத்ரு பயங்கரி
பக்தேப்யோ வரதே தேவி த்ராஹி மாம் சரணாகதம்
ஸுராஸுரார்ச்சிதே தேவி ஸித்த கந்தர்வ ஸேவிதே
ஜாட்ய பாபஹரே தேவி த்ராஹி மாம் சரணாகதம்
ஜடா ஜூட ஸமாயுக்தே லோல ஜிஹ்வாந்த காரிணீ
த்ருத பத்திகரே தேவி
ஸெளம்ய க்ரோததரே ரூபே சண்டரூபே நமோஸ்துதே
ஸ்ருஸ்ரூபே நமஸ் துப்யம்
ஜடானாம் ஜடதாம் ஹந்தி பக்தானாம் பக்தவத்ஸலா
மூடதாம் ஹரமே தேவி
ஹ்ரூம் ஸ்ரூம் கரமயே தேவி பலிஹோமப்ரியே நம:
உக்ரதாரே நமோ நித்யம்
புத்திம் தேஹி யசோ தேஹி கவித்யம் தேஹி தேஹிமே
மூடத்வம் ச ஹரேர் தேஹி
இந்த்ராதி விலஸத் வந்த்வ வந்திதே கருணா மயீ
தாரே தாரதி நாதாஸ்யே
அஷ்டம்யாம் சதுர்தஸ்யம் நவம்யாம் ய: படேந்நர
ஷ்ண்மாஸ்தை: ஸித்தி மாப்னோதி நாத்ரகார்யா விசாரனா
மோக்ஷõர்தீ லபதே மோக்ஷம் தனார்தீ லபதே தனம்
வித்யார்தீ லபதே வித்யாம் தர்க்க வ்யாகரனாதிகம்
இதம் ஸ்தோத்ரம் படேத்யஸ்து ஸததம் சர்த்தயான் வித:
தஸ்ய ஸத்ரு: க்ஷயம் யாதி மஹாப்ரஜ்ஞா ப்ரஜாயதே
பீடாயாம் வாபி ஸங்க்ராமே ஜாட்யே தானே ததாபயே
ய இதம் படதி ஸ்தோத்திர சுபம் தஸ்ய ந ஸம்ஸய:
இதி ப்ரணயே ஸ்துத்வாச யோநிமுத்ராம் ப்ரதர்ஸயேத்
இதி நீல ஸரஸ்வதி ஸ்தோத்ரம்.

சரஸ்வதி அஷ்டகம்

ஸதாநீக உவாச
மகாமதே மஹா ப்ராஜ்ஞ ஸர்வ
சாஸ்த்ர விசாரதா
அக்ஷ?ண கர்ம பந்தஸஸ்து புரு÷ஷா
த்விஜ ஸத்தம
மாணே யஜ்ஜ பேஜ்ஜப்யம்
யஞ்ச பாவ மனுஷ்மரண்
பரமபத மவாப் னோதி தன்மே
ப்ருஹீ மகாமுனே
சௌநக உவாச
இதமேவ மஹா ராஜா பிருஷ்டம்
வாம்ஸ்தே பிதாமஹ:
பீஷ்மம் தர்ம விதாம் ஸ்ரேஷ்டம்
தர்ம புத்ரோ யுதிஷ்டிர:
யுதிஷ்ட்ர உவாச
பிதாமஹ மகா பிராஜ்ஞ
ப்ருஹஸ்பதி சாஸ்திர விசாரதா
ப்ருஹஸ்பதி ஸ்துதா தேவி
வாகீசாய மகாத்மனே
ஆத்மானம் தர்ச யாமஸா
ஸூர்ய கோடி ஸமப்ரபாம்
ஸரஸ்வதி உவாச
வரம் விருணீஷ்வ பத்ரந்தே
யத்தே மனஸி வர்த்ததே
பிருஹஸ்பதி உவாச
யதிமே வரதா தேவி
திவ்ய ஜ்ஞானம் பிரயச்சமே
தேவி உவாச
ஹந்ததே நிர்மலம் ஞானம்
குமதி த்வம்ஸ காரம்
ஸ்தோதத் ரேணா நேந யே பக்தயா
மாம் ஸ்துவன் தி மநீஷிண:
பிருஹஸ்பதி உவாச
லபதே பரமம் ஜ்ஞானம்
யத் ஸுரைரபி துர்லபம்
பிராப்னோதி புரு÷ஷா நித்யம்
மஹா மாயா ப்ரஸாதத:
சரஸ்வதி உவாச
திரிஸந்நித்யம் பிரயதோ நித்யம்
படே அஷ்டக முத்தமம்
தஸ்ய கண்டே ஸதாவாஸம்
கரிஷ்யாமி நஸம்ஸய:
ப்ரஹ்ம ஸ்வரூபா பரமா
ஜ்யோதி ரூபா ஸநாதரீ
ஸர்வ வித்யாதி தேவி யா தஸ்யை
வாண்யை நமோ நம:
விஸர்க்க பிந்து மாத்ராஸு
யத்திஷ்டான மே வச
அதிஷ்டாத்ரீ ச யா தேவி
தஸ்யை நித்யை நமோ நம:
வ்யாக்யா ஸ்வரூபா ஸா தேவீ
வ்யாக்யா திஷ்டாத்ரு ரூபிணீ
ய யா விநா பிரஸங்க யாவாந்
ஸங்க்யரம் கர்த்தும் ந சக்யதே
கால ஸங்க்யா ஸ்வரூபாயா
தஸ்யை தேவ்யை நமோ நம:
ஸ்மிருதி சக்திர் ஞான சக்தி:
புத்தி சக்தி ஸ்வரூபிணி
பிரதிபா கல்பனா சக்தி யா ச
தஸ்யை நமோ நம:
க்ருபாம் குரு ஜகன் மாதா
மாமேவம் ஹத தேஜஸம்
ஞானம் தேஹி ஸ்மிருதிம் வித்யாம்
சக்திம் சிஷ்ய ப்ரபோதினிம்
யாஜ்ஞவல்க்ய க்ருதம் வாணீ
ஸ்தோத்திரம் ஏதத் துய: படேத்
ஸ கவீந்தரோ மஹா வாக மீ
பிருஹஸ்பதி ஸமோ பவேத்
ஸ பண்டித ஸ்ச மேதாவீ
ஸுகவ்நித்ரோ பவேத் த்ருவம்

சரஸ்வதி ஸூக்தம்

ப்ரணோ தேவீ ஸரஸ்வதீ வாஜேபிர் வாஜிநீலதீ
தீநாமவித்ர்யவது

சரஸ்வதி தேவி அன்னம் முதலான பொருள்களையும் ஸூக்ஷ?ம புத்தியின் வாயிலாக அறியத்தக்க சகல வித்தைகளையும் நமக்குக் கொடுத்து, நம் பூஜாதிகளால் திருப்தியடைந்து நம்மை நன்றாகக் காப்பாற்ற வேண்டும்

ஆநோ திவோ ப்ருஹத: பர்வதாதா
ஸரஸ்வதீ யஜதா கந்து யஜ்ஞம்
ஹவம் தேவீ ஜுஜுஷாணா க்ருதாசீ
சக்மாம் நோ வாசமுசதீ ச்ருணோது

அனைவரும் வழிபடத் தகுந்த சரஸ்வதி தேவி மூன்றாவது உலகத்திலோ மேரு மலையிலோ வசித்தாலும் எங்களுடைய வழிபாட்டை ஏற்றுக் கொள்வதற்காக,சுகத்தைக் கொடுக்கக் கூடிய வேதரூபமான ஸ்தோத்திர வார்த்தைகளையும் அழைப்பையும் விரும்பியவளாக, இளகிய தன்மையுடன் அவசியம் வந்து, பூஜையைப் பெற்று எங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுத்துக் காப்பாற்ற வேண்டும்.

அகஸ்தியர் அருளிய சரஸ்வதி ஸ்தோத்திரம்

யா குந்தேந்து துஷார ஹாரதவளா
யா சுப்ர வஸ்த்ராவ்ருதா
யா வீணா வரதண்ட மண்டிதகரா
யாச்வேதபத்மாஸனா
யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபி:
தேவைஸ் ஸதா பூஜிதா
ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ
நிச்சேஷ ஜாட்யாபஹா
தோர்ப்பிர்யுக்தா சதுர்ப்பி:
ஸ்படிக மணிநிபை: அக்ஷமாலாம் ததானா
ஹஸ்தேநைகேன பத்மம் ஸிதமபி ச
சுகம் புஸ்தகஞ் சாபரேண
பாஸா குந்தேந்து சங்க ஸ்படிகமணி நிபா
பாஸ மானா(அ) ஸமானா
ஸாமே வாக்தேவதேயம் நிவஸது
வதனே ஸர்வதா ஸூப்ரஸன்னா
ஸூராஸூரஸேவித பாதபங்கஜா
கரே விராஜத் கமநீய புஸ்தகா
விரிஞ்சிபத்னீ கமலாஸன ஸ்த்திதா
ஸரஸ்வதீ ந்ருத்யது வாசி மே ஸதா
ஸரஸ்வதீ ஸரஸிஜ கேஸரப்ரபா
தபஸ்வினீ ச்ரிதகமலாஸன ப்ரியா
கனஸ்தனீ கமலவிலோல லோசனா
மனஸ்வினீ பவது வரப்ரஸாதினீ
ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா
ஸரஸ்வதி நமஸ்துப்யம்ஸர்வதேவி நமோ நம:
சாந்தரூபேசசிதரே ஸர்வயோகே நமோ நம:
நித்யானந்தே நிராதாரே நிஷ்களாயை நமோ நம:
நவித்யாதரே விசாலாக்ஷ?யை சுத்தஜ்ஞானே நமோ நம:
சுத்தஸ்ப்படிகரூபாயை ஸுக்ஷ?மரூபே நமோ நம:
சப்தப்ரஹ்மி சதுர்ஹஸ்தே ஸர்வஸித்யை நமோ நம:
முக்தாலங்க்ருத ஸர்வாங்க்யை மூலாதாரே நமோ நம:
மூலமந்த்ரஸ்வரூபாயை மூலசக்த்யை நமோ நம:
மனோன்மனி மஹாயோகே வாகீச்வர்யை நமோ நம:
சக்த்யை வரதஹஸ்தாயை வரதாயை நமோ நம:
வேதாயை வேதரூபாயை வேதாந்தாயை நமோ நம:
குணதோஷ விவர்ஜின்யை குண தீப்த்யை நமோ நம:
ஸர்வஜ்ஞானே ஸதா நந்தே ஸர்வரூபே நமோ நம:
ஸம்பன்னாயைகுமார்யை ச ஸர்வஜ்ஞேதே நமோ நம:
யோகாநார்ய உமாதேவ்யை யோகானந்தே நமோ நம:
திவ்யஜ்ஞான த்ரிநேத்ராயை திவ்யமூர்த்யை நமோ நம:
அர்த்தசந்த்ர ஜடாதாரி சந்த்ரபிம்பே நமோ நம:
சந்த்ராதித்ய ஜடாதாரி சந்த்ரபிம்பே நமோ நம:
அணுரூபேமஹாரூபே விச்வரூபே நமோ நம:
அணிமாத்யஷ்டஸித்தாயை அனந்தாயை நமோ நம:
ஜ்ஞானவிஜ்ஞானரூபாயை ஜ்ஞானமூர்த்யை நமோ நம:
நானா சாஸ்த்ர ஸ்வரூபாயை நானாரூபே நமோ நம:
பத்மஜா பத்மவம்சாச பத்மரூபே நமோ நம:
பரமேஷ்ட்யை பராமூர்த்யை நமஸ்தே பாபநாசினீ
மஹாதேவ்யை மஹாகாள்யை மஹாலக்ஷ?ம்யை நமோ நம:
ப்ரஹ்மவிஷ்ணு சிவாயை ச ப்ரஹ்மநார்யை நமோ நம:
கமலாகர புஷ்பாயை காமரூபே நமோ நம:
கபாலீ கரதீப்தாயை காமதாயை நமோ நம:

சரஸ்வதி அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம்

சரஸ்வதி மஹாபத்ரா மஹாமாயா வரப்ரதா
ஸ்ரீ ப்ரதா பத்மநிலையா பத்மாழீ பத்மவகத்ரகா
சிவானுஜா புஸ்தகப்பிருத் ஞானமுத்ரா ரமாபரா
காமரூபா மஹாவித்யா மகாபாதக நாசினி
மகாஸ்ரயா மாலீநீச மகாபோகா மகாயுஜா
மகாபாகா மகோத்ஸாஹா திவ்யாங்கா ஸுரவந்திதா
மகாகாளீ மகாபாஸா மஹாகாரா மஹாங்குசா
பீதாச விமலா விஸ்வா வித்யுன் மாலாசா வைஷ்ணவி
சந்திரிகா சந்திர வதனா சந்திரலேகா விபூஷிதா
ஸாவித்ரீ ஸுர ஸாதேவி திவ்யாலங்கார பூஷிதா
வாக்தேவி வஸுதா தீவ்ரா மகா பத்ரா மகா பலா
போகதா பாரதீபாமா கோவிந்தா கோமதீ சிவா
ஜடிலா வந்திய வாஸாச விந்தியாசல விராஜிதா
சண்டிகா வைஷ்ணவீ பிராஹ்மீ
பிரஹ்மஞ்ஞானைக ஸாதநா
ஸெளதாமினி ஸுதா மூர்த்தி ஸுபத்ரா ஸுரபூஜிதா
ஸுவாஸினி ஸுநாஸாச விநித்ரா பத்ம லோசநா
வித்யாரூபா விசாலாக்ஷ? ப்ரம்மஜாயா மஹாப்லா
திரயீமூர்த்திஸ் திரிகாலஞ்ஜா த்ரிகுணா சாஸ்திர ரூபிணி
சும்பாசுர ப்ரமதிநீ ஸுபதாச ஸ்வராத்மிகா
ரக்த பீஜ நிஹந்த் ரீ ச சாமுண்டா சாம்பிகா ததா
முண்டகாய ப்ரஹரணா தூம்ர லோசனா மர்த்தனா
ஸர்வ தேதூ ஸ்ததா ஸெளம்யா ஸுராஸு நமஸ்கிருதா
காளராத்ரீ கலாதாரா ரூப ஸெளபாக்ய தாயினி
வாக்தே வீச வரா ரோஹா வாரிஜாஸனா
சித்ராம்பரா சித்ர கந்த்தா சித்ரா மால்ய விபூஷீதா
காந்தா காம ப்ரதா வந்தியா வித்யாதரா ஸுபூஜிதா
ஸ்வேதா நநா நீலபுஜா சதுர் வர்க்க பலப்ரதா
சதுரா நந ஸாம்ராஜ்யா ரக்த மத்யா நிரஜ்ஜநா
ஹம்ஸாஸன நீல ஜங்கா பிரம்ம விஷ்ணு சிவாத்மிகா
ஏவம் ஸரஸ்வதி தேவ்யா நாம் நாமாஷ் டோத்தரம் சதம்.

ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க

1. விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோ தேஹி த்விஷா ஜஹி.

2. பத்னீம் மனோரமாம் தேஹி
மானோவ்ருத்தனு ஸாரீனீம்
தாரினீம் துர்கஸம்ஸார
ஸாகரஸய குலோத்பவாம்.

3. விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோதேஹி த்விஷா ஜஹி

பெண்கள் விரைவில் மணவாழ்க்கை பெற மந்திரம்

வெள்ளிக்கிழமைதோறும் குத்துவிளக்கினை ஏற்றி கிழக்கு முகமாக வைத்துக் கொள்ள வேண்டும். விளக்கிற்கு மல்லிகை மலர் சாத்தி குங்குமத்தினால் அர்ச்சனை செய்தபடி மாந்திரீக வலிமை பெற்ற கீழ்க்கண்ட சுலோகத்தை 108 தடவைகள் வீதம் வெள்ளிக்கிழமை தோறும் 48 வாரம் விடாமல் கூறி வழிபட வேண்டும்.

ஓம் யோகினி யோகினி யோகேஸ்வரி
யோவ சங்கரீ ஸகல ஸ்தவர
ஜங்கமஸ்ய சமூகே மம உத்வாஹம்
சீக்ரம் குரு குரு க்லிம் ஸ்வயம் வராணய நம

இம்மந்திரத்தை 108 முறைகள் கூறி விளக்குப் பூஜை செய்து வழிபாடு நிகழ்த்திய பின் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் தந்து ஆசி பெற வேண்டும்.

திருமணம் விரைவில் நடைபெற இன்னொருவித வழிபாட்டு முறை உள்ளது. கன்னிப் பெண்ணின் வயது எத்தனையோ, அத்தனை நெய் விளக்குகளை கஜலட்சுமி அல்லது துர்க்கையின் எதிரே ஏற்றி வைத்து வழிபட வேண்டும். எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி ஒரு துண்டைப் பிழிந்துவிட்டு மேல் பக்கம் உள்ளே செல்லும்படி மடித்துக் கிண்ணம் போலாக்க வேண்டும். அந்தக் கிண்ணத்தில் நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.

கஜலட்சுமிக்கு என்றாலும் துர்க்கைக்கு என்றாலும் சுத்தமான மஞ்சள் தூளினால் அர்ச்சனை செய்ய வேண்டும். இதற்கு பால் பாயசம் நிவேதனம் செய்து வழிபாடு முடிந்ததும் குழந்தைகளுக்கு பிரசாதம் தர வேண்டும். அர்ச்சனை செய்த மஞ்சளைப் பூசி தினமும் நீராட வேண்டும். நீராடி முடித்ததும், கிழக்கு நோக்கி நின்று கொண்டு இரு கைகளாலும் நீரை எடுத்துக்கொண்டு கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி மும்முறை நீரை கீழே கொட்ட வேண்டும்.

நாமோ விவஸ்தே பிரும்மன்
பாஸ்வதே விஷ்ணு தேஜஸே
ஜகத் ப்ரஸவித்ரே ஸுர்யாய
ஸவித்ரே கர்ம தாயினே
ஸுர்யாய நம: இதம் அர்க்யம்:

இதை மும்முறை கூறி நீரை தாரை வார்க்க வேண்டும். இதனால் ஏழு ஜென்மத்துக்கும் மாங்கல்ய பலம் ஏற்படும். திருமணமும் விரைவில் கைகூடும். இதே போல காலையில் நீராடி துளசி மாடத்திற்கு விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தபடி கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி வழிபட்டு வர விரைவில் திரு மணம் கைகூடும்.

துளஸீமே சிரப்பது
பலம் பங்கஜ தாரிணி
த்ரி செனமே பத்ம நயனா
ஸ்ரீஸகி ஸ்ரவ ணேமம
கிறாணம் சுகந்தா மேபாது
முகஞ்ச சுமுகீ மம
ஸகந்தென கல்ஹாரிணீ பாது
ஹ்ருதயம் விஷ்ணு வல்லபா
புஷ்பதா மத்மயம் பாது
நாபிம் ஸெளபாக்ய தாயிணி
கடிதம் குண்டலனி பாது
ஊரு வாத வந்திதா
ஜெனனீ ஜானுனீ பாது
ஐஸ்கே சகல வந்திதம்
நாராயணப் ப்ரியே பாது
ஸர்வாஸ்கம் ஸர்வ ரக்ஷகா
ஸங்கடே விடிமே துர்கே
பயே வாதே மஹா ஹவே
ராத்யஹ ஸந்த யோ ஹேபாது
துளஸீ ஸர்வத ஸதா
இதீதம் பரமம் குஹ்யம்
துளஸ்யா கவசம் முதா
துளஸீ கானனே திஷ்டன்
ஆஸீ னோவா ஜபேத்யதி
ஸர்வவான் காமான் அவாப் னோத
விஷ்ணு சாயுஜ்ய முச்யதி

எனக்கூறி கற்பூர தீபம் காட்டி வணங்கி வரவேண்டும். இவ்வாறு நாள்தோறும் பக்திப் பெருக்குடன் செய்து வந்தால் விரைவில் திருமணம் கைகூடும்.

நல்ல வரன் அமைய மந்திரம்

அபிராமி அந்தாதி பதிகம்
அதிசயமான வடிவுடை
யாள் அரவிந்த மெல்லாம்
துதிசய ஆனன சுந்தர
வல்லி துணை இரதி
பதிசய மானது அபசய
மாகமுன் பார்த்தவர்தம்
மதிசய மாகவன்றோவாம
பாகத்தை வவ்வியதே

தேவி அபிராமி அன்பும் அருளும் பொங்கும் எழிலுடையவள். அத்தனைத் தாமரை மலர்களும் துதிக்கும் வெற்றி மிகும் முகத்தழகு சுடர்வீசும் கொடி போன்றவள்.
அத்தகைய அம்பாள், ரதி தேவியின் மணாளனாகிய மன்மதனையே விழியால் எரித்த எம்பிரானின் மனத்தை விழியால் வெற்றி கொண்டுதான் இடபாகத்தில்
அமர்ந்தருளினாள்.

திருமணம் நிறைவேற மந்திரம்

திங்கட்பகவின்மணம் நாறும்
சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்திய வாஎண்
ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவமெய்து
மோதரங் கக்கடலுள்
வெங்கட் பணியணை மேல் துயில்
கூரும் விழுப்பொருளே.

பாற்கடலின் அலைகளுக்கிடையே கொடிய கண்களையுடைய பாம்பணையின் மேல் வைஷ்ணவி என்னும் பெயருடன் அறிதுயிலில் ஆழ்ந்திருக்கும் அன்னை அபிராமியே! பிறைநிலவின் மணம் வீசும் சிறந்த நின் திருவடிகளை எங்கள் சிரத்தின் மேல் கொள்ள எங்களுக்கு வாய்க்கப் பெற்ற பாக்கியம் வேறு தேவர்களுக்கும் வாய்க்குமோ.

மாங்கல்ய பாக்கியம் நிலைக்க

சில பெண்களின் ஜாதகத்திலேயே மாங்கல்ய பலம் குறைவாக இருக்கும். சிலரது கணவர்களுக்குக் கண்டங்கள் ஏற்படலாம். எனவே மாங்கல்ய பாக்கியம் நிலைக்க கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி வரவேண்டும்.

1. ஸுதாமப் யாஸ்வாத்ய ப்ரதிபய
ஜராம்ருத்யு ஹரிணீம்
விபத்யந்தே விச்வே
விதிசதமகாத்யா திவிஷத:

2. கராளம் பத் க்ஷவேளம்
கபளித வத: கால கலநா
நசம்போ: தந்மூலம்தவ
ஜனநி தாடங்க மஹிமா

(அமிர்தத்தைச் சாப்பிட்டும் தேவர்கள் ஆபத்தைச் சந்திக்கிறார்கள். உன்னுடைய தாடங்க மகிமையால்தான் விஷமுண்ட பரமன்கூட மரணத்தை அடையவில்லை.

சுகப்பிரவசம் நடைபெற ஸ்ரீ கர்ப்ப ரட்சாம்பிகை ஸ்தோத்திரம்

அம்பாள் சன்னதியில் பிரம்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷ?தர் அவர்களால் மெய்மறந்து இயற்றப்பட்ட ஸ்தோத்திரம். தினசரி பாராயணம் செய்ய உகந்தது.

ஸ்ரீ மாதவீ கானனஸ்தே - கர்ப்ப
ரக்ஷõம்பிகே பாஹி பக்தம் ஸ்துவந்தம்  (ஸ்ரீ)
வாதபீதடே வாமபாகே - வாம
தேவஸ்ய தேவஸ்ய தேவீஸ்துதித்வம்
மாந்யா வரேண்யாவதான்யா - பாஹி
கர்ப்பஸ்த ஜந்தூனதா பக்த லோகான்  (ஸ்ரீ)
ஸ்ரீ கர்ப்ப ரக்ஷõ புரேயா - திவ்ய
ஸெளந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரீ
தாத்ரீ ஜனித்ரீ ஜனானாம் திவ்ய
ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம்  (ஸ்ரீ)
ஆஷாடே மாஸே ஸுபுண்யே - சுக்ர
வாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா
திவ்யாம் பராகல்ப தேஷா - வாஜ
பேயாதி யாகஸ்த பக்தைஸ் ஸுத்ருஷ்டா  (ஸ்ரீ)
கல்யாண தாத்ரீம் நமஸ்யே -வேதி
காக்ய ஸ்த்ரியா கர்ப்ப ரக்ஷõ கரீம் த்வாம்
பாலைஸ் ஸதாஸே விதாங்க்ரிம் - கர்ப்ப
ரக்ஷõர்த்த மாராது உபேதைரு பேதாம்  (ஸ்ரீ)
ப்ரம் மோத்ஸவே விப்ரவீத்யாம் - வாத்ய
கோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம்
ஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் - தேவ
ப்ருந்தை ரபிட்யாம் ஜகன் மாதரம் த்வாம்  (ஸ்ரீ)
ஏதத் க்ருதம் ஸ்தோத்ர ரத்னம் - தீக்ஷ?
தானந் தராமேண தேவ்யாஸ் ஸுதுஷ்ட்யை
நித்யம் படேத்யஸ்து பக்தியா - புத்ர
பௌத்ராதி பாக்யம் பவேத்தஸ்ய நித்யம்:  (ஸ்ரீ)

தீர்க்க சௌமாங்கல்யம் அளிக்கும் ஸ்லோகம்

இது சாவித்திரிஸ்ரீ, சாவித்திரி தேவியை பூஜித்து நமஸ்கரித்து பிரார்த்தித்த ஸ்லோகம். காலையில் தினமும் ஜெபிக்க வேண்டியது. கவனமாகப் படித்து பிழையி
ல்லாமல் சொல்லவும்.
ஓம்கார பூர்விகேதேவி வீணாபுஸ்தக தாரிணி
வேத மாதர் நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே
பதிவ்ரதே மஹாபாஹே பர்துச்ச ப்ரியவாதினி
அவைதவ்யம்ச ஸெளபாக்யம் தேஹித்வம் மமஸுவ்ருதே
புத்ரான் பௌத்ராம் ஸ்ச ஸெளக்யம்ச ஸெளமாங்கல்யம் ச தேஹிமே

தீர்க்க சௌமாங்கல்யம் பெற

ஸுதாமப் யாஸ்வாத்ய ப்ரதிபய ஜராம்ருத்யு ஹரிணீம்
விபத்யந்தே விச்வே விதிசதமகாத்யா திவிஷத:
கராளம் யத் க்ஷ?வேளம் கபளித வத; கால கல நா
நசம்போ: தந்மூலம் தவ ஜனநி தாடங்க மஹிமா.
ப்ருக்ருதிம் ஜகதாம்பாது பதிபுத்ரவ கீஷுச
யத்ந்ரே ஷுபூஜயேத் தேவீம் தநஸந்தான ஹேதவே
இஹலோகஸுகம்புங்கத் வாயாத் யந்தேதேஸ்ரீவிபோ: பதம்
சாக்ஷúர் நிவேஷப்ரளய: யஸ்யாய் ஸர்வாந்தராத்மநே;
உந்மீல நேவுநஸ் ஸ்ருஷ்டி; தஸ்யா பூஜாவிதாநத;
க்ருஹீத்வா ஸ்வாமி நம்ஸாசச ஸாவித்ரி நிஜமாலயம்
லக்ஷ வர்ஷம் ஸுகம் புங்கத்தவா தேவீ லோகம் ஜகாமஸா.

மாங்கல்ய பலம் தரும் அபிராமி அந்தாதி

துணையும் தொழுந் தெய்வ மும்பெற்ற
தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதி கொண்ட
வேரும் பனிமலர்பூங்
கணையும் கருப்புச்சிலையுமென்
பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரி
யாவது அறிந்தனமே.

அழகிய மலரினை அம்பாகவும், இனிய கரும்பினை வில்லாகவும் மற்றும் பாசமும் அங்குசமும் கரங்களில் பெற்றிருக்கும் திரிபுரசுந்தரியே! எமைப் பெற்ற தாயே! நீ வேதமாகவும் அவற்றின் கிளை (சாகை) களாகவும், துளிகளாகவும் (உபநிடதம்) அதன் வேராகவும் (பிரணவம்) விளங்குகிறாய் என்பதை அபிராமியின் தெய்வீக அருளால் அறிந்துணர்ந்தோம்.

இல்வாழ்க்கையில் இன்பம் பெற

ஆனந்த மாய் என்அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுஉடை யாள்மறை நான்கினுக்கும்
தானந்த மான சரணார விந்தம் தவளநிறக்
கானந்தம் ஆடரங் காம்எம்பி ரான்முடிக் கண்ணியதே.

ஐம்பூத வடிவாகத் திகழ்பவள் அபிராமி. அமிர்தமாகவும், அறிவாகவும், ஆனந்தமாகவும் விளங்குகிறாள். வேதங்களாலும் அறிய முடியாத அம்பிகையின் திருவடித் தாமரைகள் திருவெண் காட்டிலே (சுடலையில்) திருநடமிடும் எம்பிரானின் தலை மாலையாக விளங்குகின்றன.

நல்ல குழந்தைகளாக வளர

தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றி லேன்ஒற்றை நீள்சிலையும்
அஞ்சம்பம் இக்கு அலர் ஆகநின் றாய் அறியார் எனினும்
பஞ்சஞ்சும் மெல்லடியார் அடி யார்பெற்ற பாலரையே

மலர் அம்புகளும், நீண்ட கரும்பு வில்லும் கொண்டிருக்கும் அபிராமி வல்லியே! உன் தவநெறியே அன்றி அடைக்கலம் வேறு ஒன்றுமில்லை என நான் அறிந்தும் அவ்வழியில் முயன்று நடைபயில எண்ணவில்லை. பேதையரைப் போன்றவர்கள் இந்த செம்பஞ்சுக் குழம்பு ஒளிவீசும் பாதங்களை உடைய பெண்கள். இவர்கள்
தாம் பெற்ற குழந்தைகளைத் தண்டிக்க மாட்டார்கள். எனவே விரைந்து எனக்கு அருள்புரிவாய் அன்னையே!

ஆண் குழந்தை ப்ராப்த்தி உண்டாக

ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனமுன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும் செம்
முகனும்முந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனுமுண்டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே

அன்னையே அபிராமியே! விண்ணுலகும் மண்ணுலகும் அறியுமாறு அந்த மன்மதனை சிவன் எரித்தார். ஆனால், நீசெய்த அருள் செயலால் அப்பெருமானுக்கு  ஆறுமுகங்களும் ஈறாறு கரங்களும் உடைய ஞானக் குழந்தையே பிறந்தானே. என்னே உன் அன்பு !

குழந்தைப் பேறு உண்டாக

தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம்திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மையம்மை
நாமம் திரிபுரை ஒன்றோ டிரண்டு நயனங்களே

திருபுரை என்னும் பெயரும் கொண்டவள் அபிராமி. அன்னையின் நெற்றிக் கண்ணும் பிற இரண்டு கால்களும் நான்கு கைகளும் செந்நிறங் கொண்டன. மாலையோ கடம்ப மாலை. படையோ பஞ்ச பாணங்கள். வில், கரும்பு, தேவியை வணங்கும் நேரமோ பைரவர்க்குரியதான நள்ளிரவு. அந்த அன்னை எனக்கென வைத்த செல்வமோ தாமரைத் திருவடிகள்.

கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கி வாழ

வருந்தா வகை என் மனத்தா
மரையினில் வந்துபுகுந்து
இருந்தாள் பழைய இருப்பிட
மாக இனிஎனக்குப்
பொருந்தா தொருபொருள்
இல்லைவிண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தா
னதைநல்கும் மெல்லியலே

திருபாற்கடலிலே தோன்றிய அமிர்தத்தைத் திருமால் தேவர்களுக்கு வழங்கிடக் காரணமாக இருந்த அபிராமவல்லி, யான் பிறந்தும் இறந்தும் வருந்தாமல் என் இதயத் தாமரையில் எழுந்தருளித் தமது பிறப்பிடமாக எண்ணி உறைவிடமாக உறைந்தருளினாள். எனவே, இனி உலகில் எனக்கு வந்தமையாத செல்வம் ஏதுமுண்டா?

கல்யாண சித்தி பெற மந்திரம்

வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றவும். தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல், ஓர் ஊது பத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும். விளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும். இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும். அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும்.

மந்திரம்

ஓம் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வர நமஹ !
ஓம் லட்சுமி நாராயணாய நமஹ !
ஓம் வல்லி தேவ சேனா சுப்பிரமணியாய நமஹ !
ஓம் ஐம் ஹ்ரீம் யோகினி !
சித்தி சுந்தரி, கௌரி, அம்பிகே ! யோக பயங்கரீ !
சகல ஸ்தாவர ஜங்கம மூக ஹ்ருதயம்
மம வசம் ஆக்ருஷ்ய சுவாஹா !

தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்

சந்தான பிராப்தி இந்த மந்திரத்தின் குறிக்கோளாகும். புத்திர தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு உபதேசம் செய்து வைக்கலாம். உபதேசம் செய்து வைப்பவர் இந்த மந்திரத்தை பாராயணம் செய்திருக்க வேண்டும். தனுர் ராசி உபாசகர்களுக்கு மிக்க பலன் தரும் மந்திரம். முதலில் 18 முறை வீதம் 18 நாட்கள் ஜெபம் செய்ய வேண்டும். பின் 54 நாட்கள், 54 முறை வீதமும், பின் 108 நாட்கள் வரை 54 முறை வீதமும் ஜெபம் செய்ய வேண்டும். முழு ஜெபத்தையும் தோஷ பரிகாரமாகத் தர்ப்பணம் செய்துவிட வேண்டும். அதன்பின் 108 வீதம் தொடர் ஜெபம் செய்து அதன்பின் சங்கல்ப சங்கியை அல்லது அக்ஷரலக்ஷம் நிறைந்ததும் பாராயணம் செய்ய வேண்டும்.

இதனை புன்னை மரத்தடியில் ஜெபம் செய்வது சிறப்பு. கோமடம், துளசி வனம் போன்ற இடங்களும் ஜெபம் செய்ய ஏற்ற தலமாகும். ஜெபம் செய்ய கிழக்கு, வடக்கு திசைகள் சிறப்பு. காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் வடக்கு திசை நோக்கியும் ஜெபம் செய்ய சித்தி கிடைக்கும். பிரம்ம முகூர்த்தம் முதல் சூரியோதயம் வரை ஜெபம் செய்ய ஏற்ற காலம்.

அஸ்ய ஸ்ரீ ஸந்தான கோபாலகிருஷ்ண மஹா
மந்த்ரஸ்ய பகவான் நாரத ருஷி: அனுஷ்டுப்
சந்த: ஸ்ரீதேவகீஸுதோ தேவதா
க்லாம்-பீஜம், க்லீம்: சக்தி : க்லூம் கீலகம்
மம ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ண-ப்ரஸாத-
த்வாரா ஸத்சந்தான-ஸித்தயர்த்தே ஜபே விநியோக:
க்லாம்-க்லீம்-க்லூம்-க்லைம்-க்லௌம்
க்ல: இதி கரந்யாஸ: அங்க ந்யாஸச்ச
பூர்ப்பு வஸ்ஸுவரோமிதி திக்பந்த: த்யானம்
த்யாயாமி பாலகம் கிருஷ்ணம் மாத்ரங்கே ஸ்தன்ய பாயினம்
ஸ்ரீ வத்ஸ வக்ஷஸம் காந்தம் நீலோத் பல - தலச்சவிம்
லம்-இத்யாதி பஞ்சபூஜா

மந்திரம்

ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லௌம்-தேவகீசுத
கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே
தனயம் க்ருஷ்ண த்வா மஹம் சரணம் கத:
ஹ்ருதயாதி-ந்யாஸ
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்விமோக
த்யானம் பஞ்சபூதா ஸமர்ப்பணம்

நரசிம்ம மந்திரம்

அஸ்யஸ்ரீ ந்ருஸிம்மாநுஷ்டுப் மஹா மந்த்ரஸ்ய
ப்ரும்மா ருஷி: அநுஷ்டுப்ச்சந்த்:
ஸ்ரீ லக்ஷ?மீ ந்ருஸிம்மகோ தேவதா-ஸ்ரீ லக்ஷ?மீ
ந்ருஸிம்ம ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:
உக்ரம் வீரம் - அங்குஷ்டாப்யாம் நம
மஹா விஷ்ணும்-தர்ஜனீப்யாம் நம
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்-மத்ய மாப்யாம் நம
ந்ருஸிம்மம் பீஷணம்-அநாமிகாப்யாம் நம
பத்ரம் ம்ருத்யூம்ருத்யும்-கநிஷ்டிகாப்யாம் நம
நமாம்யஹம்-கரதலகரப்ருஷ்டாப்யாம் நம
உக்ரம் வீரம்-ஹ்ருதயாய நம
மஹாவிஷ்ணும்-சிரஸே ஸ்வாஹா
ஜ்வலந்தம் ஸர்வ தோமுகம்-சிகாயை வஷட்
ந்ருஸிம்மம் பீஷணம்-கவசாய ஸும்
பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும்-நேத்ராத்யாய வெளஷட்
நமாம்யஹம்-அஸ்த்ராய பட்
ஓம் பூர்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

தியானம்

மாணிக்யாதி ஸமப்ரபம் நிஜருஜா ஸந்த்ராஸ்ய
ர÷க்ஷõகணம்: ஜாநுந்யஸ்த கராம்புஜம்
த்ரிநயனம் ரத்நோல்லஸத் பூஷணம்
பாஹுப்யாம் த்ருத சங்க சக்ர மநிசம் தம்ஷ்ட்ரோக்ர
வக்த் ரோஜ்வலம்: ஜ்வாலா ஜிஹ்வ முதக்ர
கேச நிவஹம் வந்தே ந்ருஸிம்மம் விபும்
லம்-பிருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி
அம்-ஆகாசாத்மனே புஷ்பாணி ஸமர்ப்பயாமி
யம்-வாய்வாத்மனே தூபமாக்ராபயாமி
ரம்-வஹ்னி யாத்மனே தீபம் தர்சயாமி
வம்-அம்ருதாத்மனே அம்ருதம் நிவேதயாமி
ஸம்-ஸர்வாத்மனே ஸர்வோபசாரான் ஸமர்ப்பயாமீ

மூலமந்திரம்
உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம்
ஸர்வதோ முகம்! ந்ருஸிம்மம் பீஷணம்
பத்ரம் மிருத்யு மிருத்யும் நமாம்யஹம்

துக்கம் விலக மந்திரம்

துர்க்காம் மேஹ்ருதயஸ்திதாம் நவநவாம் தேவீம் குமாரீமஹம்
நித்யம் ஸர்வபயேன பக்திபரித: ஸூக்தேயதாம்னாயதே
துர்க்காம் தேவீம் சரணமஹம் ப்ரபத்யே மந்த்ரம் ஸதா ஸ்ருத் க்ருதான்
அஸ்மான் ரக்ஷணதீக்ஷ?தாம் ஸுமஹதீம் வந்தே ஜகன்மாதரம்

துர்க்கை அம்மா என் உள்ளத்தில் குமாரியாக இருக்கிறாள். அவளை பயபக்தியுடன் சொன்னபடி துர்கா தேவி அம்பாளை சரணடைகிறேன் என்ற மந்திரத்தை ஹ்ருதயத்திலேயே ஜபித்துக் கொண்டிருக்கும் எங்களை ரக்ஷ?ப்பதிலேயே முக்கியமான கருணையுடன் இருக்கும் மஹாதேவி ஜகன்மாதாவை சரணம் அடைகிறேன். இந்த நவதுர்கா ஸ்லோகம் துர்க்காம் என்று ஆரம்பித்து வந்தே ஜகன்மாதரம் என்று முடிக்கும். இதைப் பாராயணம் செய்பவர்களுக்கு கஷ்டம், நோய், துக்கம் வராது என்பது சத்யம்.

சௌபாக்கிய லட்சுமி

ஸெளமங்கல்யாம்பீப்ஸிதா: பதிமதீ:
ஸெளந்தர்ய ரத்னாகரா:
பர்த்தாஸங்கமுபேயுஷீ: ஸுவஸனீ:
ஸீமந்தனீஸ் ஸுப்ரியா:
ப்ரேம்ணா புத்ரகிருஹாதி பாக்யவிபவை:
ஸம்யோஜ்ய ஸம்ரக்ஷதீம்
ஸ்ரீ விஷ்ணுப்ரியகாமினீம் சுபகரீம்
ஸெளபாக்ய லக்ஷமீம் பஜே

சௌமாங்கல்யத்தை விரும்பும் சுமங்கலிகள் சௌபாக்கிய லட்சுமிக்கு பிரியமானவர்கள். அவர்களை ப்ரேமையுடன் குழந்தைகளையும், வீடு, தோட்டம், வாகனம், ஐஸ்வரியம், ஆரோக்கியம், மாங்கல்யம் முதலாக கொடுத்து ரட்சிக்கும் ஸ்ரீ விஷ்ணுவிடம் அதிகமாக ஆசை வைத்திருக்கும் லட்சுமிதான் சௌபாக்கிய லட்சுமி அம்மாளை ஜெபிக்கிறேன்.

நன்றி: வன்னிவிநாயகர் புத்தக நிலையம், மதுரை.