Saturday, July 19, 2014

நெஞ்சம் கொதிக்கின்றது

என் தசைகள் துடித்தன என்னையும் மீறி
இதயம் படபடத்தது எல்லையை தாண்டி
கைகள் உணவைத் தொட மறுத்தன பசியையும் மீறி
கண்கள் மூட மறுத்தன நித்திரையை தாண்டி
எங்கோ உணவின்றி இறந்துபோன, 
மூன்று வயதுக்குழந்தையின் படத்தை
பத்திரிகையில் பார்த்தபோது....
உலகில் யார் யார்க்கு எது எது கிடைக்காவிடினும்,
உணவு அனைவருக்கும் கிடைக்கவேண்டும்.....